LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

அகநானூறு-3

 

51. பாலை
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற, 
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து, 
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை, 
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி, 
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி 5
எருவைச் சேவல் கரிபு சிறை தீய, 
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை, 
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி 
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின் 
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது, 10
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ் 
சேயிழை தௌர்ப்பக் கவைஇ, நாளும் 
மனைமுதல் வினையொடும் உவப்ப, 
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.  
பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.- பெருந்தேவனார் 
52. குறிஞ்சி
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல், 
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் 
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள் 
இன்னா இசைய பூசல் பயிற்றலின், 
 "ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் 5
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம் 
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச் 
சிலையுடை இடத்தர் போதரும் நாடன் 
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு 
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என 10
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் 
சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை 
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள் 
ஆய்மலர் உண்கண் பசலை 
காம நோய்' எனச் செப்பாதீமே. 15
தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி,'அறத்தொடு நிற்றும்' என, தலைமகள் சொல்லியது. - நொச்சிநியமங் கிழார் 
53. பாலை
அறியாய், வாழி தோழி! இருள் அற 
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக் 
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய, 
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய், 
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, 5
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு 
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில் 
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை 
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின், 
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் 10
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் 
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும், 
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல் 
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் 
பொருளே காதலர் காதல்; 15
'அருளே காதலர்' என்றி, நீயே.  
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார் 
54. முல்லை
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப, 
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற் 
காரும் ஆர்கலி தலையின்று. தேரும் 
ஓவத்தன்ன கோபச் செந் நிலம், 
வள் வாய் ஆழி உள் உறுபு உருள, 5
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத் 
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய, 
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி, 
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் 
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர் 10
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க, 
மனைமனைப் படரும் நனை நகு மாலை, 
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் 
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப் 
புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர் 15
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி, 
'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! 
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி, 
வருகுவைஆயின், தருகுவென் பால்' என, 
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி, 20
திதலை அல்குல் எம் காதலி 
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.  
வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் 
55 . பாலை
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின், 
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை, 
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின், 
விளி முறை அறியா வேய் கரி கானம், 
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் 
5
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம் 
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ, 
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு 
கண்படை பெறேன், கனவ ஒண் படைக் 
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் 10
பொருது புண் நாணிய சேரலாதன் 
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென, 
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் 
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர், 
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் 15
காதல் வேண்டி, எற் துறந்து 
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.  
புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார் 
56. மருதம்
நகை ஆகின்றே தோழி! நெருநல் 
மணி கண்டன்ன துணி கயம் துளங்க, 
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை, 
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் 
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய 5
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப, 
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் 
தண் துறை ஊரன் திண் தார் அகலம் 
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய, 
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் 10
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு, 
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு 
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று, 
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற 
என்னும் தன்னும் நோக்கி, 15
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.  
பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 
57. பாலை
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை 
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி, 
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது, 
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து, 
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக் 5
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ் 
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர, 
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும் 
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை, 
யாமே எமியம்ஆக, தாமே 10
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின் 
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர் 
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ 
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன் 
முதுநீர் முன்துறை முசிறி முற்றி, 15
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் 
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து, 
பானாட் கங்குலும் பகலும் 
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?  
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.- நக்கீரர் 
58. குறிஞ்சி
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ, 
மன் உயிர் மடிந்த பானாட் கங்குல், 
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது, 
வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத் 
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை, 5
கூதிர், இல் செறியும் குன்ற நாட! 
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ் 
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற, 
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே 
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் 10
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை 
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி, 
மனைமரம் ஒசிய ஒற்றிப் 
பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே.  
சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் 
59. பாலை
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப் 
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும் 
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது 
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை, 
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5
மரம் செல மிதித்த மாஅல் போல, 
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை, 
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள் 
படி ஞிமிறு கடியும் களிறே தோழி! 
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், 10
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து, 
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை, 
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த 
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம் 
தாம் பாராட்டிய காலையும் உள்ளார் 15
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு 
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப் 
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே  
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன் 
60. நெய்தல்
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க, 
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை 
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, 
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு 
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, 5
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் 
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம் 
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய; 
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை, 
கோதை ஆயமொடு வண்டல் தைஇ, 10
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக் 
கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற் 
கொற்றச் சோழர் குடந்தை வைத்த 
நாடு தரு நிதியினும் செறிய 
அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே. 15
தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற் கீரத்தனார் 
61. பாலை
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம் 
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத் 
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர் 
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து 
ஆழல் வாழி, தோழி! தாழாது, 5
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால் 
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ, 
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் 
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு, 
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் 10
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான் 
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி 
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும், 
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது 
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி 15
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின் 
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த 
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.  
தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் 
62. குறிஞ்சி
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன 
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய், 
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள், 
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன 
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு 5
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி 
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப, 
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின், 
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று 
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல, 10
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல் 
ஆகம் அடைதந்தோளே வென் வேற் 
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி 
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக் 
கடவுள் எழுதிய பாவையின், 15
மடவது மாண்ட மாஅயோளே.  
அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் 
63. பாலை
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி, 
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு 
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல் 
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி, 
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி 5
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப, 
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல் 
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண், 
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி, 
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து, 10
மன்று நிறை பைதல் கூர, பல உடன் 
கறவை தந்த கடுங் கால் மறவர் 
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ 
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை 
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை 15
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள், 
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண் 
சேக் கோள் அறையும் தண்ணுமை 
கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே.  
தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.- கருவூர்க் கண்ணம்புல்லனார் 
64. முல்லை
களையும் இடனால் பாக! உளை அணி 
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா 
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய, 
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி, 
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் 5
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக, 
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல 
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின், 
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர, 
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, 10
