|
||||||||
அகர வருக்கம் |
||||||||
அருளெரும் பெயர்சிவ சத்தியி னுடனே
கருணையின் பெயருங் கருதப்பெறுமே. ....1
அனந்த னென்னும் பெயர்சிவனு மாதவனும்
சினந்தவிர் அருகனு நாலிரு தெய்வமும்
சேடனும் எனவே செப்புவர் புலவர். ....2
அரம்பை யெனும்பெயர் தெய்வப்பெண் பெயரும்
வாழையின் பெயரும் வழங்கப் பெறுமே. ....3
அரியெனும் பெயர்நித் திரையுமிரு சுடரும்
பரியுஞ் சிங்கமும் பகையுந் தேரையும்
பொன்னும் காற்றும் புரந்தரனு மாலும்
செந்நெற் கதிரும் கிளியும் காந்தியும்
தேரும் ஐம்மையுஞ் சேகும் வரியும்
கூர்மையு நிறமும் கூற்றும் வண்டும்
வேயும் பன்றியும் விசியும் புகையும்
பாயலுஞ் சிலம்பின் பரலும் சோலையும்
கண்ணில் வரியும் கடலும் உரகமும்
எண்ணிய திகிரியும் இகலியர் வாளும்
தகரும் வலியும் அரிசியும் குரங்கும்
புகரு நெருப்பும் புரையுஞ் சயனமும்
எறிதரு முரசமும் எண்படைக் கலமும்
குறிதரு பச்சையும் கூறிய மதுவும்
அரிதலும் நாற்பா னெழு பெயராமே. ....4
அண்ட ரெனும்பெயர் விண்டலத் தமரரும்
இடையரும் பகைஞரும் இயம்புவர் புலவர். ....5
அலரி யெனும்பெய ரலர்க்கணை ஐந்தும்
இரவியு மலருமோர் மரமு நீராவியுந்
தேனீயும் அழகும் செப்பப் பெறுமே. ....6
அருண னெனும்பெய ரருக்கனும் அவன்தேர்ப்
பாகனும் புதனும் பகர்ந்தனர் புலவர். ....7
அளக்க ரெனும்பெயர் சேறும் உப்பளமும்
கடலும் புடவியுங் கார்த்திகை நாளுமாம். ....8
அந்த மெனும்பெய ரருநெறி யுடனே
ஒருநாள் மீனும் உறுகவிப் பொருளும்
காடும் கனகமும் கையும் பாதியும்
கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....9
அணங்கனெனும் பெயரே ஆசையும் அழகும்
வருத்தமும் கொலையும் மையனோயும்
தெய்வமுந் தெய்வத்து வமைசொல் மாதுமாம். ....10
அங்கத மெனுபெய ரரவுந் தோளணியும்
வசைபுகல் கவிதையும் வழங்கப் பெறுமே. ....11
அரவ மெனுபெய ரோசையும் பாம்பு
சிலம்பும் எனவே செப்புவர் புலவர். ....12
அண்ட மெனும்பெயர் முட்டையும் விசும்புமாம். ....13
அம்பர மெனும்பெய ராடையும் விசும்பும்
கடலு மெனவே கருதப்பெறுமே. ....14
அஞ்சன மெனும்பெயர் கருமை நிறமும்
ஒருதிசை யானையு மெழுதுகண் மையுமாம். ....15
அங்கி யெனும்பெய ரனலும் சட்டையும். ....16
அயமெனும் பெயரே அறலும் குதிரையும்
குளமும் இரும்பும் தகருங் கூறுவர். ....17
அளக மெனுபெயர் புனலு மயிரும்
மயிர்க்குழற் சியுமென வகுத்தனர் புலார். ....18
அளறெனும் பெயரே நரகமும் சேறுமாம். ....19
அந்தரி யெனும்பெயர் துர்க்கையும் உமையுமாம். ....20
அல்கல் எனும் பெயர் தங்கலு நாளும்
கருங்கலும் இரவும் சிறுமையும் சொல்லுவர். ....21
அந்தி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தோர்
ஓசைப் பெயரு மாலையும் இரவுமாம். ....22
அடுப்பெனும் பெயரே யியம னாளும்
அச்சப் பெயருமுத் தானமு மாமே. ....23
அறுவை யெனும்பெயர் சித்திரை நாளும்
தூசும் எனவே சொல்லப் பெறுமே. ....24
அன்றில் எனும்பெயர் மூல நாளுமோர்
புள்ளும் எனவே புகன்றனர் புலவர். ....25
அகியெனும் பெயரே அரவும் இரும்புமாம். ....26
அணுவெனும் பெயரே நுண்மையும் உயிரும்
மந்திரப் பெயரும் வழங்கப் பெறுமே. ....27
அகலுள் எனும் பெயர் ஊரு நாடும்
பரப்பும் எனவே பகரப் பெறுமே. ....28
அவந்தி யெனும் பெயர் கிளியின் பெயரும்
உஞ்சேனை நகரமும் உரைத்தனர் புலவர். ....29
அருப்பம் எனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும்
