LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் !”

 

காதல் இல்லாத திரைப்படங்களும், டூயட் பாடாத ஹீரோக்களும் இல்லையென்றே சொல்லலாம். உண்மையான காதல் என்று திரைப்படங்கள் கூறும் காதலை, கைதட்டி கண்ணீர்விட்டு ரசிக்கும் நாம், நிஜ வாழ்க்கையில் காதல் என்ற உணர்வை எந்த அளவிற்கு உணர்கிறோம்? தமிழ் பழமொழி சொல்வதுபோல், அறுபதே நாட்களில் முடிந்துவிடக் கூடியதா காதல்? சத்குருவின் வித்தியாசமான கண்ணோட்டம் இங்கே!
சத்குரு:
இந்த இடத்தில் ஆசை என்று காதலைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
அப்பழுக்கில்லாத அன்பை மட்டுமே செலுத்துவதுதான் உண்மையான காதல். காதல் என்பது அன்பின் வடிவம். அதுதான் மனிதனை பல்வேறு இடங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. தான் விரும்புபவர் அந்தக் காதலை உணர்ந்து பாராட்டுகிறாரா, இல்லையா என்பதற்கு அப்பாற்பட்ட ஒருவித இதய உணர்வு அது. காதல் என்பது நிபந்தனைகள் அற்றது.
நீங்கள் ஒரு நபரைக் காதலிக்கிறீர்கள் என்றால், அறுபது நாளில் நிகழும் அவருடைய ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து உங்கள் காதல் மாறுவதில் அர்த்தமில்லை.
துடிப்பும் துள்ளலுமாக, சிரிப்பும் சந்தோஷமுமாக இருக்கும் பல காதலர்கள் திருமணம் செய்து கொண்டபின், அசுர வேகத்தில், களை இழப்பதற்குக் காரணம் என்ன? யாரைப் பற்றிய நினைப்பே ஆனந்தம் கொண்டு வந்ததோ, அவர்களின் அருகாமையே இப்போது எரிச்சலாக மாறுவது ஏன்?
காதல் வயப்பட்டிருந்தபோது, அந்த உணர்வு மட்டுமே மேலோங்கியிருந்தது. இதயம் மட்டுமே வேலை செய்தது. இருவர் வாழ்க்கையும் பிணைந்தபின், அங்கே எதிர்பார்ப்புகள் கூடிவிட்டன. ‘நான் இதைத் கொண்டு வருகிறேன்; நீ அதைக் கொண்டு வா’ என்ற வணிகம் நுழைந்துவிட்டது.
திருமணம் என்பது, இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு, வாழ்க்கையை ஆனந்தமாக்கிக் கொள்ள ஏற்பட்ட அமைப்பு. அதை மறந்து, அடுத்தவரிடம் என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கணவன் மனைவி உறவு அமைந்தால், வாழ்க்கை கொந்தளிப்புகள் நிறைந்ததாகிவிடும். கோர்ட் வரை போகாவிட்டாலும், குடும்ப அளவிலேயே திருமணம் தோற்றுவிடும்.
ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இருவருக்கும் இடையில் அன்பு மட்டும் தீவிரமாக மலர்ந்திருந்தால், வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் விழுந்தாலும் காயப்படாமல் அறுபது நாளென்ன, அறுபது வருடங்களானாலும் சுகமாக மிதந்து பயணம் செய்ய முடியும்.

காதல் இல்லாத திரைப்படங்களும், டூயட் பாடாத ஹீரோக்களும் இல்லையென்றே சொல்லலாம். உண்மையான காதல் என்று திரைப்படங்கள் கூறும் காதலை, கைதட்டி கண்ணீர்விட்டு ரசிக்கும் நாம், நிஜ வாழ்க்கையில் காதல் என்ற உணர்வை எந்த அளவிற்கு உணர்கிறோம்? தமிழ் பழமொழி சொல்வதுபோல், அறுபதே நாட்களில் முடிந்துவிடக் கூடியதா காதல்? சத்குருவின் வித்தியாசமான கண்ணோட்டம் இங்கே!


