LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

ஆரம்பம் - திரைவிமர்சனம் !!

நடிகர் : அஜீத், ஆர்யா

 

நடிகைகள் : நயன்தாரா, டாப்சி 

 

இயக்கம் : விஷ்ணுவர்தன்

 

தயாரிப்பு : ஏ.எம் ரத்தினம்

 

இசை : யுவன் சங்கர் ராஜா

 

படத்தின் ஆரம்பமே மும்பையில் மூன்று இடங்களில் குண்டு வெடிக்கிறது. இந்த குண்டுகளை வைத்தது யார் தெரியுமா? தல அஜீத்தான். கம்ப்யூட்டர் ப்ரோக்கிராமில் கில்லாடியாக வரும் ஆர்யா, தன் காதலி டாப்சிக்காக வெளிநாட்டு வேலைகளை உதறி தள்ளிவிட்டு சென்னையே கதியென்று கிடக்கிறார். ஆர்யாவை ஒரு நாசவேலைகாக, திட்டம் போட்டு தூக்குகிறது அஜித் டீம். இவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்து தோற்றுப் போகும் ஆர்யாவாவின் சாமார்த்தியத்தால் ஒரு கட்டத்தில் அஜித் போலீசாரின் கையில் சிக்கிக் கொள்கிறார். இறுதியில் போலீசில் சிக்கிய அஜீத் என்ன ஆனார்? அஜீத் மும்பையில் குண்டுவைக்க காரணம் என்ன? என்பதை அரசியல்வாதிகளின் ஊழலை மையப்படுத்தி விறுவிறுப்பாக சொல்வதுதான் மீதி கதை.

 

படம் தொடங்கியதும், மும்பையில் குண்டுவெடிப்பு நிகழ, அப்போதே படத்தில் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. பிறகு ஆர்யா அறிமுகம் படத்தை சுலோவாக்கினாலும், அஜீத்திடம், ஆர்யா மாட்டிக்கொள்ளும் போது படம் மீண்டும் விறுவிறுப்படைகிறது.

 

துவக்கத்தில் குண்டு வைப்பது, தேவையில்லாமல் சுட்டு தள்ளுவது, குழந்தைகளை வைத்து பெற்றோர்களை மிரட்டுவது என அஜீத் டெரர்ரான கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும், அவை எல்லாமே சரிதான் என்பதை நம்மை ஒத்துக் கொள்ள வைத்திருக்கும்படியான திரைக்கதையை அமைத்திருக்கிறார் விஷ்ணுவர்தன்.

 

படம் துவங்கியதிலிருந்து சில மணித்துளிகள் வருவது அஜித்தா என்று நம்பவே முடியவில்லை. மங்காத்தா அளவுக்கு ஸ்டைலிஷாக படம் முழுவதும் அஜித் வலம்வரவில்லை என்றாலும் கதாபத்திரத்திற்கு ஏற்றாற் போல் வந்திருக்கிறார்.

 

அஜீத் கூடவே இருக்கும் நயன்தாரா, ரொம்ப வெயிட்டான ரோலை அசால்டாக செய்திருக்கிறார். அதிலும் வில்லனை சிறைவைக்கும் காட்சியில், தியேட்டரில் படம் பார்ப்பவர்களின் பல்ஸை எகிறவைத்திருக்கிறார்.

 

ஆர்யாவும், டாப்சியும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். உள்துறை அமைச்சராக வரும் மகேஷ் மஞ்ச்ரேகர், தனது முகபாவனைகளாலும், நடிப்பாலும் சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸில் அமைச்சருடன் பேசும் காட்சி வசனங்களில் அரசுகளின் ஊழலை பின்னி பெடல் எடுத்துவிடுகிறார்கள்.

 

யுவன் இசையில் பாடல்களை பிரமாண்டமாக படம் பிடித்திருக்கிறார்கள். பின்னணி இசை சொல்லவே தேவையில்லை..

 

இந்த படம், அஜீத் ரசிகர்களுக்கு நல்ல தீபாவளி பரிசாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் ஊழல் செய்த அரசியல்வாதிகளை கிழி கிழியென கிழித்திருப்பது படத்திற்கு சபாஸ் சொல்ல வைக்கிறது.

 

மொத்தத்தில் "ஆரம்பம்" தீபாவளிக்கு சரவெடி வசூல்தான்.....

Aarambam Ajith with Arya Still
by Swathi   on 31 Oct 2013  1 Comments
Tags: Aarambam   Aarambam Review   Aarambam Movie   ஆரம்பம்   ஆரம்பம் விமர்சனம்        
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
ரஜினி - அஜீத்தின் சாதனையை முறியடித்த விஜய் !! ரஜினி - அஜீத்தின் சாதனையை முறியடித்த விஜய் !!
ஆரம்பத்தில் அக்ஷய் குமார்.... வீரத்தில் சல்மான் கான்..... பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜீத் படங்கள்  !! ஆரம்பத்தில் அக்ஷய் குமார்.... வீரத்தில் சல்மான் கான்..... பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அஜீத் படங்கள் !!
தளபதி படத்தை அடுத்து, தல படத்தை ரீமேக் செய்ய விரும்பும் அக்ஷய் குமார் !! தளபதி படத்தை அடுத்து, தல படத்தை ரீமேக் செய்ய விரும்பும் அக்ஷய் குமார் !!
ஆரம்பம் இது வரை 50 கோடி வசூல் !! ஆரம்பம் இது வரை 50 கோடி வசூல் !!
ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா படத்தயாரிப்பளர்கள் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரைடு !!! ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா படத்தயாரிப்பளர்கள் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரைடு !!!
ஆரம்பம் - திரைவிமர்சனம் !! ஆரம்பம் - திரைவிமர்சனம் !!
ஆரம்பம் திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !! ஆரம்பம் திரைப்படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் !!
கருத்துகள்
31-Oct-2013 23:06:17 Mugesh Babu said : Report Abuse
தல படத்த முதல் காட்சி பாக்க முடியவில்லை என்றால் என் தலை போயிடும். ஆரம்பம் தல கலக்கல் காட்சிகள் அதிரடி தீபாவளி சரவெடி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.