சோலையின் பெயரும் நோயும் காடுமாம். ....30
அடையெனும் பெயரே இலையின் பெயரும்
அடுத்தலும் கனமும் அப்பமும் வழியுமாம். ....31
அருவி யெனும்பெயர் மலைச்சார் நதியுந்
தினைத்தாள் பெயரும் செப்பப் பெறுமே. ....32
அயிரி யெனும்பெயர் நுண்மணற் பெயரு
மீன்முள் ளரித்திடு கருவியும் விளம்புவர். ....33
அணையெனும் பெயரே மெத்தையும் சயனமும்
செய்கரைப் பெயரும் செப்பப் பெருமே. ....34
அகமெனும் பெயர்மரப் பொதுவும் சயிலமும்
இல்லமு மனமும் இடமும் பாவமும்
ஐந்திணைப் பொருளு டனுள்ளு மாமே. ....35
அங்கணம் எனும்பெயர் தூம்பு வாயிலு
முன்றிலுஞ் சேறும் மொழிந்தனர் புலவர். ....36
அரச னெனும்பெயர் வியாழமு மன்னனும். ....37
அன்னை யெனும்பெயர் முன்பிறந் தாளுந்
தாயும் துணைவியும் சாற்றப் பெறுமே. ....38
அம்மை யெனும்பெயர் தாயு மறுபிறப்பும்
யாப்பினோர் வனப்பும் இயம்பப் பெறுமே. ....39
அணியெனும் பெயரே அழகும் பெருமையும்
படையின துறுப்பும் இலக்கண அணியும்
பூணும் ஒப்பனையும் புகன்றனர் புலவர். ....40
அரத்தம் எனும்பெயர் அரத்தமும் சிவப்பும்
அரக்கும் கடம்பு மரத்தவுற் பலமுமாம். ....41
அடியெனும் பெயரே முதன்மையும் காலுங்
கவிதையின் பாதமும் செண்டும் வெளியுமாம். ....42
அரலையெனும் பெயர் அருங்கனி விதையும்
மாலும் கழலையின் பெயரும் வழங்குவர். ....43
அன்னமெனும் பெயர் சோறும் ஓதிமமுமாம். ....44
அக்கார மென்னும் பெயர்சருக் கரையும்
புடவையும் எனவே புகன்றனர் புலவர். ....45
அழனம் எனும்பெயர் அனலும் பிணமுமாம். ....46
அணியெ னும்பெய ரன்பும் நறவமும்
கொடையும் வண்டின் பெயரும் கூறுவர். ....47
அரிட்டம் எனும்பெயர் பிறவியிற் குற்றமும்
கள்ளும் காக்கையும் கருதப் பெறுமே. ....48
அத்தெனும் பெயரே அசைச்சொல்லும் சிவப்பும்
இசைப்புந் துன்னமும் அரைப்பட் டிகையுமாம். ....49
அக்கெனும் பெயரே சங்கின் மணியும்
ஏற்றின் முரிப்பும் எலும்பும் இயம்புவர். ....50
அராகம் எனும்பெயர் பாழையாழ்த் திறமும்
செந்நிறப் பெயரு முடுகியற் கவிதையும்
ஆசையின் பெயரு மாமென வழங்குவர். ....51
அனந்தம் எனும்பெயர் பொன்னும் ஆகாயமும்
அளவின் மைப்பொருட் பெயரு மாமே. ....52
அலங்கல் எனும்பெயர் அசைவும் தொடையலும்
இலங்கலும் தளிரும் இயம்புவர் புலவர். ....53
அரத்தை யெனும்பெயர் குறிஞ்சி யாழிசையும்
துன்பமும் என்னச் சொல்லுவர் புலவர். ....54
அடலெனும் பெயரே சமரும் பெலமும்
வென்றியும் எனவே விளம்பப் பெறுமே. ....55
அயிலெனும் பெயரே வேலுங் கூர்மையும்
ஆர்தலின் பெயரு மாகு மென்ப. ....56
அரணம் எனும்பெயர் காவற் காடும்
வேலுங் காவலும் மதிலும் கவசமும். ....57
அம்பண மென்னும் பெயர்மரக் கலமும்
கதலித் தண்டும் நீர்ப்பந்தலுந் தூம்பும்
ஆமையின் பெயரு மாமெனப் புகலுவர். ....58
அளித்தல் எனும்பெயர் கொடுத்தலும் காத்தலும்
செறிவும் எனவே செப்புவர் புலவர். ....59
அச்சம் எனும்பெயர் அகத்தியும் பயமுமாம். ....60
அருணம் எனும் பெயர் செம்மறி யாடும்
மானும் எலுமிச்சுஞ் சிவப்பும் வழங்குக. ....61
அந்தம் எனும்பெயர் அழகு முடிவுமாம். ....62
அம்பல் எனும்பெயர் பழிமொழி யுடனே
சிலரறிந்து தம்முட் புறங்கூறல் செப்புவர். ....63
அலரெனும் பெயர்பழி மொழியும் பூவும்
பலரரிந் தலர்தூற் றுதலும் பகருவர். ....64
அரற்றல் எனும்பெயர் அழுகையும் ஒலித்தலும். ....65
அஞ்சலி எனும்பெயர் அஞ்சலித் திறைஞ்சலும்
