LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

அகநானூறு-9

 

201. பாலை
அம்ம, வாழி தோழி! 'பொன்னின் 
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை 
வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன் 
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை, 
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, 5
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் 
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ, 
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை, 
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு, 
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும் 10
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்' என்று 
எவன் கையற்றனை, இகுளை? சோழர் 
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும், 
ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது 
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன், 15
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை 
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத் 
தோல் முலைப் பிணவொடு திளைக்கும் 
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.  
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் 
202. குறிஞ்சி
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன், 
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப, 
புலிப் பகை வென்ற புண் கூர் யானை 
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின், 
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் 5
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி, 
சிறு பல் மின்மினி போல, பல உடன் 
மணி நிற இரும் புதல் தாவும் நாட! 
யாமே அன்றியும் உளர்கொல் பானாள், 
உத்தி அரவின் பைத் தலை துமிய, 10
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை, 
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக, 
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி 
தேராது வரூஉம் நின்வயின் 
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? 15
இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் 
203. பாலை
'உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும், 
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய் 
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர், 
'இன்னள் இனையள், நின் மகள்' என, பல் நாள் 
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன், 5
'நாணுவள் இவள்' என, நனி கரந்து உறையும் 
யான் இவ் வறு மனை ஒழிய, தானே, 
'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை 
எனக்கு எளிது ஆகல் இல்' என, கழற் கால் 
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற, 10
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான் 
அன்னேன் அன்மை நன் வாயாக, 
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி 
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப் 
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர், 15
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த, 
நுனை குழைத்து அலமரும் நொச்சி 
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே!  
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கபிலர் 
204. முல்லை
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை, 
கடல் போல் தானை, கலிமா, வழுதி 
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச் 
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே 
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில், 5
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி 
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப, 
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து, 
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர் 
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை 10
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும் 
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித் 
தண்டலை கமழும் கூந்தல், 
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.  
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் 
205. பாலை
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின் 
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல, 
தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப் 
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி, 
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே 5
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர, 
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே 
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை 
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி, 
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி, 10
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க் 
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன 
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற 
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல 
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி, 15
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில், 
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ 
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி, 
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து, 
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர, 20
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை 
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக் 
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய 
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே  
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர் 
206. மருதம்
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப் 
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப, 
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை 
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம், 
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத் 5
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன், 
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன 
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர் 
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து 
ஆராக் காதலொடு தார் இடை குழைய, 10
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், 
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து, 
அடுபோர் வேளிர் வீரை முன்துறை, 
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை, 
பெரு பெயற்கு உருகியாஅங்கு, 15
துஇதிருந்ழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?  
வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார் 
207. பாலை
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் 
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் 
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப் 
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர் 
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக் 5
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின், 
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை, 
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள, 
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல் 
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல் 10
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை, 
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து, 
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ 
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக் 
கூழை உளர்ந்து மோழைமை கூறவும், 15
மறுத்த சொல்லள் ஆகி, 
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே?  
மகட் போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் 
208. குறிஞ்சி
யாம இரவின் நெடுங் கடை நின்று, 
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் 
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு 
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் 
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், 5
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, 
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு 
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, 
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு 
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று 10
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி, 
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப் 
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து, 
உரு வினை நன்னன், அருளான், கரப்ப, 
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் 15
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல், 
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை 
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல் 
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல, 
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி, 20
நல்கினள், வாழியர், வந்தே ஓரி 
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக் 
கார் மலர் கடுப்ப நாறும், 
ஏர் நுண், ஓதி மாஅயோளே!  
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் 
209. பாலை
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும் 
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே, 
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான், 
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன், 
நேரா எழுவர் அடிப்படக் கடந்த 5
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என, 
ஆழல் வாழி, தோழி! அவரே, 
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி 
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர் 
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து 10
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல் 
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி 
செல்லா நல் இசை நிறுத்த வல் வில் 
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த 
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, 15
நிலை பெறு கடவுள் ஆக்கிய, 
பலர் புகழ் பாவை அன்ன நின் நலன  
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார் 
210. நெய்தல்
குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர் 
எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன் 
புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட, 
விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த் 
திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து, 5
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன், 
பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி, 
தான் இவண் வந்த காலை, நம் ஊர்க் 
கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி, 
ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன் 10
சாயல் மார்பின் பாயல் மாற்றி, 
'கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச் 
செலவு அரிது என்னும்' என்பது 
பல கேட்டனமால் தோழி! நாமே.  
தோழி தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - உலோச்சனார் 
211. பாலை
கேளாய், எல்ல! தோழி! வாலிய 
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் 
பறை கண்டன்ன பா அடி நோன் தாள் 
திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும், 
தண் மழை ஆலியின் தாஅய், உழவர் 5
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் 
பனி படு சோலை வேங்கடத்து உம்பர், 
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர் 
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை 
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய, 10
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி, 
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட 
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய 
வன்கண் கதவின் வெண்மணி வாயில், 
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை, 15
நீர் ஒலித்தன்ன பேஎர் 
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே.  
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார் 
212. குறிஞ்சி
தா இல் நல் பொன் தைஇய பாவை 
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன, 
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால், 
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற 
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய், 5
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் 
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி, 
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று 
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில், 
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும், 10
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே 
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு 
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று, 
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ, 
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை 15
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன் 
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து, 
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி, 
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய 
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக் 20
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது 
எளியள் அல்லோட் கருதி, 
விளியா எவ்வம் தலைத் தந்தோயே.  
