பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் கடந்த 1965களில் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்திற்கு விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர்.
இந்த படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி அகன்ற திரையில் மீண்டும் வெளியிட்டார் திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம். இப்போது படம் ஆல்பர்ட் காம்பளக்சிலும், சத்தியம் காம்பளக்சிலும் தினமும் ஒரு காட்சியாக 175 நாளை தொட்டுவிட்டது. புதிய படங்களால் கூட சாதிக்க முடியாததை ஆயிரத்தில் ஒருவன் மீண்டும் சாதித்திருக்கிறது.
இதனை அடுத்து, வருகிற 31ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை காமராஜர் அரங்கில் பிரமாண்ட விழா நடத்தி இந்த வெற்றியை கொண்டாட இருக்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.
|