வாவற் பறவையும் வகுத்தனர் புலவர். ....66
அலகெனும் பெயரே நுளம்பும் சோதிடமும்
நெற்கதி ராதியும் பலகறைப் பெயரும்
மகிழின் பரலும் புல்வாயுந் துடைப்பமும். ....67
அல்லி யெனும் பெயர் காசை மரமும்
வெள்ளாம் பலுமக விதழும் விளம்புவர். ....68
அதமெனும் பெயர்பா தாளமும் கீழும்
இறங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். ....69
அரமெனும் பெயரே பலபொருள் வடிவின்
அருகும் அராவும் கருவியு மாமே. ....70
அகைத்தல் எனும்பெயர் அறுத்தலும் ஒலித்தலும்
ஈர்த்தலும் எனவே இயம்பப் பெறுமே. ....71
அசியெனும் பெயரே அவமதிச் சிரிப்பும்
வசிதரு வாளும் படைக்கலப் பொதுவுமாம். ....72
அமரர் எனும்பெயர் அடுபடை வீரரும்
தேவரும் எனவே செப்புவர் புலவர். ....73
அந்தணர் எனும்பெயர் அறவோர் பெயரும்
பூசுரர் பெயரும் புகலுவர் புலவர். ....74
அள்ளெனும் பெயரே காதும் கூர்மையும்
வரிபத் திரும்பும் வன்மையும் செறிவுமாம். ....75
அலம்எனும் பெயரே அமைவும் கலப்பையும். ....76
அயிரெனும் பெயரே சருக்கரைப் பெயரும்
நுண்மணற் பெயரும் நுண்மையும் நுவலுவர். ....77
அண்டசம் எனும்பெயர் அரவும் தவளையும்
நண்டு முதலையு மாமையு மீனும்
உடும்பும் ஓந்தியும் பல்லியும் அரணையும்
பறவையும் இப்பியும் பகர்ந்தனர் புலவர். ....78
அற்றம் எனும்பெயர் மறைவும் அவகாசமு
முடிவும் எனவே மொழியப் பெறுமே. ....79
அருச்சுனம் எனும்பெயர் மருதுவும் வெளுப்புமாம் ....80
அத்தி யெனும்பெய ரதவு மியானையும்
உவரியும் எலும்பும் உரைக்கப் பெறுமே. ....81
அந்தில் எனும்பெயர் அசைச்சொல்லு மிடமுமாம். ....82
அம்மெனும் பெயரே அசைச்சொல்லு மழகும்
புனலின் பெயரும் புகலப் பெறுமே. ....83
அம்பெனும் பெயரே மேகமும் புனலும்
கணையு மூங்கிலுங் கருதப் பெறுமே. ....84
அகளம் எனும்பெயர் தாழியும் மிடாவுமாம். ....85
அங்காரக மெனும்பெயர் பூசு வனவும்
நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர். ....86
அஞரெனும் பெயரே அறிவிலோர் பெயரும்
துக்கமும் எனவே சொல்லுவர் புலவர். ....87
அந்தகர் எனும் பெயர் குருடருங் கூற்றுமாம். ....88
அரக்கெனும் பெயரே மதுவிலோர் விகற்பமும்
சிவப்புஞ் சென்னிற மெழுகும் செப்புவர். ....89
அகவல் எனும்பெயர் கூத்துமாசி ரியப்பாவும். ....90
அரங்கம் எனும்பெயர் ஆற்றிடைக் குறையும்
போரிடம் வட்டா டிடமும் சபையும்
கூத்தா டுமிடப் பெயருங் கூறுவர். ....91
அன்னல் எனும்பெயர் நாகமும் சேறுமாம். ....92
அழுங்கல் எனும்பெயர் ஆர வாரமும்
இரங்கலும் கேடும் இசைக்கப் பெறுமே. ....93
அறலெனும் பெயரே நீரு நீர்த்திரையும்
விழவும் நுண்மணலும் விளம்புவர் புலவர். ....94
அளையெனும் பெயரே தயிரும் வன்மீகவும்
உம்மையும் பாளியும் மோர்இன்மைப் பெயருமாம். ....95
அங்கம் எனும்பெயர் உடலும் உறுப்பும்
ஆறங்கமும் கட்டிலும் எலும்பு மாமே. ....96
அழுவ மெனும்பெயர் துருக்கமும் பரப்பும்
நாடும் எனவே நவின்றனர் புலவர். ....97
அறுகெனும் பெயரே யாளியும் சிங்கமும்
புலியும் யானையும் புல்லினோர் விகற்புமாம். ....98
அத்திரி யெனும்பெயர் மலையும் குதிரையும்
கழுதையும் ஒட்டகப் பெயரும் கருதுவர். ....99
அறையெனும் பெயர்மலை முழையும் பாறையும்
சிற்றிலும் மொழியும் செப்பப் பெறுமே. ....100
அரிலெனும் பெயர்சிறு தூறும் பிணக்கமும்
குற்றமும் பரலும் கூறுவர் புலவர். ....101
அவலெனும் பெயர்நீர் நிலையும் பள்ளமும்
