LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

ஆன்மீகமும் மனித நேயமும்

 உலகில்

 

ஆன்மிக மக்கள்

 

கூட்டம்  கூடும் –அங்கு  

 

மனிதநேயம் வளர முடியாமல்

 

தள்ளாடுகின்றன !

 

 

 

உலகில்

 

ஆன்மிகம் மனிதநேயம்

 

இரண்டு கண்கள்

 

எண்ணிப்பார்த்தால்

 

எல்லாமே சுயநலம்தான்’ !

 

 

 

உலகில்

 

ஆன்மீகத்திற்கும்

 

ஆரவாரமான

 

ஆர்ப்பாட்டக்கூட்டம் !

 

 

 

ஆன்மீகம் அறிய

 

தெளிவுரைக் கேட்டால்

 

கலங்கிய குட்டைபோல்  

 

உள்ளத்தைக் குழப்பி

 

தள்ளாட வைக்கிறது !

 

 

 

தற்போது

 

கோவில் குளம்

 

ஆன்மிகமென

 

ஒரு கூட்டம் கூடுகிறது !

 

 

 

ஆடு கோழி பலியிட்டு

 

உயிரிரக்கம் தலையிலும்

 

ஒரு பெருங்கூட்டம்

 

மண்ணைப் போடுகின்றது !

 

 

 

ஆன்மீக நதிகள்

 

பலவழிகளில்

 

சில்லிட்டு ஓடினாலும்

 

அன்பு என்னும்

 

பெருங்கடலை

 

அடையவே ஓடுகிறது !

 

 

 

மனிதநேயம் எல்லை

 

விரிவானவை

 

முடிவில்லாதவை

 

 

 

மனிதநேயம்

 

தன்னை வெளிப்படுத்த

 

ஆன்மீகத்துடன்

 

கை கோர்ப்பவை

 

 

 

ஆன்மீகம்

 

வெளிப்படையானவை

 

மனிதநேயம்

 

அமைதியானவை !

 

- கவிதை by : பூ.சுப்ரமணியன்

by Subramanian   on 29 May 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.