LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- ஆம் ஆத்மி (AAM aadmi)

ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை -2014 நாடாளுமன்ற தேர்தல்

 

ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவது, தேர்தலில் போட்டியிடும் வயது 21 ஆக குறைப்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை.

மக்களவைத் தேர்தல் அறிக்கையை, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டார். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே முக்கிய வாக்குறுதி என்று அவர் குறிப்பிட்டார்.

ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* ஜன்லோக்பால் மசோதாவைக் கொண்டுவந்து ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம்.

* மக்களுக்கு நேரடி நன்மைகள் விளையும் வகையில் அதிகாரப் பகிர்வு மற்றும் தன்னாட்சி முறைக்கு முக்கியத்துவம் தரப்படும்.

* சாதாரண மக்களுக்கும் எளிதில் நீதி கிடைக்க வழிவகுக்கப்படும்.

* காவல் நிலையங்களில் உள்ள விசாரணை அறைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேர்தலில் போட்டியிடும் வயதை 25-ல் இருந்து 21 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார வசதிக்கு வழிவகுக்கப்படும்.

* அனைவருக்கும் கல்விக்கு முக்கியத்துவம்.

* கருப்புப் பணத்தை தடுப்பதற்கு புதிய வழிமுறைகள் கையாளப்படும்.

* சாதி ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளை முடிவுக்கு கொண்டுவருவோம்.

* ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.

* பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும்.

* டெல்லி காவல் துறையை டெல்லி அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

* உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* விவசாயிகள் தற்கொலையைத் தடுக்கும் வகையில், வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும்.

by Swathi   on 04 Apr 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி அரசியல் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி -ஜோதிமணி எம்பி
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள் நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.