முளையு நெற்பெறு சிற்றுண்டியு மொழிகுவர். ....102
அண்ணை யெனும்பெயர் அறிவிலோன் பெயரும்
பேயின் பெயரும் பேசப் பெறுமே. ....103
அகப்பா வெனும்பெயர் மதிளுமுள் ளுயரத்துப்
பொருந்திய மேடையின் பெயரும் புலம்புவர். ....104
அசமெ னும்பெயர் புருவை யாடும்
மூவாட்டை நெல்லின் பெயரு மொழிகுவர். ....105
அசனி யெனும்பெயர் வச்சிரா யுதமும்
இடியின் பெயரும் இயம்பப் பெறுமே. ....106
அல்லெனும் பெயரே இரவும் இருளுமாம். ....107
அரிதம் எனும்பெயர் பசுமையும் திசையும்
பசும்புற் றரையும் பகரப் பெறுமே. ....108
அகடெனும் பெயரே வயிறும் புறமுமாம். ....109
அமரல் எனும்பெயர் மிடைதலும் பொலிவுமாம். ....110
அருகல் எனும்பெயர் கருங்கலுஞ் சார்தலும். ....111
அடுதல் எனும்பெயர் அடர்தலும் கொலையும்
பலபொருள் பாகப் படுத்தலின் பெயருமாம். ....112
அவிர்தல் எனும்பெயர் பீறலும் ஒளியுமாம். ....113
அம்பி யெனும்பெயர் தெப்பமும் தோணியும்
நீர்மே லோடு வனவு நிகழ்த்துவர். ....114
அந்தர மெனும்பெயர் பேத முடிவும்
விண்ணி னிடமும் விளம்பப் பெறுமே. ....115
அங்கா ரகனெனும் பெயருதா சனனும்
செவ்வாய்ப் பெயரும் செப்பப் பெறுமே. ....116
அடரெனும் பெயரே ஐமை வடிவும்
நெருங்குதற் பெயரு நிகழ்த்தப் பெறுமே. ....117
அரங்கெனும் பெயரே மனையின் விகற்பமும்
சபையும் வட்டா டிடமும்ஓ ரிடமுமாம். ....118
அயன மெனும்பெயர் ஆண்டிற் பாதியும்
வழியும் எனவே வகுத்தனர் புலவர். ....119
அமலை யெனும்பெயர் உமையவள் பெயரும்
ஆர வார மும்சபைப் பெயருமாம். ....120
அலவன் எனும்பெயர் நண்டும் பூஞையும்
நிலவுங் கடக ராசியும் நிகழ்த்துவர். ....121
அரசெனும் பெயரோர் தருவு மன்னனும்
ராச்சியப் பெயரும் இயம்பப் பெறுமே. ....122
அறிக்கை எனும்பெயர் அறிதலின் பெயரும்
பற்று வித்தலின் பெயரும் பகருவர். ....123
அதரெனும் பெயரே புழுதியும் வழியும்
நுண்மணற் பெயரு நுவலப் பெறுமே. ....124
அருந்த வெனும்பெயர் அருமையும் பொசித்தலும். ....125
அத்தன் எனும்பெயர் ஈசனும் குருவும்
தந்தையும் எனவே சாற்றினர் புலவர். ....126
அனித்தியம் எனும்பெயர் நிலையாமை பொய்யுமாம். ....127
அண்ணல் எனும்பெயர் தலைவனும் பெருமையும். ....128
அச்சுதன் எனும்பெயர் அமுதிறை பெயருங்
கண்ணனும் அசோகமர் கடவுள் பெயருமாம். ....129
அனுவெனும் பெயரே தொடர்ச்சியும் கவுளுமாம். ....130
அமுதம் எனும்பெயர் முத்தியும் பெருமையும்
புனலும் பயசும் புலவ ருணவுடன்
மேகமும் எனவே விளம்புவர் புலவர். ....131
அம்பரம் எனும்பெயர் அம்புடன் ஆனையிற்
பிறகா லுமெனப் பேசுவர் புலவர். ....132
அலையெனும் பெயரே கடலும் கடற்றிரைப்
பெயரும் எனவே பேசப் பெறுமே. ....133
அராவல் எனும்பெயர் புரைதலும் குறுகலும். ....134
அரணி யெனும்பெயர் தீக்கடை கோலும்
கவசமு மதிலும் கருதப் பெறுமே. ....135
அற்பம் எனும்பெயர் சிறுமையும் நாயுமாம். ....136
அழுக்கா றெனும்பெயர் பொறாமையின் பெயரும்
மனக்கோட் டத்தின் பெயரும் வழங்குவர். ....137
அனங்கம் எனும்பெயர் மல்லிகைப் பெயரும்
இருவாட் சியுமென இயம்புவர் புலவர். ....138
அசையெனும் பெயரீ ரசைகளும் அசைச்சொல்லும். ....139
அமுதெனும் பெயரே பாலும் இன்கதையும்
தெய்வ வுணவின் விகற்பமும் செப்புவர். ....140
அசோக மெனும்பெய ரசோகின் தருவும்
இன்பமும் எனவே இயம்பப் பெறுமே. ....141
அசைத்தல் எனும் பெயர் அசைத்தலின் பெயரும்
