|
|||||
அரசின் அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதர் அடையாள அட்டை கட்டாயமல்ல - உச்ச நீதிமன்றம் !!! |
|||||
அரசின், அத்தியாவசிய சேவைகளை, பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமல்ல என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கே.எஸ். புட்டாசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில்,"ஆதார் அட்டை திட்டம், மக்கள் தாமாகவே முன்வந்து தங்களைப்பற்றிய விவரங்களை பதிவு செய்யும் திட்டம் என அரசு கூறினாலும், திருமணப்பதிவு உள்ளிட்ட இதர சேவைகளுக்கு மாநில அரசுகள் ஆதார் அட்டையை கட்டாயமாக்கியுள்ளது. சமீபத்தில் மகாராஷ்ட்ரா அரசு கூட ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்களின் திருமணம் பதிவு செய்யப்படாது என அறிவித்துள்ளது. இது இந்திய அரசியல் சாசனத்தின் 14 ஆவது பிரிவு ( சம உரிமை) மற்றும் 21 ஆவது பிரிவு ( சுதந்திர வாழ்க்கைக்கான உரிமை) களுக்கு எதிரானது. எனவே ஆதார் அட்டை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
1. அத்தியாவசிய தேவைகளை அளிப்பதற்கு பொதுமக்களிடம் மத்திய, மாநில அரசுகள் ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் வேண்டும் என வலியுறுத்தக் கூடாது.
2. சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதார் அட்டையை வழங்கக்கூடாது.
3. ஆதார் அட்டையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருப்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். |
|||||
by Swathi on 23 Sep 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|