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. -பரணர் 
213. பாலை
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் 
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு 
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர், 
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி 
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி, 5
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை 
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும் 
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து, 
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை 
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது, 10
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப் 
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப் 
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து, 
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் 
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை 15
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள் 
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர் 
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும், 
சென்று, தாம் நீடலோஇலரே என்றும் 
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை, 20
வலம் படு வென்றி வாய் வாள், சோழர் 
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த 
அறல் என நெறிந்த கூந்தல், 
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.  
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார் 
214. முல்லை
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய், 
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம் 
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி, 
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது; 
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை, 5
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை, 
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே; 
அமரும் நம் வயினதுவே; நமர் என 
நம் அறிவு தௌந்த பொம்மல் ஓதி 
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப் 10
படு சுவற் கொண்ட பகு வாய்த் தௌ மணி 
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ, 
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப, 
ஆர் உயிர் அணங்கும் தௌ இசை 
மாரி மாலையும் தமியள் கேட்டே? 15
பாசறைக்கண் தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் 
215. பாலை
'விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர், 
வேறு பல் மொழிய தேஎம் முன்னி, 
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு 
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி, 
செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே, 5
வலன் ஆக!' என்றலும் நன்றுமன் தில்ல 
கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த 
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி, 
கொடுமரம் பிடித்த கோடா வன்கண், 
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர், 10
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை, 
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல் 
படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ, 
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு, 
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண், 15
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு 
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே.  
செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன் 
216. மருதம்
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள் 
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல், 
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு, 
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் 
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் 5
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப் 
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்; 
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும், 
கழனி உழவர் குற்ற குவளையும், 
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, 10
பல் இளங் கோசர் கண்ணி அயரும், 
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் 
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் 
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய 
பெருங் களிற்று எவ்வம் போல, 15
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே.  
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார் 
217. பாலை
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, 
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, 
துவலை தூவல் கழிய, அகல் வயல் 
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் 
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, 5
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை 
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய 
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, 
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, 
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, 10
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென 
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, 
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, 
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச் 
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; 15
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த 
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, 
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, 
எயிறு தீப் பிறப்பத் திருகி, 
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. 20
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் 
218. குறிஞ்சி
'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு 
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, 
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, 
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, 
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, 5
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள், 
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல், 
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை, 
படாஅவாகும், எம் கண்' என, நீயும், 
'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, 10
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் 
பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய், 
வர எளிதாக எண்ணுதி; அதனால், 
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் 
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் 15
அடைய முயங்கேம்ஆயின், யாமும் 
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே 
அன்னை அறியினும் அறிக! அலர் வாய் 
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க! 
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, 20
ஒண் பூ வேங்கை கமழும் 
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே!  
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர் 
219. பாலை
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி, 
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும், 
'வாராயோ!' என்று ஏத்தி, பேர் இலைப் 
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் 
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி, 5
'என் பாடு உண்டனைஆயின், ஒரு கால், 
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டி, 
'பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான் 
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள் 
அறனிலாளனொடு இறந்தனள், இனி' என, 10
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் 
'பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச் 
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் 
பொரி அரை விளவின் புன் புற விளை புழல், 
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர் 15
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை, 
மடத் தகை மெலியச் சாஅய், 
நடக்கும்கொல்? என, நோவல் யான  
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் 
220. நெய்தல்
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ, 
தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும், 
கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர், 
கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய, 
மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் 5
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி, 
கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின், 
அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும் 
காணலாகா மாண் எழில் ஆகம் 
உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே 10
நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின், 
முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும், 
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண், 
நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து, 
காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், 15
இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை 
முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் 
நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து, 
யாணர்த் தண் பணை உறும் என, கானல் 
ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள் 20
நல் எழில் சிதையா ஏமம் 
சொல் இனித் தெய்ய, யாம் தௌயுமாறே.  
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் 
221. பாலை
நனை விளை நறவின் தேறல் மாந்தி, 
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ, 
'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என, 
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால், 
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல், 5
மதி உடம்பட்ட மை அணற் காளை 
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து, 
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின் 
தண் நறு முச்சி புனைய, அவனொடு 
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை, 10
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை 
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ, 
இரும் பிடி இரியும் சோலை 
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே.  
தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார் 
222. குறிஞ்சி
வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக் 
கான நாடன் உறீஇய நோய்க்கு, என் 
மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்; 
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண், 
கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும், 5
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின், 
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ, 
தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின், 
மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த 
ஆதிமந்தி காதலற் காட்டி, 10
படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின் 
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர், 
சென்மோ வாழி, தோழி! பல் நாள், 
உரவு உரும் ஏறொடு மயங்கி, 
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே. 15
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லியது. - பரணர் 
223. பாலை
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? 'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர் 
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி, 
ஆழல் வாழி, தோழி! கேழல் 
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய் 
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர், 5
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு 
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் 
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை, 
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின் 
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் 10
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி 
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் 
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட, 
நன் முகை அதிரல் போதொடு, குவளைத் 
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின் 15
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ 
224. முல்லை
செல்க, பாக! எல்லின்று பொழுதே 
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன் 
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா, 
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை, 
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி, 5
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன, 
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம் 
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி, 
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக, 
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில், 10
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள் 
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த 
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல் 
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ, 
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என, 15
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால் 
அருங் கடி வியல் நகர் நோக்கி, 
வருந்துமால், அளியள் திருந்திழைதானே.
 