கட்டுதற் பெயரும் கருதுவர் புலவர். ....142
அருளெரும் பெயர்சிவ சத்தியி னுடனே கருணையின் பெயருங் கருதப்பெறுமே. ....1
அனந்த னென்னும் பெயர்சிவனு மாதவனும் சினந்தவிர் அருகனு நாலிரு தெய்வமும் சேடனும் எனவே செப்புவர் புலவர். ....2
அரம்பை யெனும்பெயர் தெய்வப்பெண் பெயரும் வாழையின் பெயரும் வழங்கப் பெறுமே. ....3
அரியெனும் பெயர்நித் திரையுமிரு சுடரும் பரியுஞ் சிங்கமும் பகையுந் தேரையும் பொன்னும் காற்றும் புரந்தரனு மாலும் செந்நெற் கதிரும் கிளியும் காந்தியும் தேரும் ஐம்மையுஞ் சேகும் வரியும் கூர்மையு நிறமும் கூற்றும் வண்டும் வேயும் பன்றியும் விசியும் புகையும் பாயலுஞ் சிலம்பின் பரலும் சோலையும் கண்ணில் வரியும் கடலும் உரகமும் எண்ணிய திகிரியும் இகலியர் வாளும் தகரும் வலியும் அரிசியும் குரங்கும் புகரு நெருப்பும் புரையுஞ் சயனமும் எறிதரு முரசமும் எண்படைக் கலமும் குறிதரு பச்சையும் கூறிய மதுவும் அரிதலும் நாற்பா னெழு பெயராமே. ....4
அண்ட ரெனும்பெயர் விண்டலத் தமரரும் இடையரும் பகைஞரும் இயம்புவர் புலவர். ....5
அலரி யெனும்பெய ரலர்க்கணை ஐந்தும் இரவியு மலருமோர் மரமு நீராவியுந் தேனீயும் அழகும் செப்பப் பெறுமே. ....6
அருண னெனும்பெய ரருக்கனும் அவன்தேர்ப் பாகனும் புதனும் பகர்ந்தனர் புலவர். ....7
அளக்க ரெனும்பெயர் சேறும் உப்பளமும் கடலும் புடவியுங் கார்த்திகை நாளுமாம். ....8
அந்த மெனும்பெய ரருநெறி யுடனே ஒருநாள் மீனும் உறுகவிப் பொருளும் காடும் கனகமும் கையும் பாதியும் கண்ணா டியுமெனக் கருதுவர் புலவர். ....9
அணங்கனெனும் பெயரே ஆசையும் அழகும் வருத்தமும் கொலையும் மையனோயும் தெய்வமுந் தெய்வத்து வமைசொல் மாதுமாம். ....10
அங்கத மெனுபெய ரரவுந் தோளணியும் வசைபுகல் கவிதையும் வழங்கப் பெறுமே. ....11
அரவ மெனுபெய ரோசையும் பாம்பு சிலம்பும் எனவே செப்புவர் புலவர். ....12
அண்ட மெனும்பெயர் முட்டையும் விசும்புமாம். ....13
அம்பர மெனும்பெய ராடையும் விசும்பும் கடலு மெனவே கருதப்பெறுமே. ....14
அஞ்சன மெனும்பெயர் கருமை நிறமும் ஒருதிசை யானையு மெழுதுகண் மையுமாம். ....15
அங்கி யெனும்பெய ரனலும் சட்டையும். ....16
அயமெனும் பெயரே அறலும் குதிரையும் குளமும் இரும்பும் தகருங் கூறுவர். ....17
அளக மெனுபெயர் புனலு மயிரும் மயிர்க்குழற் சியுமென வகுத்தனர் புலார். ....18
அளறெனும் பெயரே நரகமும் சேறுமாம். ....19
அந்தரி யெனும்பெயர் துர்க்கையும் உமையுமாம். ....20
அல்கல் எனும் பெயர் தங்கலு நாளும் கருங்கலும் இரவும் சிறுமையும் சொல்லுவர். ....21
அந்தி யெனும்பெயர் பாலையாழ்த் திறத்தோர் ஓசைப் பெயரு மாலையும் இரவுமாம். ....22
அடுப்பெனும் பெயரே யியம னாளும் அச்சப் பெயருமுத் தானமு மாமே. ....23
அறுவை யெனும்பெயர் சித்திரை நாளும் தூசும் எனவே சொல்லப் பெறுமே. ....24
அன்றில் எனும்பெயர் மூல நாளுமோர் புள்ளும் எனவே புகன்றனர் புலவர். ....25
அகியெனும் பெயரே அரவும் இரும்புமாம். ....26
அணுவெனும் பெயரே நுண்மையும் உயிரும் மந்திரப் பெயரும் வழங்கப் பெறுமே. ....27
அகலுள் எனும் பெயர் ஊரு நாடும் பரப்பும் எனவே பகரப் பெறுமே. ....28
அவந்தி யெனும் பெயர் கிளியின் பெயரும் உஞ்சேனை நகரமும் உரைத்தனர் புலவர். ....29
அருப்பம் எனும்பெயர் ஊர்ப்பொதுப் பெயரும் சோலையின் பெயரும் நோயும் காடுமாம். ....30
