|
||||||||
ஆன்மாவை உறங்க விடுங்கள் |
||||||||
இப் புவியுலகில் வாழ்ந்து மறைந்த பிரபலம் !
வாழ்ந்து முடிந்த பின்னும்
வாட்டி வதைப்பது ஏன்?
இறந்து போனது இயற்கையா/
செயற்கையா?
இந்த கேள்வி யாருக்கு?
விளம்பரத்துக்கா ? வியாபாரத்துக்கா ?
மருந்துகளால் பல கொடுமைகள்
பட்ட பின்னும் எத்தனை கேள்விக்குறிகள் ?
போகட்டும் விட்டு விடுங்கள்
ஊசிகளால் துளை போட்ட
அந்த உடலை ஊகங்களால்
மீண்டும் மீண்டும் துளையிடாதீர்கள்
ஒவ்வொருவரும் புலனாய்வு என்று
கிளம்பி விடாதீர்கள்
இனியாவது அந்த ஆத்மா உறங்கட்டும்
இருக்கும்போது எத்தனையோ கருத்து
வேறுபாடுகள் இருந்தாலும் !. |
||||||||
Sleep the "AANMA" | ||||||||
by Dhamotharan.S on 01 Jan 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|