|
||||||||
ஆட்டுக்குட்டி ஆனாலும்....ஆலமரமானாலும்..... |
||||||||
" வெள்ளிக் கிழமை வந்தாலே இந்த பெண்ணிற்கு தலை கால் புரியாது. " என்ற அலுவலக நண்பர் கிண்டலை நான் அலுவலகத்தில் நுழைம்போதே கேட்டேன். எரிச்சல் வரவில்லை.கைப் பையை மேஜையில் வைத்து விட்டு கை எழுத்திட மேல் அதிகாரி அறை சென்றேன். " காவேரி , இந்த பைலை நன்றாக படித்து அக்கௌன்டன்ட் ஸ்ரீ ராமுடன் கலந்து ஆலோசித்து தயார் நிலையில் வைத்து கொள்ளவ்கொள்ளவும். பார்ட்டி 4 மணிக்கு வருவார்கள்" என்று மேனேஜர் என்னிடம் பைலைக் கொடுத்தார். அறையில் நுழைந்த ஸ்ரீ ராம் , "இன்று வெள்ளிக் கிழமை, காவிரியை விட்டு விடுவோம், நானே பார்த்து கொள்கிறேன்" என்னிடம் பைலை வாங்கிக் கொண்டார். எனக்கு கோபமே வரவில்லை. என் இடத்திற்கு அமைதியாக வந்தேன். வெள்ளிகிழமை என்ன விசேஷம் என்று எல்லோருக்கும் தோன்றலாம். விசேஷம் என்று சொல்ல முடிய விட்டாலும் விஷயம் உண்டு. நான் வாராவாரம் வெள்ளிக் கிழமை மாலை சிவாவை சந்திப்பேன். சிவாவை நான் விரும்புகிறேன். அவரும் என்னை விரும்புகிறார். விரைவில் திருமணம் நடக்கும். அதனால் இந்த கேலி , கிண்டல் , விமர்சனங்கள் என்னைக் கோபப் படுத்துவது இல்லை. மாறாக இவற்றைக் கேட்கவே ஒரு சுகம். இவை இல்லாது போனால் கேலி செய்ய மாட்டர்களா என ஏங்கிப் போய்விடுவேன். சிவாவை நான் சந்தித்ததே தற்செயல்தான். ஒரு நாள் நான் ஆர்யா பவனில் காபி அருந்திக் கொண்டு இருந்த பொழுது அடுத்த மேகையில் இவர் டிபன் சாப்பிட்டு கொண்டு இருந்தார். குழப்பத்தில் முக்கியாமான ஆபீஸ் டாகுமென்ட்ஸ்களை விட்டுவிட்டு போய்விட்டார். நான் அவர் ஆபீஸ் தேடி போய் அவற்றை அவரிடம் கொடுக்க, ஏற்பட்ட பழக்கம். வெள்ளிகிழமைகளில் ஆர்யா பவனில் சந்திக்க தொடங்கினோம். அவர் தன் பிரச்சனைகளை சொல்வார், புலம்புவார்.. என் பதில் எதுவானாலும் .அவர் தீர்வு கிடைத்து போல் உணர்வார். அவருக்கு குடும்பத்தில் ஒரே பண பிரச்சனைகள். நான் ஒன்றும் பணக்காரி இல்லை. என் வீட்டிலும் கஷ்ட நஷ்டங்கள் உண்டு. அவரிடம் முறையிட எனக்கு தோன்ற வில்லை. நான் அவர் துன்பங்களுக்கு வடிகால் என அவர் நினைத்து இருக்கும் பொழுது என் துன்பங்களை சொல்ல என் இறுமாப்பு இடம் கொடுக்கவில்லை. சிவாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் நான் அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் அவதாரமாக என்னை நினைத்துக்கொண்டேன். சிவாவை இந்த இன்னல்களிலிருந்து மீட்டு செல்லமாக வைத்து கொள்ள வேண்டும் என்று என் மனம் சொல்லிக்கொண்டே இருக்கும். எனக்கு அவர் தேவையோ இல்லையோ அவருக்கு நான் தேவை என்று உணர தொடங்கினேன். அது உண்மைதான். சிவா அடிக்கடி என்னிடம் " கிருஸ்த மதத்தில் பாதிரியாரிடம் பாவங்களை சொன்னால் மன்னிப்பு கிடைக்கும். என் பிரச்சனைகளை இந்த காவேரியிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும்." சொல்வார். நாளாக நாளாக சின்ன சின்ன விஷயங்களுக்குகூட என் ஆலோசனையைத் தேட ஆரம்பித்துவிட்டார். இதில் எனக்கு ஒரே மகிழ்ச்சி. சிவா என் ஆட்டுக்குட்டி என நினைக்க தொடங்கிவிட்டேன்.
