அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி - 2 ஏவுகணை நேற்று ஒடிசா மாநிலம் வீலர் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ராணுவத்தின் சார்பு நிறுவனமான, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின், ஐதராபாத்தில் உள்ள, "அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் லேபரட்டரி' நிறுவனம், "அக்னி' ஏவுகணைகளை தயாரிக்கிறது.அதிகபட்சம், 5,000 கி.மீ., வரை பறந்து சென்று தாக்கும், "அக்னி-5' ஏவுகணைகள், ராணுவம் வசம் உள்ளன. இந்த வரிசையில், 2,000 கி.மீ., சென்று தாக்கக்கூடிய, அக்னி-2 ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.
|