LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

டெல்லி முழுவதும் 2 லட்சம் கழிவறைகள், மின்சார கட்டணம் பாதியாக குறைப்பு - ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை !!

டெல்லி சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்டார்.

 

அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் :

 

ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், 15 நாட்களில் ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும். இதற்காகவே, டிசம்பர், 29ம் தேதி ராம்லீலா மைதானத்தில், பொதுமக்கள் முன்னிலையில், டில்லி மாநில சட்டசபைக் கூட்டம் நடத்தப்படும். முதல் நாளே, ஜன்லோக்பால் மசோதா, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

 

தற்போது டெல்லியில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு காரணம் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதே, இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட்டு, மின் கட்டணமும் 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படும். 

 

மக்கள் குடியிருக்கும் அங்கீகாரமற்ற காலனிகள் வரன்முறை செய்யப்படும்.

 

காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். 

 

ஆட்டோ கட்டணங்கள் திருத்தியமைக்கப்படும்.

 

பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் விரைவு நீதிமன்றங்களை உருவாக்கி, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

 

பொதுமக்கள், 50 லட்சம் பேருக்காக நகரம் முழுவதும் குழாய்கள் அமைக்கப்பட்டு, வீடுகளுக்கு தினமும் 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.

 

ஏழை மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகள் செய்து கொடுக்கும் வகையில் 2 லட்சம் கழிவறைகள், டில்லி முழுவதும் அமைக்கப்படும்.  

 

இவ்வாறு ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

by Swathi   on 20 Nov 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’ கேரள மாநில பள்ளி வரலாற்றுச் சாதனையாக இந்தியாவின் முதல் ஏஐ ஆசிரியை ‘ஐரிஸ்’
கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை. கைப்பேசியில் அழைப்பாளர் பெயரைக் காண்பிக்கும் சேவை வழங்க தொலைப்பேசி நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை.
செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..! செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகாப்டர் அனுப்பும் முயற்சியில் இந்தியா..!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.