LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- புதுமைப்பித்தன்

ஒப்பந்தம்

 

பார்வதிநாதனுக்கு பி.ஏ. பாசாகிவிட்டது. அது மட்டுமல்ல. ஸர்வீஸ் கமிஷன் பரீட்சையிலும் முதல் தொகுதியில் வந்துவிட்டான். சீக்கிரத்தில் வேலையாகிவிடும். கலியாணம் ஒன்றுதான் பாக்கி. அதையும் செய்து முடித்துவிட்டால் பையனைப் பற்றிய கவலை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தார் சங்கரலிங்கம் பிள்ளை.
ஒரு நாள் காலை. பிள்ளையவர்கள், தாம்பிரவர்ணியின் ஸ்நான இன்பம், நீண்ட பூஜை முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளியான காலை போஜனத்தை முடித்துக் கொண்டதும், சுக ஜீவனத்தின் குதூகலத்தை அனுபவித்தவராய், "ஏளா, அங்கே என்ன செய்யுதே" என்று தமது பத்தினியைக் கூப்பிட்டார்.
"என்ன, நீங்களா கூப்பிட்டிய; இன்னா வாரேன்."
"நம்ம குட்டிக்கு" - பார்வதிநாதனின் செல்லப் பெயர் - "பொண்ணு பார்க்க வேண்டாமா?"
"எனக்கென்ன தெரியும்? நீங்க சொல்லுதது சதி. நம்ப சிங்கிகுளத்துப் பொண்ணெப் பாத்தா என்ன? பொண்ணு நல்ல செவத்த பொண்ணு; கண்ணும் முளியும் அப்படியே பாத்துக்கிட்டே இருக்கலாம். ஆனா, புள்ளையவாளுக்குப் பிடிக்குமோ என்னமோ? இந்தக் காலத்துப் புள்ளையளை என்ன சொல்ல?"
"அதாரு, சிங்கிகுளத்திலே?"
"என்ன உங்களுக்குத் தெரியாதாக்கும்? பேட்டையக்கா இருக்காஹள்ள, பார்வதியக்கா, அவளுக்கு ஒண்ணுவிட்ட தம்பி மக."
"சரி! சரி! நம்ம சுப்பராயப்பிள்ளை மகளா? என்ன நகை போடுவா?"
"அது எனக்கென்ன தெரியும்? கோமதியக்காக்கிட்ட விசாரிச்சா தெரியும். நா அவளைக் கூப்பிடுதேன்" என்று வெளியே சென்று ஒரு விதவையைக் கூப்பிட்டு வந்தாள்.
"அம்மா, வா. இரி. நம்ம குட்டிக்கு இவ என்னமோ சிங்கி கொளத்துப் பொண்ணு ஒண்ணு இருக்காமே. அதைப் பாக்கலாமென்னு சொல்லுதா. நீ என்னமோ, பாத்திருக்கியாமே. அதெப்படி நகை என்னம்மா போடுவா?" என்று கேட்டார் சங்கரலிங்கம் பிள்ளை.
"அதா, நல்ல எடமாச்சே. பொண்ணு தங்கமான கொணம். அவுஹளும் அப்படித்தான். என்னமோ ரெண்டு ஆயிரத்துக்கு செய்வாஹ இன்னு சொல்லி இருந்தாஹ."
"இம்புட்டுத்தானே! சதி, சதி. பேச்செ விட்டுத் தள்ளு. நம்ம பேட்டைப்பிள்ளை ஐயாயிரம் நகை மருக, கலியாணச் செலவு ஒரு ரெண்டாயிரம் யென்று சொன்னாரே!"
"ஆமா, பொண்ணு கறுப்பில்லியா? எதுக்கும் கேட்டுப் பாருங்களேன்."
"சதி, நீ என்ன சொல்லுதே?"
"பாத்தா என்ன? நானும் அக்காளும் போயிட்டுத்தான் வாரமே!" என்றாள்.
"சதி, நாளைக்கு மேக்கெ சூலம். நாளைக் கழிச்சி உதயத்திலெ வண்டியப் போட்டுகிட்டுப் போய் பாத்துட்டு வாருங்க. பொறவு நாவன்னாவை விட்டு நான் விசாரிக்கேன்."
"அய்யா, தபால்!" என்று தபால்காரன் உள்ளே நுழைந்து கவர்மென்டு முத்திரையிட்ட நீண்ட 'ஸ்கோடா'வைக் கொடுத்தான்.
"நம்ம குட்டிக்குப் போல இருக்கு. ஏலே அய்யா!" என்று கூப்பிட்டார்.
"என்னப்பா?" என்று கீழே வந்தான் பார்வதிநாதன்.
கடிதத்தைப் பிரித்துப் பார்க்க, சென்னையில் குமாஸ்தா வேலையாகியிருப்பதாகவும், 25-ந் தேதி வந்து வேலை ஒப்புக்கொள்ளும்படியும் எழுதியிருந்தது.
வீட்டில் ஒரே குதூஹலம். தபால்காரன் 'பக்ஷிஸ்' தட்டாமல் போகவில்லை.
"ஏலே அய்யா! உனக்கு ஒங்கம்மை சிங்கிகொளத்துப் பொண்ணைப் பார்த்திருக்கிறா, அப்பா. ஒனக்குப் புடிக்குமா?" என்று கேட்டார்.
பார்வதிநாதனுக்கு இந்த விஷயம் திடுக்கிடச் செய்தது. இந்த மாதிரி தகப்பனார் பேசியது இதுதான் முதல் தரம். முகம் வெட்கத்தால் சிவந்தது. ஒன்றும் பேசாமல் மெத்தைக்கு ஏறினவன். "நாளைக்குப் புறப்பட வேண்டும்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.
பெண்ணை எல்லாம் போய்ப் பார்த்துவிட்டு வந்தாகிவிட்டது. சங்கரலிங்கம் பிள்ளையின் மனைவிக்கு சிங்கிகுளத்துப் பெண் பேரில் நோக்கம்.
சங்கரலிங்கம் பிள்ளைக்கு இப்பொழுது மகனுக்கு வேலையாகி விட்டதால் ரேட்டை உயர்த்த வேண்டும் என்ற நோக்கம். நகை வழியாகக் குறைந்தது மூவாயிரமாவது கறந்துவிடவேண்டும் என்ற தீர்மானம்.