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் 
225. பாலை
அன்பும், மடனும், சாயலும், இயல்பும், 
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும், 
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி, 
இன்றே இவணம் ஆகி, நாளை, 
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற 5
அகலா அம் துளை, கோடை முகத்தலின், 
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல் 
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், 
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து, 
யாத்த தூணித் தலை திறந்தவைபோல், 10
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர் 
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர, 
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச் 
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை 
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், 15
செறி தொடி முன்கை, நம் காதலி 
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?  
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்


201. பாலை
அம்ம, வாழி தோழி! 'பொன்னின் அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன் புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை, அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, 5தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் பழையர் மகளிர் பனித் துறைப் பரவ, பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை, உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு, அலரும் மன்று பட்டன்றே; அன்னையும் 10பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்' என்று எவன் கையற்றனை, இகுளை? சோழர் வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும், ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன், 15பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத் தோல் முலைப் பிணவொடு திளைக்கும் வேனில் நீடிய சுரன் இறந்தோரே.  

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் 

202. குறிஞ்சி
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன், கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப, புலிப் பகை வென்ற புண் கூர் யானை கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின், நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் 5குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி, சிறு பல் மின்மினி போல, பல உடன் மணி நிற இரும் புதல் தாவும் நாட! யாமே அன்றியும் உளர்கொல் பானாள், உத்தி அரவின் பைத் தலை துமிய, 10உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை, தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக, கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி தேராது வரூஉம் நின்வயின் ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? 15

இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் 

203. பாலை
'உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும், யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர், 'இன்னள் இனையள், நின் மகள்' என, பல் நாள் எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன், 5'நாணுவள் இவள்' என, நனி கரந்து உறையும் யான் இவ் வறு மனை ஒழிய, தானே, 'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை எனக்கு எளிது ஆகல் இல்' என, கழற் கால் மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற, 10பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான் அன்னேன் அன்மை நன் வாயாக, மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப் புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர், 15செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த, நுனை குழைத்து அலமரும் நொச்சி மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே!  

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கபிலர் 

204. முல்லை
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை, கடல் போல் தானை, கலிமா, வழுதி வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச் சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில், 5கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப, உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து, செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர் வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை 10பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும் காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித் தண்டலை கமழும் கூந்தல், ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.  

