தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்களையொட்டி, பொதுமக்கள் சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக 831 பேருந்துகள் கூடுதலாக இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.
தமிழகம் முழுவதும் வியாழக்கிழமையன்று, ஆயுதபூஜையும், வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது.
மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என நான்கு நாட்கள் விடுமுறையாக உள்ளதால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக 831 அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.
|