LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு புதிய தலைப்பு !!

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான என்னை அறிந்தால் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், கவுதம் மேனன் உற்சாகத்துடன் தனது அடுத்த பட வேலைகளில் களம் இறங்கியுள்ளார்.

என்னை அறிந்தால் படத்தை இயக்குவதற்கு முன் கவுதம் மேனன் சிம்பு வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வந்தார். இந்த படத்திற்கு சட்டென்று மாறுது வானிலை என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. சிம்பு ஜோடியாக பல்லவி சுபாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சிம்பு படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் படத்தின் வேலைகளில் கௌதம் மேனன் பிஸியாகிவிட, இன்னொரு புறம் சிம்புவும் பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடிக்கப் போய்விட்டார்.

இந்நிலையில், என்னை அறிந்தால் படம் ரிலீஸானதையடுத்து சிம்புவின் படத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார் கௌதம் மேனன். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. மேலும் இப்படத்துக்கு எம்.ஜி.ஆர். பட பாடலான அச்சமென்பது மடமையடா என்ற தலைப்பை வைக்க ஆலோசனை செய்து வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிகின்றன.

by Swathi   on 09 Feb 2015  1 Comments
Tags: Acham Enbathu Madamaiyada   கவுதம் மேனன் - சிம்பு   அச்சமென்பது மடமையடா   Simbu and Gautham Menon           
 தொடர்புடையவை-Related Articles
கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு புதிய தலைப்பு !! கவுதம் மேனன் - சிம்பு படத்திற்கு புதிய தலைப்பு !!
எம்.ஜிஆர் பாடிய பாடல் வரிகள் சிம்பு படத்தின் டைட்டிலாகிறது !! எம்.ஜிஆர் பாடிய பாடல் வரிகள் சிம்பு படத்தின் டைட்டிலாகிறது !!
கருத்துகள்
13-Feb-2015 19:39:53 Sathish S said : Report Abuse
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.