LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF
- மழலை பாடல்கள்

ஆற்று தண்ணீரே எங்கே ஓடுகிறாய் ?

ஆற்றில் ஓடும் தண்ணீரே !யாரை தேடி ஒடுகிறாய் ?

என் அன்னையை தேடி ஓடுகிறேன்.

ஓடும் போது நீ, சுழன்று சுழன்று செல்வது ஏன்?

என்னை தடுக்கும் இடத்தில் சுழன்று சுழன்று செல்வேன்.

உன் அன்னை என்பவள் யார்?அவள் எங்கே இருக்கிறாள்?

பரந்து விரிந்து கிடக்கும் கடல்தான் என் அன்னை.

இங்கு வந்து பிறந்து, ஏன் அன்னையை தேடி ஓடுகிறாய்?

மீண்டும் மீண்டும் பிறக்க, அன்னையை தேடி ஓடுகிறேன்.

மீண்டும்,மீண்டும், எப்படி பிறப்பாய்?

சூரிய கதிரின் வேகத்தால் அன்னையிடம் ஆவியாகி,

வானில் மிதக்கும் மேகத்துடன் சேருவேன்.

அங்கிருந்து மீண்டும், தரையை நோக்கி வருவேன்.

வந்து சேர்ந்து கூடி, அன்னையை பார்க்க நகர்வேன்.

போகும் பாதை முழுவதும் குடிக்க தண்ணீர் தருவேன்

காடு வயல் யாவையும் பசுமையாக்கி தருவேன்.

கிணறு குளம் யாவையும் நீரை நிரப்பி தருவேன்

என்னை தடுத்து சேர்த்து வைத்தால் மின்சாரம் கூட தருவேன்

உலக உயிர்கள் அனைத்துக்கும் நானே உயிராய்

இருந்திடுவேன்.

Where are you going river?
by Dhamotharan.S   on 11 Aug 2016  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பறவைகள் சரணாலயம் பறவைகள் சரணாலயம்
முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள் முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள்
உயர பறந்திடுவோம் உயர பறந்திடுவோம்
ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே
சூரிய அண்ணனின் கோபம் சூரிய அண்ணனின் கோபம்
எப்பொழுது பள்ளி செல்வோம் ? எப்பொழுது பள்ளி செல்வோம் ?
அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா
பயணம் செய்தால் பயணம் செய்தால்
கருத்துகள்
19-Aug-2016 00:17:37 இளங்கோ said : Report Abuse
பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்ல இது ஒரு சிறந்த வலை தளம். மிக அருமை.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.