|
|||||
ஆப்கானிஸ்தான் இளைஞர் தலையில் பென்சில் துண்டுகள் - 15 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றம் ! |
|||||
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த இளைஞர் தலையில் இருந்த பென்சில் துண்டு 15 ஆண்டுகளுக்கு பின் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் வலது கண் பார்வை குறைவு, தலைவலி, மூக்கில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கூறி ஜெர்மன் தலைநகரில் உள்ள பெர்லின்
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் பென்சில் இருப்பதை கண்டுபிடித்தனர். அறுவை சிகிச்சையின் மூலம், மூக்கின் வழியாகவே அந்த
உடைந்த பென்சிலை அகற்றியுள்ளனர். தற்போது தலைவலி இல்லை. இருப்பினும் அவரது வலது கண் பார்வை மீண்டும் கிடைக்கவில்லை என்பதே சோகமான விஷயம்.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த இளைஞர் தலையில் இருந்த பென்சில் துண்டு 15 ஆண்டுகளுக்கு பின் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
|
|||||
by Swathi on 31 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|