அடையெனும் பெயரே இலையின் பெயரும் அடுத்தலும் கனமும் அப்பமும் வழியுமாம். ....31
அருவி யெனும்பெயர் மலைச்சார் நதியுந் தினைத்தாள் பெயரும் செப்பப் பெறுமே. ....32
அயிரி யெனும்பெயர் நுண்மணற் பெயரு மீன்முள் ளரித்திடு கருவியும் விளம்புவர். ....33
அணையெனும் பெயரே மெத்தையும் சயனமும் செய்கரைப் பெயரும் செப்பப் பெருமே. ....34
அகமெனும் பெயர்மரப் பொதுவும் சயிலமும் இல்லமு மனமும் இடமும் பாவமும் ஐந்திணைப் பொருளு டனுள்ளு மாமே. ....35
அங்கணம் எனும்பெயர் தூம்பு வாயிலு முன்றிலுஞ் சேறும் மொழிந்தனர் புலவர். ....36
அரச னெனும்பெயர் வியாழமு மன்னனும். ....37
அன்னை யெனும்பெயர் முன்பிறந் தாளுந் தாயும் துணைவியும் சாற்றப் பெறுமே. ....38
அம்மை யெனும்பெயர் தாயு மறுபிறப்பும் யாப்பினோர் வனப்பும் இயம்பப் பெறுமே. ....39
அணியெனும் பெயரே அழகும் பெருமையும் படையின துறுப்பும் இலக்கண அணியும் பூணும் ஒப்பனையும் புகன்றனர் புலவர். ....40
அரத்தம் எனும்பெயர் அரத்தமும் சிவப்பும் அரக்கும் கடம்பு மரத்தவுற் பலமுமாம். ....41
அடியெனும் பெயரே முதன்மையும் காலுங் கவிதையின் பாதமும் செண்டும் வெளியுமாம். ....42
அரலையெனும் பெயர் அருங்கனி விதையும் மாலும் கழலையின் பெயரும் வழங்குவர். ....43
அன்னமெனும் பெயர் சோறும் ஓதிமமுமாம். ....44
அக்கார மென்னும் பெயர்சருக் கரையும் புடவையும் எனவே புகன்றனர் புலவர். ....45
அழனம் எனும்பெயர் அனலும் பிணமுமாம். ....46
அணியெ னும்பெய ரன்பும் நறவமும் கொடையும் வண்டின் பெயரும் கூறுவர். ....47
அரிட்டம் எனும்பெயர் பிறவியிற் குற்றமும் கள்ளும் காக்கையும் கருதப் பெறுமே. ....48
அத்தெனும் பெயரே அசைச்சொல்லும் சிவப்பும் இசைப்புந் துன்னமும் அரைப்பட் டிகையுமாம். ....49
அக்கெனும் பெயரே சங்கின் மணியும் ஏற்றின் முரிப்பும் எலும்பும் இயம்புவர். ....50
அராகம் எனும்பெயர் பாழையாழ்த் திறமும் செந்நிறப் பெயரு முடுகியற் கவிதையும் ஆசையின் பெயரு மாமென வழங்குவர். ....51
அனந்தம் எனும்பெயர் பொன்னும் ஆகாயமும் அளவின் மைப்பொருட் பெயரு மாமே. ....52
அலங்கல் எனும்பெயர் அசைவும் தொடையலும் இலங்கலும் தளிரும் இயம்புவர் புலவர். ....53
அரத்தை யெனும்பெயர் குறிஞ்சி யாழிசையும் துன்பமும் என்னச் சொல்லுவர் புலவர். ....54
அடலெனும் பெயரே சமரும் பெலமும் வென்றியும் எனவே விளம்பப் பெறுமே. ....55
அயிலெனும் பெயரே வேலுங் கூர்மையும் ஆர்தலின் பெயரு மாகு மென்ப. ....56
அரணம் எனும்பெயர் காவற் காடும் வேலுங் காவலும் மதிலும் கவசமும். ....57
அம்பண மென்னும் பெயர்மரக் கலமும் கதலித் தண்டும் நீர்ப்பந்தலுந் தூம்பும் ஆமையின் பெயரு மாமெனப் புகலுவர். ....58
அளித்தல் எனும்பெயர் கொடுத்தலும் காத்தலும் செறிவும் எனவே செப்புவர் புலவர். ....59
அச்சம் எனும்பெயர் அகத்தியும் பயமுமாம். ....60
அருணம் எனும் பெயர் செம்மறி யாடும் மானும் எலுமிச்சுஞ் சிவப்பும் வழங்குக. ....61
அந்தம் எனும்பெயர் அழகு முடிவுமாம். ....62
அம்பல் எனும்பெயர் பழிமொழி யுடனே சிலரறிந்து தம்முட் புறங்கூறல் செப்புவர். ....63
அலரெனும் பெயர்பழி மொழியும் பூவும் பலரரிந் தலர்தூற் றுதலும் பகருவர். ....64
அரற்றல் எனும்பெயர் அழுகையும் ஒலித்தலும். ....65
அஞ்சலி எனும்பெயர் அஞ்சலித் திறைஞ்சலும் வாவற் பறவையும் வகுத்தனர் புலவர். ....66