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு 
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ, 
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன், 
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் 
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை 15
புலம்பு கொள் மாலை கேட்டொறும் 
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.  
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் 
65 . பாலை
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் 
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம் 
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் 
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்; 
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் 
5
பாடிச் சென்ற பரிசிலர் போல 
உவ இனி வாழி, தோழி! அவரே, 
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச் 
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும் 
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி, 10
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் 
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, 
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை 
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன 
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, 15
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் 
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள், 
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை, 
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு 
அரியவால்' என அழுங்கிய செலவே! 20
வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார் 
66. மருதம்
'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி, 
மறுமை உலகமும் மறு இன்று எய்துப, 
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச் 
சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப் 
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
5
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி! 
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு 
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின் 
இயன்ற அணியன், இத் தெரு இறப்போன் 
மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து,
10
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும் 
பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர் 
தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன். தாங்காது, 
மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப் 
புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக் 15
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த 
மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு 
தானே புகுதந்தோனே; யான் அது 
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற் 
கஇலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச் சென்று 20
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு 
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப் 
பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான், 
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய 
பழங் கணோட்டமும் நலிய, 25
அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே  
பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - செல்லூர்க் கோசிகன் கண்ணனார் 
67. பாலை
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி 
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது 
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன், 
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை, 
அரம் போழ் நுதிய வாளி அம்பின், 5
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார், 
நெல்லி நீளிடை எல்லி மண்டி, 
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர் 
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் 
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் 10
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் 
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர் 
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன 
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை, 
'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு 15
நிலம் படு மின்மினி போல, பல உடன் 
இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம் 
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே!  
பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நோய்பாடியார் 
68. குறிஞ்சி
'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத் 
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய, 
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம் 
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை 
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
5
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என, 
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே; 
பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள், 
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை 
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் 10
வருவர்ஆயின், 'பருவம் இது' எனச் 
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின் 
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக, 
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து 
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் 15
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப, 
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம் 
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன் 
வெண் கோட்டு யானை விளி படத் துழவும் 
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் 20
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.  
தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - ஊட்டியார் 
69. பாலை
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த் 
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல 
வண்ணம் வாடிய வரியும், நோக்கி, 
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின் 
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
5
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப் 
பராரை நெல்லி அம் புளித் திரள் காய் 
கான மட மரைக் கணநிரை கவரும் 
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று, 
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் 10
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த 
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம் 
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல் 
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம் 
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் 15
அம்புடைக் கையர் அரண் பல நூறி, 
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் 
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத் 
தலை நாள் அலரின் நாறும் நின் 
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. 20
'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் 
70. நெய்தல்
கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, 
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் 
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, 
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் 
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே 5
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற, 
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே 
வதுவை கூடிய பின்றை, புதுவது 
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் 
கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப் 10
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் 
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் 
வென் வேற் கவுரியர் தொல் முது கோடி 
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை, 
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த 15
பல் வீழ் ஆலம் போல, 
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.  
தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் 
71. பாலை
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் 
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம் 
நயன் இல் மாக்கள் போல, வண்டினம் 
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர, 
மை இல் மான் இனம் மருள, பையென 5
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, 
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு 
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன, 
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை, 
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக, 10
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக் 
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது, 
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து 
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி, 
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து, 15
இது கொல் வாழி, தோழி! என் உயிர் 
விலங்கு வெங் கடு வளி எடுப்பத் 
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?  
பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார் 
72. குறிஞ்சி
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம் 
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள், 
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் 
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி, 
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை 5
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண், 
ஆறே அரு மரபினவே; யாறே 
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய; 
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க, 
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,
10
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன், 
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய, 
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை 
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த 
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் 15
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை, 
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி, 
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக 
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த 
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் 20
ஆனா அரும் படர் செய்த 
யானே, தோழி! தவறு உடையேனே.  
தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார் 
73. பாலை
பின்னொடு முடித்த மண்ணா முச்சி 
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ; 
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு 
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க, 
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், 5
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர 
'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என, 
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் 
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி 
இருவேம் நம் படர் தீர வருவது 10
காணிய வம்மோ காதல்அம் தோழி! 
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் 
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின், 
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப் 
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி 15
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர் 
சென்ற தேஎத்து நின்றதால், மழையே.  
தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. - எருமை வெளியனார் 
74. முல்லை
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து, 
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த, 
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை, 
குருதி உருவின் ஒண் செம் மூதாய் 
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப, 5
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ 
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய், 
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில், 
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை 
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து 10
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ, 
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என, 
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் 
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல் 
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற் 15
கல்லாக் கோவலர் ஊதும் 
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே!  
தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார் 
75 . பாலை
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர் 
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின் 
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது, 
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல் 
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை, 5
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர் 
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும் 
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த 
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல், 
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய், 10
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர் 
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து, 
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது 
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும் 
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும் 15
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என- 
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன 
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்; 
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்; 
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி 20
ஆனா நோயை ஆக, யானே 
பிரியச் சூழ்தலும் உண்டோ, 
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?'  
'பொருள்வயிற் பிரிவர்' என வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியார்'எனத் தோழி சொல்லியது. - மதுரைப்போத்தனார்


