LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- திருவாசகம்

ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம்

 

மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம் 
பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம் 
கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த 
என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாவே. 643 
என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன் 
உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன் 
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா 
தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே. 644 
சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித் 
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை 
மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக் 
கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே. 645 
கெடுவென் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய் 
படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே 
கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே 
நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே. 646 
தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய் 
நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே 
தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே 
நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ. 647 
கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே 
ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான் 
சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ 
தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே. 648 
நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப் 
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய் 
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே 
தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே. 649 

 

மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம் 

பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம் 

கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த 

என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாவே. 643 

 

என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன் 

உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன் 

பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா 

தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே. 644 

 

சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித் 

தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை 

மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக் 

கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே. 645 

 

கெடுவென் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய் 

படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே 

கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே 

நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே. 646 

 

தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய் 

நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே 

தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே 

நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ. 647 

 

கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே 

ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான் 

சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ 

தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே. 648 

 

நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப் 

பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய் 

அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே 

தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே. 649 

 

by Swathi   on 25 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.