நேரம் ஆக ஆக என் இழப்பின் அதிர்ச்சி போய் சிவாவின் லாபம் கண்ணுக்கு தெரிய துவங்கியது. இந்த திருமணத்தால் சிவாவின் பண பிரச்சனைகள் தீரும். பிரச்சனைகள் இல்லாத சிவாவிற்கு ஒரு காவிரியே தேவை இல்லை துக்கம் நிறைந்த வாழ்வில் காவேரி சிவாவிற்கு ஒரு சுமைதாங்கி. துக்கமே இல்லாத வாழ்வில் காவேரி சிவாவிற்கு தேவை இல்லை. தெய்வம் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கொடுத்து இருக்க, நான் நல்லது சொல்லி இதை ஏற்க செய்யவேண்டும். என் சிவாவை நான் கரை ஏற்றவேண்டும். என் மனம் தெளிந்தது. அப்பாவின் இரண்டாம் கல்யாணத்திற்காக தன் வாழ்வை தியாகம் செய்த பீஷ்மர் நினைவு எனக்கு வந்தது. தெரிந்தே கிருஷ்ணருக்கு தானம் செய்த கர்ணன் நினைவு வந்தது. என் காதலை தியாகம் செய்ய முடிவு செய்தேன். மாலையில் சிவாவை சந்தித்து வரும் நல்வாழ்விற்கு வழி காட்ட வேண்டும்.வையாபுரி என் எதிரி அல்ல. ஆர்யா பவனில் சிவாவை சந்தித்த பொழுது ஏதோ சில்லறை பிரச்சனைகளைப் பற்றி புலம்பிக் கொண்டு இருந்தார். தங்க மாளிகை அவர் கதவைத் தட்டுவதை அவர் அறிந்து இருக்க வில்லை. விளையாட்டாக துவங்கி விவரமாக சொன்னேன். நான் என்னை கர்ணன் , பீஷ்மர் இவர்களுக்கு ஈடு என நினைத்துப் பார்த்தேன். சிவாவின் பதில் தெளிவாக வந்தது. " என் வீட்டில் பிரச்சனைகளை என்னால் முடிந்த அளவு தீர்ப்பேன். ஓஹோ என்று அவர்கள் வாழ வேண்டும் என்பதற்காக என் காதலியை விட்டு கொடுக்க மாட்டேன். திடீரென கிடைக்கும் அதிர்ஷட்டத்தில் அவர்கள் தலை கால் புரியாமல் வாழ்வார்கள். அதில் அர்த்தமில்லை. முடிந்தவரை நான் என் குடும்பத்திற்கு உதவுவேன். நம் கல்யாணம் நடந்தவுடன் நீயும் உன் குடும்பத்தை இரண்டாம் பட்சமாக்கு. நாம் இருவரும் நல்லபடியாக வாழ்வோம். நாம் நம் குடும்பங்களுக்கு உழைத்து போதும். நம் கல்யாணத்திற்கு உடனடியாக நாள் பார்போம். " சிவா என் முன் விஸ்வருபம் எடுத்த பெருமாளாக தெரிந்தார். நான் என் ஆட்டுக்குட்டியை அரவணைத்து கொண்டு இருப்பதாக நினைத்து இருக்க அவர் எனக்கு ஆலமர நிழலாக நிற்கிறார். ஆட்டு குட்டி ஆனாலும் ஆலமரமானாலும் அது என் சிவா தான்.
author: S Ramakrishnan |
||||||||
attukuttiyo... alamaramo | ||||||||
by Ramakrishnan on 03 Aug 2013 0 Comments | ||||||||
Tags: ஆட்டுக்குட்டி ஆலமரம் ராமகிருஷ்ணன் Ramakrishnan | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|