அலகெனும் பெயரே நுளம்பும் சோதிடமும் நெற்கதி ராதியும் பலகறைப் பெயரும் மகிழின் பரலும் புல்வாயுந் துடைப்பமும். ....67
அல்லி யெனும் பெயர் காசை மரமும் வெள்ளாம் பலுமக விதழும் விளம்புவர். ....68
அதமெனும் பெயர்பா தாளமும் கீழும் இறங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். ....69
அரமெனும் பெயரே பலபொருள் வடிவின் அருகும் அராவும் கருவியு மாமே. ....70
அகைத்தல் எனும்பெயர் அறுத்தலும் ஒலித்தலும் ஈர்த்தலும் எனவே இயம்பப் பெறுமே. ....71
அசியெனும் பெயரே அவமதிச் சிரிப்பும் வசிதரு வாளும் படைக்கலப் பொதுவுமாம். ....72
அமரர் எனும்பெயர் அடுபடை வீரரும் தேவரும் எனவே செப்புவர் புலவர். ....73
அந்தணர் எனும்பெயர் அறவோர் பெயரும் பூசுரர் பெயரும் புகலுவர் புலவர். ....74
அள்ளெனும் பெயரே காதும் கூர்மையும் வரிபத் திரும்பும் வன்மையும் செறிவுமாம். ....75
அலம்எனும் பெயரே அமைவும் கலப்பையும். ....76
அயிரெனும் பெயரே சருக்கரைப் பெயரும் நுண்மணற் பெயரும் நுண்மையும் நுவலுவர். ....77
அண்டசம் எனும்பெயர் அரவும் தவளையும் நண்டு முதலையு மாமையு மீனும் உடும்பும் ஓந்தியும் பல்லியும் அரணையும் பறவையும் இப்பியும் பகர்ந்தனர் புலவர். ....78
அற்றம் எனும்பெயர் மறைவும் அவகாசமு முடிவும் எனவே மொழியப் பெறுமே. ....79
அருச்சுனம் எனும்பெயர் மருதுவும் வெளுப்புமாம் ....80
அத்தி யெனும்பெய ரதவு மியானையும் உவரியும் எலும்பும் உரைக்கப் பெறுமே. ....81
அந்தில் எனும்பெயர் அசைச்சொல்லு மிடமுமாம். ....82
அம்மெனும் பெயரே அசைச்சொல்லு மழகும் புனலின் பெயரும் புகலப் பெறுமே. ....83
அம்பெனும் பெயரே மேகமும் புனலும் கணையு மூங்கிலுங் கருதப் பெறுமே. ....84
அகளம் எனும்பெயர் தாழியும் மிடாவுமாம். ....85
அங்காரக மெனும்பெயர் பூசு வனவும் நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர். ....86
அஞரெனும் பெயரே அறிவிலோர் பெயரும் துக்கமும் எனவே சொல்லுவர் புலவர். ....87
அந்தகர் எனும் பெயர் குருடருங் கூற்றுமாம். ....88
அரக்கெனும் பெயரே மதுவிலோர் விகற்பமும் சிவப்புஞ் சென்னிற மெழுகும் செப்புவர். ....89
அகவல் எனும்பெயர் கூத்துமாசி ரியப்பாவும். ....90
அரங்கம் எனும்பெயர் ஆற்றிடைக் குறையும் போரிடம் வட்டா டிடமும் சபையும் கூத்தா டுமிடப் பெயருங் கூறுவர். ....91
அன்னல் எனும்பெயர் நாகமும் சேறுமாம். ....92
அழுங்கல் எனும்பெயர் ஆர வாரமும் இரங்கலும் கேடும் இசைக்கப் பெறுமே. ....93
அறலெனும் பெயரே நீரு நீர்த்திரையும் விழவும் நுண்மணலும் விளம்புவர் புலவர். ....94
அளையெனும் பெயரே தயிரும் வன்மீகவும் உம்மையும் பாளியும் மோர்இன்மைப் பெயருமாம். ....95
அங்கம் எனும்பெயர் உடலும் உறுப்பும் ஆறங்கமும் கட்டிலும் எலும்பு மாமே. ....96
அழுவ மெனும்பெயர் துருக்கமும் பரப்பும் நாடும் எனவே நவின்றனர் புலவர். ....97
அறுகெனும் பெயரே யாளியும் சிங்கமும் புலியும் யானையும் புல்லினோர் விகற்புமாம். ....98
அத்திரி யெனும்பெயர் மலையும் குதிரையும் கழுதையும் ஒட்டகப் பெயரும் கருதுவர். ....99
அறையெனும் பெயர்மலை முழையும் பாறையும் சிற்றிலும் மொழியும் செப்பப் பெறுமே. ....100
அரிலெனும் பெயர்சிறு தூறும் பிணக்கமும் குற்றமும் பரலும் கூறுவர் புலவர். ....101
அவலெனும் பெயர்நீர் நிலையும் பள்ளமும் முளையு நெற்பெறு சிற்றுண்டியு மொழிகுவர். ....102