நாவன்னா - நாராயண பிள்ளை அவர் பெயர் - அவரை விட்டுப் பெண் வீட்டுக்காரரைத் தூண்டிவிடும்படி ஏற்பாடு செய்தார்.
நாராயண பிள்ளை ஒரு தடவை சிங்கிகுளத்துப் பக்கம் சென்றார். "நம்ம பையன் ஒருவன் இருக்கிறான். கொடுக்கலாம். நல்ல இடம்!" என்றார். விஸ்தரிப்பானேன்? பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளை வீட்டாரைக் கண்டு பேசப் புறப்பட்டார். நண்பர் நாவன்னா வீட்டில் ஜாகை.
மறுநாள்.
இருவரும் சங்கரலிங்கம் பிள்ளை வீட்டிற்கு வருகிறார்கள்.
"அண்ணாச்சி, இவுஹதான் நம்ம சிங்கிகுளத்துப் பிள்ளையவாள். இந்தப் பக்கத்திலே வந்திருந்தாஹ பாத்துக்கிட்டுப் போகட்டுமே என்று கூட்டி வந்தேன்" என்றார் நாவன்னா.
"அப்பிடியா! வாருங்க! வாருங்க! ஏளா! வெத்திலை செல்லத்தை எடு. அங்கே தூத்துட்டு சமுக்காளத்தை விரி! காப்பி சாப்பிடுங்களேன். அம்மாளு ரெண்டு எலையைப் போடு!" என்று துரிதப்படுத்தினார்.
அவருடைய தர்மபத்தினியும், "வாருங்க! சேவிக்கேன்!" என்று வரவேற்றுவிட்டு, அவசர அவசரமாகப் பெருக்கிவிட்டு, ஜமுக்காளத்தை எடுத்து விரித்து, வெற்றிலைச் செல்லத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
"நாங்கள் எல்லாம் காப்பி ஆச்சு. நீங்கள் ஆச்சா? இல்லவிட்டா முடிச்சுக்கொண்டு வந்துவிடுங்கள்" என்றார் நாராயண பிள்ளை.
"நான் எல்லாம் ஆச்சு! வெத்திலைப் போடுங்க" என்றார் சங்கரலிங்கம் பிள்ளை.
பேச்சு மெதுவாகப் பெண் விஷயத்தில் வந்து விழுந்தது.
"ஆமாம்! பையனுக்கு வேலையும் ஆச்சே, முடிச்சுவிடலாம் என்று எண்ணுகிறேன்" என்றார்.
"ஆமாம் அது செய்ய வேண்டியதுதான்" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.
"உங்களுக்குத் தெரியாததா? நகை ஒரு ரெண்டாயிரம், மத்தச் செலவு ஒரு ஆயிரம்!" என்றார்.
"என்ன, நம்ம பேட்டையப்பிள்ளை சொன்னதைக் கேட்டியள்ள?" என்றார் சங்கரலிங்கம் பிள்ளை.
"ஆமா, ஆமா. அதிருக்கட்டும். இந்தக் காலத்திலே ஆயிரத்தைச் சொன்னாப் போதுமா? சொன்னதைச் சொன்னபடி செய்யணும். அது நம்ம பிள்ளையவாள்தான். நான் ஒன்று பொதுவாகச் சொல்லுகிறேன். நகை மூவாயிரம், மத்தது ரெண்டாயிரம்!" என்றார்.
எல்லாரும் சற்று மௌனம்.
"அண்ணாச்சி! நீங்க ஒரேடியா மொதொண்டாதிக. பிள்ளைவாள்! நீங்க காலைத் தேச்சா பிரயோசனமில்லை. நல்ல இடம். பையனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கவர்மெண்டு வேலை. இனிசூபெக்டரு, தாசில்தாரா வரலாம் உங்க பெண்ணுக்கு ராஜயோகம்!" என்று மத்தியஸ்தம் பேசினார் நாவன்னா.
"சதி! பொறவு நீங்க சொல்லுறப்பா என்னா?" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.
"வேறெ என்ன அய்யா? இப்பவே வெத்தலை பாக்கு கைமாறிடுத்து. வர வியாழக்கிழமை நல்ல தினம். அன்னைக்கி திருமங்கிலியத்திற்குப் பொன்னுருக்கி விடுகிறது. சரிதானே பிள்ளைவாள்?" என்று ஒரு வெள்ளித் தாம்பாளத்தைச் சங்கரலிங்கம் பிள்ளையின் தர்மபத்தினியிடம் வாங்கி அந்தச் சிறு சடங்கை நடித்து முடித்தார்கள்.
சென்னையில் அன்று சாயங்காலம்.
பார்வதிநாதன் வேலை ஒப்புக்கொண்டாகிவிட்டது. தகப்பனார் கொடுத்த பணம் கொஞ்சம் கையில் ஓட்டம். சினிமாவிற்குச் சென்றான்.
இவனுக்குப் பக்கத்தில் ஒரு ஆங்கிலோ இந்திய மாது - இளநங்கை - உட்கார்ந்திருந்தாள்.
தகப்பனார் அன்று பெண் விஷயத்தைக் கேட்டதிலிருந்து அவனுக்கு ஒரு புதிய உணர்ச்சி, இயற்கையின் தேவை, அடிக்கடி மனத்தில் சுற்றிக்கொண்டே இருந்தது. பார்வதிநாதன் நல்ல பையன் தான். இதுவரை அந்த நினைப்பிற்கு அவகாசமில்லை.
ஆனால் அந்தத் தினத்திலிருந்து அவனது உடல் கட்டுக்கடங்கவில்லை.
அன்று இருவர் சினிமா பார்க்கவில்லை.
அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச் சம்மதித்தாள்.
இருவரும் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள்.
அந்தச் சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் சரிதானே?