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் 

205. பாலை
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின் செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல, தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப் பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி, துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே 5நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர, நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி, நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி, 10பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற விழு நிதி எளிதினின் எய்துகதில்ல மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி, 15நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில், கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி, புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து, நாட் பூ வேங்கை நறு மலர் உதிர, 20மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக் கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே  

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர் 

206. மருதம்
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப் பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப, நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம், சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத் 5துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன், மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன அம் மா மேனி, ஆய்இழை, மகளிர் ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து ஆராக் காதலொடு தார் இடை குழைய, 10முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து, அடுபோர் வேளிர் வீரை முன்துறை, நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை, பெரு பெயற்கு உருகியாஅங்கு, 15துஇதிருந்ழை நெகிழ்ந்தன, தட மென் தோளே?  

வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார் 

207. பாலை
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப் படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர் நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக் 5குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின், வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை, மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள, வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல் பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல் 10தெண் கண் உவரிக் குறைக் குட முகவை, அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து, பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக் கூழை உளர்ந்து மோழைமை கூறவும், 15மறுத்த சொல்லள் ஆகி, வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே?  

மகட் போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் 

208. குறிஞ்சி
யாம இரவின் நெடுங் கடை நின்று, தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், 5அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று 10ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி, நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப் படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து, உரு வினை நன்னன், அருளான், கரப்ப, பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் 15குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல், வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல் உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல, நாணு வரை நில்லாக் காமம் நண்ணி, 20நல்கினள், வாழியர், வந்தே ஓரி பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக் கார் மலர் கடுப்ப நாறும், ஏர் நுண், ஓதி மாஅயோளே!  

புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் 

209. பாலை
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும் அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே, பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான், எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன், நேரா எழுவர் அடிப்படக் கடந்த 5ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என, ஆழல் வாழி, தோழி! அவரே, மாஅல் யானை மறப் போர்ப் புல்லி காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர் அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து 10உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல் முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி செல்லா நல் இசை நிறுத்த வல் வில் ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, 15நிலை பெறு கடவுள் ஆக்கிய, பலர் புகழ் பாவை அன்ன நின் நலன  

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார் 

210. நெய்தல்
குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர் எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன் புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட, விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த் திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து, 5நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன், பானாள் இரவில், நம் பணைத் தோள் உள்ளி, தான் இவண் வந்த காலை, நம் ஊர்க் கானல்அம் பெருந் துறை, கவின் பாராட்டி, ஆனாது புகழ்ந்திசினோனே; இனி, தன் 10சாயல் மார்பின் பாயல் மாற்றி, 'கைதை அம் படு சினைக் கடுந் தேர் விலங்கச் செலவு அரிது என்னும்' என்பது பல கேட்டனமால் தோழி! நாமே.  

தோழி தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - உலோச்சனார் 

211. பாலை
கேளாய், எல்ல! தோழி! வாலிய சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் பறை கண்டன்ன பா அடி நோன் தாள் திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும், தண் மழை ஆலியின் தாஅய், உழவர் 5வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் பனி படு சோலை வேங்கடத்து உம்பர், மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர் குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை பிடி படு பூசலின் எய்தாது ஒழிய, 10கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி, நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய வன்கண் கதவின் வெண்மணி வாயில், மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை, 15நீர் ஒலித்தன்ன பேஎர் அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே.  

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார் 

212. குறிஞ்சி
தா இல் நல் பொன் தைஇய பாவை விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன, மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால், கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய், 5நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி, அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று இனம் படி நீரின் கலங்கிய பொழுதில், பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும், 10இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று, விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ, படை நிலா இலங்கும் கடல் மருள் தானை 15மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன் பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து, செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி, ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக் 20கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது எளியள் அல்லோட் கருதி, விளியா எவ்வம் தலைத் தந்தோயே.  

அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. -பரணர் 

213. பாலை
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர், கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி, 5இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும் வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து, நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது, 10அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப் பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப் பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து, எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை 15வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள் பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர் அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும், சென்று, தாம் நீடலோஇலரே என்றும் கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை, 20வலம் படு வென்றி வாய் வாள், சோழர் இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த அறல் என நெறிந்த கூந்தல், உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.  

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார் 

214. முல்லை
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய், பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம் இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி, பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது; வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை, 5விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை, அடு புகழ் மேவலொடு கண்படை இலனே; அமரும் நம் வயினதுவே; நமர் என நம் அறிவு தௌந்த பொம்மல் ஓதி யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப் 10படு சுவற் கொண்ட பகு வாய்த் தௌ மணி ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ, பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப, ஆர் உயிர் அணங்கும் தௌ இசை மாரி மாலையும் தமியள் கேட்டே? 15

பாசறைக்கண் தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் 

215. பாலை
'விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர், வேறு பல் மொழிய தேஎம் முன்னி, வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி, செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே, 5வலன் ஆக!' என்றலும் நன்றுமன் தில்ல கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி, கொடுமரம் பிடித்த கோடா வன்கண், வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர், 10ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை, கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல் படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ, மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு, வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண், 15கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே.  

செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன் 

216. மருதம்
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள் தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல், நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு, வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் 5பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப் பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்; கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும், கழனி உழவர் குற்ற குவளையும், கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, 10பல் இளங் கோசர் கண்ணி அயரும், மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய பெருங் களிற்று எவ்வம் போல, 15வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே.  

தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார் 

217. பாலை
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, துவலை தூவல் கழிய, அகல் வயல் நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, 5பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, 10புலம்தொறும் குருகினம் நரல, கல்லென அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச் செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; 15நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, எயிறு தீப் பிறப்பத் திருகி, நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. 20

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார் 

218. குறிஞ்சி
'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, 5புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள், விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல், தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை, படாஅவாகும், எம் கண்' என, நீயும், 'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, 10வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய், வர எளிதாக எண்ணுதி; அதனால், நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் 15அடைய முயங்கேம்ஆயின், யாமும் விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே அன்னை அறியினும் அறிக! அலர் வாய் அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க! வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, 20ஒண் பூ வேங்கை கமழும் தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே!  

தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர் 

219. பாலை
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி, ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும், 'வாராயோ!' என்று ஏத்தி, பேர் இலைப் பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் பால் பெய் வள்ளம் சால்கை பற்றி, 5'என் பாடு உண்டனைஆயின், ஒரு கால், நுந்தை பாடும் உண்' என்று ஊட்டி, 'பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான் நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள் அறனிலாளனொடு இறந்தனள், இனி' என, 10மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் 'பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச் செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் பொரி அரை விளவின் புன் புற விளை புழல், அழல் எறி கோடை தூக்கலின், கோவலர் 15குழல் என நினையும் நீர் இல் நீள் இடை, மடத் தகை மெலியச் சாஅய், நடக்கும்கொல்? என, நோவல் யான  

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் 

220. நெய்தல்
ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ, தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும், கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர், கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய, மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் 5முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி, கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின், அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும் காணலாகா மாண் எழில் ஆகம் உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே 10நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின், முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும், பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண், நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து, காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், 15இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து, யாணர்த் தண் பணை உறும் என, கானல் ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள் 20நல் எழில் சிதையா ஏமம் சொல் இனித் தெய்ய, யாம் தௌயுமாறே.  

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் 

221. பாலை
நனை விளை நறவின் தேறல் மாந்தி, புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ, 'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என, வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால், புதுவது புனைந்த சேயிலை வெள் வேல், 5மதி உடம்பட்ட மை அணற் காளை வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து, தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின் தண் நறு முச்சி புனைய, அவனொடு கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை, 10களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ, இரும் பிடி இரியும் சோலை அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே.  

தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார் 

222. குறிஞ்சி
வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக் கான நாடன் உறீஇய நோய்க்கு, என் மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்; முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண், கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும், 5ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின், ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ, தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின், மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த ஆதிமந்தி காதலற் காட்டி, 10படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர், சென்மோ வாழி, தோழி! பல் நாள், உரவு உரும் ஏறொடு மயங்கி, இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே. 15

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லியது. - பரணர் 

223. பாலை
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? 'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர் மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி, ஆழல் வாழி, தோழி! கேழல் வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய் நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர், 5காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை, இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின் மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் 10அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட, நன் முகை அதிரல் போதொடு, குவளைத் தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின் 15

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ 

224. முல்லை
செல்க, பாக! எல்லின்று பொழுதே வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன் விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா, கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை, கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி, 5பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன, வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம் சிலம்பி நூலின் நுணங்குவன பாறி, சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக, புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில், 10தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள் ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல் அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ, வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என, 15சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால் அருங் கடி வியல் நகர் நோக்கி, வருந்துமால், அளியள் திருந்திழைதானே. 

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் 

225. பாலை
அன்பும், மடனும், சாயலும், இயல்பும், என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும், ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி, இன்றே இவணம் ஆகி, நாளை, புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற 5அகலா அம் துளை, கோடை முகத்தலின், நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல் ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து, யாத்த தூணித் தலை திறந்தவைபோல், 10பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர் கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர, மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச் சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், 15செறி தொடி முன்கை, நம் காதலி அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?  

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.