அண்ணை யெனும்பெயர் அறிவிலோன் பெயரும் பேயின் பெயரும் பேசப் பெறுமே. ....103
அகப்பா வெனும்பெயர் மதிளுமுள் ளுயரத்துப் பொருந்திய மேடையின் பெயரும் புலம்புவர். ....104
அசமெ னும்பெயர் புருவை யாடும் மூவாட்டை நெல்லின் பெயரு மொழிகுவர். ....105
அசனி யெனும்பெயர் வச்சிரா யுதமும் இடியின் பெயரும் இயம்பப் பெறுமே. ....106
அல்லெனும் பெயரே இரவும் இருளுமாம். ....107
அரிதம் எனும்பெயர் பசுமையும் திசையும் பசும்புற் றரையும் பகரப் பெறுமே. ....108
அகடெனும் பெயரே வயிறும் புறமுமாம். ....109
அமரல் எனும்பெயர் மிடைதலும் பொலிவுமாம். ....110
அருகல் எனும்பெயர் கருங்கலுஞ் சார்தலும். ....111
அடுதல் எனும்பெயர் அடர்தலும் கொலையும் பலபொருள் பாகப் படுத்தலின் பெயருமாம். ....112
அவிர்தல் எனும்பெயர் பீறலும் ஒளியுமாம். ....113
அம்பி யெனும்பெயர் தெப்பமும் தோணியும் நீர்மே லோடு வனவு நிகழ்த்துவர். ....114
அந்தர மெனும்பெயர் பேத முடிவும் விண்ணி னிடமும் விளம்பப் பெறுமே. ....115
அங்கா ரகனெனும் பெயருதா சனனும் செவ்வாய்ப் பெயரும் செப்பப் பெறுமே. ....116
அடரெனும் பெயரே ஐமை வடிவும் நெருங்குதற் பெயரு நிகழ்த்தப் பெறுமே. ....117
அரங்கெனும் பெயரே மனையின் விகற்பமும் சபையும் வட்டா டிடமும்ஓ ரிடமுமாம். ....118
அயன மெனும்பெயர் ஆண்டிற் பாதியும் வழியும் எனவே வகுத்தனர் புலவர். ....119
அமலை யெனும்பெயர் உமையவள் பெயரும் ஆர வார மும்சபைப் பெயருமாம். ....120
அலவன் எனும்பெயர் நண்டும் பூஞையும் நிலவுங் கடக ராசியும் நிகழ்த்துவர். ....121
அரசெனும் பெயரோர் தருவு மன்னனும் ராச்சியப் பெயரும் இயம்பப் பெறுமே. ....122
அறிக்கை எனும்பெயர் அறிதலின் பெயரும் பற்று வித்தலின் பெயரும் பகருவர். ....123
அதரெனும் பெயரே புழுதியும் வழியும் நுண்மணற் பெயரு நுவலப் பெறுமே. ....124
அருந்த வெனும்பெயர் அருமையும் பொசித்தலும். ....125
அத்தன் எனும்பெயர் ஈசனும் குருவும் தந்தையும் எனவே சாற்றினர் புலவர். ....126
அனித்தியம் எனும்பெயர் நிலையாமை பொய்யுமாம். ....127
அண்ணல் எனும்பெயர் தலைவனும் பெருமையும். ....128
அச்சுதன் எனும்பெயர் அமுதிறை பெயருங் கண்ணனும் அசோகமர் கடவுள் பெயருமாம். ....129
அனுவெனும் பெயரே தொடர்ச்சியும் கவுளுமாம். ....130
அமுதம் எனும்பெயர் முத்தியும் பெருமையும் புனலும் பயசும் புலவ ருணவுடன் மேகமும் எனவே விளம்புவர் புலவர். ....131
அம்பரம் எனும்பெயர் அம்புடன் ஆனையிற் பிறகா லுமெனப் பேசுவர் புலவர். ....132
அலையெனும் பெயரே கடலும் கடற்றிரைப் பெயரும் எனவே பேசப் பெறுமே. ....133
அராவல் எனும்பெயர் புரைதலும் குறுகலும். ....134
அரணி யெனும்பெயர் தீக்கடை கோலும் கவசமு மதிலும் கருதப் பெறுமே. ....135
அற்பம் எனும்பெயர் சிறுமையும் நாயுமாம். ....136
அழுக்கா றெனும்பெயர் பொறாமையின் பெயரும் மனக்கோட் டத்தின் பெயரும் வழங்குவர். ....137
அனங்கம் எனும்பெயர் மல்லிகைப் பெயரும் இருவாட் சியுமென இயம்புவர் புலவர். ....138
அசையெனும் பெயரீ ரசைகளும் அசைச்சொல்லும். ....139
அமுதெனும் பெயரே பாலும் இன்கதையும் தெய்வ வுணவின் விகற்பமும் செப்புவர். ....140
அசோக மெனும்பெய ரசோகின் தருவும் இன்பமும் எனவே இயம்பப் பெறுமே. ....141
அசைத்தல் எனும் பெயர் அசைத்தலின் பெயரும் கட்டுதற் பெயரும் கருதுவர் புலவர். ....142
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|