சத்குரு:


இந்த இடத்தில் ஆசை என்று காதலைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.


அப்பழுக்கில்லாத அன்பை மட்டுமே செலுத்துவதுதான் உண்மையான காதல். காதல் என்பது அன்பின் வடிவம். அதுதான் மனிதனை பல்வேறு இடங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. தான் விரும்புபவர் அந்தக் காதலை உணர்ந்து பாராட்டுகிறாரா, இல்லையா என்பதற்கு அப்பாற்பட்ட ஒருவித இதய உணர்வு அது. காதல் என்பது நிபந்தனைகள் அற்றது.

நீங்கள் ஒரு நபரைக் காதலிக்கிறீர்கள் என்றால், அறுபது நாளில் நிகழும் அவருடைய ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து உங்கள் காதல் மாறுவதில் அர்த்தமில்லை.


துடிப்பும் துள்ளலுமாக, சிரிப்பும் சந்தோஷமுமாக இருக்கும் பல காதலர்கள் திருமணம் செய்து கொண்டபின், அசுர வேகத்தில், களை இழப்பதற்குக் காரணம் என்ன? யாரைப் பற்றிய நினைப்பே ஆனந்தம் கொண்டு வந்ததோ, அவர்களின் அருகாமையே இப்போது எரிச்சலாக மாறுவது ஏன்?


காதல் வயப்பட்டிருந்தபோது, அந்த உணர்வு மட்டுமே மேலோங்கியிருந்தது. இதயம் மட்டுமே வேலை செய்தது. இருவர் வாழ்க்கையும் பிணைந்தபின், அங்கே எதிர்பார்ப்புகள் கூடிவிட்டன. ‘நான் இதைத் கொண்டு வருகிறேன்; நீ அதைக் கொண்டு வா’ என்ற வணிகம் நுழைந்துவிட்டது.


திருமணம் என்பது, இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு, வாழ்க்கையை ஆனந்தமாக்கிக் கொள்ள ஏற்பட்ட அமைப்பு. அதை மறந்து, அடுத்தவரிடம் என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கணவன் மனைவி உறவு அமைந்தால், வாழ்க்கை கொந்தளிப்புகள் நிறைந்ததாகிவிடும். கோர்ட் வரை போகாவிட்டாலும், குடும்ப அளவிலேயே திருமணம் தோற்றுவிடும்.


ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இருவருக்கும் இடையில் அன்பு மட்டும் தீவிரமாக மலர்ந்திருந்தால், வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் விழுந்தாலும் காயப்படாமல் அறுபது நாளென்ன, அறுபது வருடங்களானாலும் சுகமாக மிதந்து பயணம் செய்ய முடியும்.

by Swathi   on 29 Mar 2014  0 Comments
Tags: Desire   Crazy   Sixty Days   Thirty Days   Sadhguru   ஆசை   மோகம்  
 தொடர்புடையவை-Related Articles
சாகும் ஆசை.... சேயோன் யாழ்வேந்தன் சாகும் ஆசை.... சேயோன் யாழ்வேந்தன்
பக்தி பற்றி சத்குரு ! பக்தி பற்றி சத்குரு !
விவாகரத்து சரியா? விவாகரத்து சரியா?
கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை
“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் !” “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் !”
70வது வயதில் 90 கி.மீ ஓட்டம் ! 70வது வயதில் 90 கி.மீ ஓட்டம் !
வாழ்க்கையை விளையாடிப் பார்க்கிறேன் ! – சத்குரு வாழ்க்கையை விளையாடிப் பார்க்கிறேன் ! – சத்குரு
சத்குருவைப் பார்க்கும்போது கண்ணீர் வந்தால்…? சத்குருவைப் பார்க்கும்போது கண்ணீர் வந்தால்…?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.