LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அமில தாக்குதல் அஞ்சலி/கண்டனம் மற்றும் பேரணி அறிவிப்பு

அமில தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்த சகோதரி வித்யாவின் குடும்பத்தினருக்கு லோக் சத்தா கட்சி தன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது. அமில தாக்குதலுக்கு உள்ளான வினோதினியின் இழப்பின் துயரத்தில் இருந்து நாம் மீள்வதற்குள் நடந்த சம்பவம் இது. எங்கே இது போன்ற துர்சம்பவங்கள் தொடருமோ என்ற அச்சத்தை நமக்குள் ஏற்படுத்தும் விதமாக இந்த தாக்குதல் அமைகிறது. முக்கியமாக படிக்கும், வேலைக்கு செல்லும் பெண்களின் மனஉறுதியை குலைக்கிறது.
அமில தாக்குதல்களை குறைக்க அமிலம் சமூக விரோதிகளுக்கு எளிதில் கிடைக்காத வண்ணம் கட்டுப்படுத்த வேண்டும். இப்போது அமிலம் பொது சந்தையில் வெகு எளிதாக கிடைகிறது. அமில விற்பனையில் உரிமம் ஏற்படுத்தி நிஜமான தேவை உள்ளோர் மட்டுமே வாங்கும்படி செய்யலாம். மேலும் இது போன்ற சமூக விரோத செயல்கள் அமிலத்தை வைத்து செய்யப்பட்டால், அது முறையான உரிமம் இன்றி வாங்கப்பட்டிருக்குமாயின், அதை விற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும். அமில உற்பத்தி, பங்கீடு, விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும்.

இது தவிர அமில தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களும் பொறுப்புடன் செயல்பட்டு அவை உற்பத்தி செய்யும் அமிலம் சரியான முறையில் தான் பயன்படுத்தப்படுகிறதா என உறுதி செய்ய வேண்டும். அவை சேமித்து வைக்கபட்டிருக்கும் இடம், விற்பனை செய்யப்படும் இடம் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.

அமில தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதி ஆணையத்தின் 226-வது அறிக்கை மற்றும் வர்மா ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகள சட்டமாக்க வேண்டும். அதில் கூறப்பட்டிருப்பதை போல 326A மற்றும் 326B ஆகிய சட்டங்கள் நிறைவேற்ற பட்டு அமில தாக்குதலுக்கான தண்டனையை அதிகரிக்கவேண்டும்.

அமில தாக்குதலுக்கு உள்ளவோர் தன் வாழ்நாள் முழுவதும் உடலளவிலும் மனதளவிலும் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். அவர்களுக்கென வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டு அவர்களின் மருத்துவ செலவு, மறுவாழ்வு மற்றும் சட்ட ஆலோசனை ஆகியவற்றை இலவசமாக மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.

இதே வேளையில் இது போன்ற சம்பவங்கள் திரும்ப நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். இதற்கான அடிப்படை காரணம் நம் சமுதாயம் பெண்களை காட்சிப்பொருளாய் கருதுவதுதான். மகளிருக்கான சம உரிமையும் அவர்களின் மேம்பாடுமே சமுதாயத்தின் இந்த எண்ணத்தை மாற்றும்.

அமில விற்பனையை அரசாங்கம் கட்டுபடுத்த கோரியும், அமில தாக்குதல் வழுக்குகளை துரிதப்படுத்த, தண்டனையை அதிகரிக்க 326A மற்றும் 326B சட்டங்களை இயற்றக் கோரியும், மகளிர் மேம்பாட்டுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் லோக் சத்தா கட்சி, மார்ச் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 முதல் 8 மணி வரை மெரினா கடற்கரையில் பேரணி நடத்துகிறது. தவறாது கலந்து கொள்ளவும்.

இது போன்ற இன்னொரு சம்பவம் நிகழாமல் தடுப்பதே வினோதினி, வித்யா போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாம் செய்யும் நிஜமான அஞ்சலி.

Acid attack condolence and Rally for the cause

அமில தாக்குதல் அஞ்சலி/கண்டனம் மற்றும் பேரணி அறிவிப்பு
 The Lok Satta Party expresses its deepest condolences to the bereaved family of the acid attack victim Ms. Vidhya. This incident has happened even before we could console ourselves over the death of Vinodhini, an acid attack victim. These incidents instill a fear in us that these may continue and seriously undermine the morale of girl students and working women.

The availability of acids to anti-social elements should be reduced. Currently dangerous and concentrated acids are easily available in the open market. Licensing should be introduced in acid sales and we should make sure it is being sold only for legitimate purposes. If any attacks happen with unlicensed acids, the seller too should be punished for the same. The necessary steps to achieve the above should be initiated by the Government and should be implemented by the police. Acid manufacturers also should be responsible and should monitor the distribution, storage and sales of acids which they produced.

Punishments should be increased to those who are convicted in acid attack cases. The recommendations of 226th Law commission report and Justice Verma commission report on acid attacks should be implemented. Sections 326A and 326B, which recommends stringent punishments in acid attack cases should be included in IPC.

The victims in acid attacks undergo physical and mental sufferings throughout their lifetime. They isolate themselves from the society. The State and Central governments should form a corpus fund to provide them free medical support, rehabilitation support and legal support.

We should also contemplate on methods to prevent these types of untoward incidents in future. The psychology behind these incidents is the objectification of women by the society. Only gender equality and women empowerment would shatter this dogma.

The Lok Satta Party for the cause of demanding the government to control acid sales, implement 326A and 326B for speedy trails and stringent punishments and to spread awareness on women empowerment is organizing a rally on March 3rd, 2013 (Sunday) 7 AM to 8 AM in Marina beach. You are requested to support us for this cause by joining this rally.  

Preventing any such incidents in the future would be the true homage to Vinodhini and Vidhya.
Thanks,
N.Narayanan
Spokesperson,
Lok Satta Party, Tamilnadu
Mobile: +91 9791050517

by Swathi   on 27 Feb 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு. குற்றாலம் ஐந்தருவி அருகே பழமையான குகை; மருந்து ஆய்வுக்கூடம் கண்டுபிடிப்பு.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு! கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு!
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு. உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள். தமிழகத்தில் கட்சி தொடங்கிய நடிகர்கள்.
தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. தென்காசியில் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்! மலிவு விலையில் அம்பேத்கர் நூல்கள் வழங்கத் தமிழக அரசுத் திட்டம்!
பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை பழநி அருகே கண்டறியப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான தடுப்பணை
இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல். இந்திய இளைஞர்களுக்குப் பிரிட்டனில் வேலைவாய்ப்பு என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.