51. பாலை
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற, நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து, போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை, முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி, ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி 5எருவைச் சேவல் கரிபு சிறை தீய, வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை, நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின் பிரியின் புணர்வதுஆயின் பிரியாது, 10ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ் சேயிழை தௌர்ப்பக் கவைஇ, நாளும் மனைமுதல் வினையொடும் உவப்ப, நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.  

பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.- பெருந்தேவனார் 

52. குறிஞ்சி
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல், கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின்,  "ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் 5ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம் மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச் சிலையுடை இடத்தர் போதரும் நாடன் நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என 10இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள் ஆய்மலர் உண்கண் பசலை காம நோய்' எனச் செப்பாதீமே. 15

தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி,'அறத்தொடு நிற்றும்' என, தலைமகள் சொல்லியது. - நொச்சிநியமங் கிழார் 

53. பாலை
அறியாய், வாழி தோழி! இருள் அற விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக் கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய, நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய், நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, 5வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில் உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின், விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் 10எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும் அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும், 'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் பொருளே காதலர் காதல்; 15'அருளே காதலர்' என்றி, நீயே.  

வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - சீத்தலைச் சாத்தனார் 

54. முல்லை
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப, வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற் காரும் ஆர்கலி தலையின்று. தேரும் ஓவத்தன்ன கோபச் செந் நிலம், வள் வாய் ஆழி உள் உறுபு உருள, 5கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத் தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய, கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி, படு மணி மிடற்ற பய நிரை ஆயம் கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர் 10கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க, மனைமனைப் படரும் நனை நகு மாலை, தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப் புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர் 15நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி, 'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி, வருகுவைஆயின், தருகுவென் பால்' என, விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி, 20திதலை அல்குல் எம் காதலி புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.  

வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் 

55 . பாலை
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின், ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை, உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின், விளி முறை அறியா வேய் கரி கானம், வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் 5கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ, வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு கண்படை பெறேன், கனவ ஒண் படைக் கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் 10பொருது புண் நாணிய சேரலாதன் அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென, இன்னா இன் உரை கேட்ட சான்றோர் அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர், பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண் 15காதல் வேண்டி, எற் துறந்து போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.  

புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார் 

56. மருதம்
நகை ஆகின்றே தோழி! நெருநல் மணி கண்டன்ன துணி கயம் துளங்க, இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை, ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய 5காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப, மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் தண் துறை ஊரன் திண் தார் அகலம் வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய, பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் 10புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு, எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று, 'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற என்னும் தன்னும் நோக்கி, 15மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே.  

பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 

57. பாலை
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி, வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது, பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து, புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக் 5குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ் இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர, பெருங் கை யானை நிவப்பின் தூங்கும் குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை, யாமே எமியம்ஆக, தாமே 10பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின் பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர் வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன் முதுநீர் முன்துறை முசிறி முற்றி, 15களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து, பானாட் கங்குலும் பகலும் ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?  

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.- நக்கீரர் 

58. குறிஞ்சி
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ, மன் உயிர் மடிந்த பானாட் கங்குல், காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது, வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத் தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை, 5கூதிர், இல் செறியும் குன்ற நாட! வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ் விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற, நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் 10தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி, மனைமரம் ஒசிய ஒற்றிப் பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே.  

சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் 

59. பாலை
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப் பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும் வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை, அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5மரம் செல மிதித்த மாஅல் போல, புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை, நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள் படி ஞிமிறு கடியும் களிறே தோழி! சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், 10சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து, அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை, இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம் தாம் பாராட்டிய காலையும் உள்ளார் 15வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப் பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன் 

60. நெய்தல்
பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க, கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, 5கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம் ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய; 'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை, கோதை ஆயமொடு வண்டல் தைஇ, 10ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி' எனக் கொன்னும் சிவப்போள் காணின், வென் வேற் கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடு தரு நிதியினும் செறிய அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே. 15

தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.- குடவாயிற் கீரத்தனார் 

61. பாலை
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம் கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத் தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர் நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து ஆழல் வாழி, தோழி! தாழாது, 5உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால் வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ, அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண் கோடு கொண்டு, நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் 10கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான் மழ புலம் வணக்கிய மா வண் புல்லி விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும், பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி 15பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின் ஒண் கேழ் வன முலைப் பொலிந்த நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.  

தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் 

62. குறிஞ்சி
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய், ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள், மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு 5பேயும் அறியா மறை அமை புணர்ச்சி பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப, கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின், கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல, 10நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல் ஆகம் அடைதந்தோளே வென் வேற் களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக் கடவுள் எழுதிய பாவையின், 15மடவது மாண்ட மாஅயோளே.  

அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் 

63. பாலை
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி, திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு பெரு மலை இறந்தது நோவேன்; நோவல் கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி, முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி 5பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப, கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல் சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண், அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி, கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து, 10மன்று நிறை பைதல் கூர, பல உடன் கறவை தந்த கடுங் கால் மறவர் கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை மட மயில் அன்ன என் நடை மெலி பேதை 15தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள், 'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண் சேக் கோள் அறையும் தண்ணுமை கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே.  

தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.- கருவூர்க் கண்ணம்புல்லனார் 

64. முல்லை
களையும் இடனால் பாக! உளை அணி உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய, தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி, ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் 5வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக, செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல கடு நீர் வரித்த செந் நிலமருங்கின், விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர, பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, 10மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ, ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன், கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை 15புலம்பு கொள் மாலை கேட்டொறும் கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.  

வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் 

65 . பாலை
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம் ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்; நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் 5பாடிச் சென்ற பரிசிலர் போல உவ இனி வாழி, தோழி! அவரே, பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச் செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும் மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி, 10மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை உயவல் யானை வெரிநுச் சென்றன்ன கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, 15காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள், நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை, நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு அரியவால்' என அழுங்கிய செலவே! 20

வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார் 

66. மருதம்
'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி, மறுமை உலகமும் மறு இன்று எய்துப, செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
5வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி! நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின் இயன்ற அணியன், இத் தெரு இறப்போன் மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து,
10காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும் பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர் தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன். தாங்காது, மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப் புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக் 15கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு தானே புகுதந்தோனே; யான் அது படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற் கஇலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச் சென்று 20அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப் பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான், கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய பழங் கணோட்டமும் நலிய, 25அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே  

பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - செல்லூர்க் கோசிகன் கண்ணனார் 

67. பாலை
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி வானம் வாழ்த்தி பாடவும், அருளாது உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன், மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை, அரம் போழ் நுதிய வாளி அம்பின், 5நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார், நெல்லி நீளிடை எல்லி மண்டி, நல் அமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் 10வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர் கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை, 'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு 15நிலம் படு மின்மினி போல, பல உடன் இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம் நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே!  

பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நோய்பாடியார் 

68. குறிஞ்சி
'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத் தண் அயத்து அமன்ற கூதளம் குழைய, இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம் கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
5ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என, முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே; பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள், அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் 10வருவர்ஆயின், 'பருவம் இது' எனச் சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின் படர்ந்த உள்ளம் பழுது அன்றாக, வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் 15தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப, கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம் புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன் வெண் கோட்டு யானை விளி படத் துழவும் அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் 20பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.  

தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - ஊட்டியார் 

69. பாலை
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த் தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல வண்ணம் வாடிய வரியும், நோக்கி, ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின் ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
5செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப் பராரை நெல்லி அம் புளித் திரள் காய் கான மட மரைக் கணநிரை கவரும் வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று, விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் 10பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம் நீடலர் வாழி, தோழி! ஆடு இயல் மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம் சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் 15அம்புடைக் கையர் அரண் பல நூறி, நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத் தலை நாள் அலரின் நாறும் நின் அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. 20

'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் 

70. நெய்தல்
கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே 5அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற, பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே வதுவை கூடிய பின்றை, புதுவது பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப் 10பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல் விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் வென் வேற் கவுரியர் தொல் முது கோடி முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை, வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த 15பல் வீழ் ஆலம் போல, ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.  

தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.- மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் 

71. பாலை
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம் நயன் இல் மாக்கள் போல, வண்டினம் சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர, மை இல் மான் இனம் மருள, பையென 5வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, ஐயறிவு அகற்றும் கையறு படரோடு அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன, பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை, காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக, 10ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக் கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது, எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி, மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து, 15இது கொல் வாழி, தோழி! என் உயிர் விலங்கு வெங் கடு வளி எடுப்பத் துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?  

பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார் 

72. குறிஞ்சி
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம் துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள், மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கி, குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை 5இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண், ஆறே அரு மரபினவே; யாறே சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய; கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க, 'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,
10ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன், ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய, இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் 15வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை, உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி, அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் 20ஆனா அரும் படர் செய்த யானே, தோழி! தவறு உடையேனே.  

தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார் 

73. பாலை
பின்னொடு முடித்த மண்ணா முச்சி நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ; வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க, வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், 5நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர 'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என, என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி இருவேம் நம் படர் தீர வருவது 10காணிய வம்மோ காதல்அம் தோழி! கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின், ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப் பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி 15விடு பொறிச் சுடரின் மின்னி, அவர் சென்ற தேஎத்து நின்றதால், மழையே.  

தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. - எருமை வெளியனார் 

74. முல்லை
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து, போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த, தண் பெயல் பொழிந்த பைதுறு காலை, குருதி உருவின் ஒண் செம் மூதாய் பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப, 5பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ வெண் களர் அரிமணல் நன் பல தாஅய், வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில், கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து 10"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ, இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என, வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல் புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற் 15கல்லாக் கோவலர் ஊதும் வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே!  

தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார் 

75 . பாலை
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர் பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின் மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது, எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல் கரி குதிர் மரத்த கான வாழ்க்கை, 5அடு புலி முன்பின், தொடு கழல் மறவர் தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும் அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல், செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய், 10அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர் ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து, ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும் இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும் 15தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என- மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்; பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்; மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி 20ஆனா நோயை ஆக, யானே பிரியச் சூழ்தலும் உண்டோ, அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?'  

'பொருள்வயிற் பிரிவர்' என வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியார்'எனத் தோழி சொல்லியது. - மதுரைப்போத்தனார்

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.