|
|||||
கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் சூர்யா! |
|||||
பொதுவாக தனது அபிமான நடிகர்களைக் காண வேண்டும் என்பது ரசிகர்களின் கனவாக இருக்கும். அப்படிப்பட்ட கனவுதான் தினேஷுக்கும் இருந்தது. உடல் உறுப்புகளை மெல்ல மெல்லச் சிதைத்துவரும் தசைச்சிதைவு நோயை எதிர்த்துப் போராடிக் கொண்டே, ஓவியத்திலும் சாதித்து வரும் சிறுவன் தினேஷின் கனவு மட்டுமல்ல, நிறைவேறுமா? ஆகாதா என்கிற வாழ்நாள் ஆசையும் கூட. தேனியைச் சேர்ந்த தினேஷின் ஆசை தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இதனைக் கண்ட சூர்யா ரசிகர் மன்றத்தினர், சூர்யாவிடம் இதை எடுத்துச் சொன்னார்கள். சிறுவன் தினேஷைப் பார்க்க விரும்பினார் சூர்யா. தினேஷின் கனவு நனவானது. சென்னைக்கு வரச் சொன்ன சூர்யா தினேஷைச் சந்தித்துப் பேசினார். சூர்யாவோடு அவரின் தந்தை நடிகர் சிவக்குமார் மற்றும் தம்பி கார்த்தியும் தினேஷைச் சந்தித்தனர். தினேஷுக்குத் தன்னுடைய ஓவியத்தைப் பிரியத்துடன் பரிசளித்தார் சிவக்குமார். தினேஷிடம் பேசிய சூர்யா, ''பார்த்தியா, உன்னோட அடிமனசுல நீ நினைச்சது இன்னிக்கு நடந்துருக்கு. என்னைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டே, பார்த்துட்டே அல்லவா? அடுத்து ஒரு பெரிய விஷயம் நடக்கணும்னு நினைச்சுட்டே இரு; கண்டிப்பா நடக்கும்'' என்று உற்சாகமூட்டி அனுப்பி வைத்தார். தினேஷின் அவரின் அடுத்தடுத்த கனவுகளும் நிஜமாகட்டும். அவரது கனவை நனவாக்கிய சூர்யாவை பாராட்டியே ஆக வேண்டும். |
|||||
by Mani Bharathi on 20 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|