பார்வதிநாதனுக்கு பி.ஏ. பாசாகிவிட்டது. அது மட்டுமல்ல. ஸர்வீஸ் கமிஷன் பரீட்சையிலும் முதல் தொகுதியில் வந்துவிட்டான். சீக்கிரத்தில் வேலையாகிவிடும். கலியாணம் ஒன்றுதான் பாக்கி. அதையும் செய்து முடித்துவிட்டால் பையனைப் பற்றிய கவலை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தார் சங்கரலிங்கம் பிள்ளை.

 

ஒரு நாள் காலை. பிள்ளையவர்கள், தாம்பிரவர்ணியின் ஸ்நான இன்பம், நீண்ட பூஜை முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளியான காலை போஜனத்தை முடித்துக் கொண்டதும், சுக ஜீவனத்தின் குதூகலத்தை அனுபவித்தவராய், "ஏளா, அங்கே என்ன செய்யுதே" என்று தமது பத்தினியைக் கூப்பிட்டார்.

 

"என்ன, நீங்களா கூப்பிட்டிய; இன்னா வாரேன்."

 

"நம்ம குட்டிக்கு" - பார்வதிநாதனின் செல்லப் பெயர் - "பொண்ணு பார்க்க வேண்டாமா?"

 

"எனக்கென்ன தெரியும்? நீங்க சொல்லுதது சதி. நம்ப சிங்கிகுளத்துப் பொண்ணெப் பாத்தா என்ன? பொண்ணு நல்ல செவத்த பொண்ணு; கண்ணும் முளியும் அப்படியே பாத்துக்கிட்டே இருக்கலாம். ஆனா, புள்ளையவாளுக்குப் பிடிக்குமோ என்னமோ? இந்தக் காலத்துப் புள்ளையளை என்ன சொல்ல?"

 

"அதாரு, சிங்கிகுளத்திலே?"

 

"என்ன உங்களுக்குத் தெரியாதாக்கும்? பேட்டையக்கா இருக்காஹள்ள, பார்வதியக்கா, அவளுக்கு ஒண்ணுவிட்ட தம்பி மக."

 

"சரி! சரி! நம்ம சுப்பராயப்பிள்ளை மகளா? என்ன நகை போடுவா?"

 

"அது எனக்கென்ன தெரியும்? கோமதியக்காக்கிட்ட விசாரிச்சா தெரியும். நா அவளைக் கூப்பிடுதேன்" என்று வெளியே சென்று ஒரு விதவையைக் கூப்பிட்டு வந்தாள்.

 

"அம்மா, வா. இரி. நம்ம குட்டிக்கு இவ என்னமோ சிங்கி கொளத்துப் பொண்ணு ஒண்ணு இருக்காமே. அதைப் பாக்கலாமென்னு சொல்லுதா. நீ என்னமோ, பாத்திருக்கியாமே. அதெப்படி நகை என்னம்மா போடுவா?" என்று கேட்டார் சங்கரலிங்கம் பிள்ளை.

 

"அதா, நல்ல எடமாச்சே. பொண்ணு தங்கமான கொணம். அவுஹளும் அப்படித்தான். என்னமோ ரெண்டு ஆயிரத்துக்கு செய்வாஹ இன்னு சொல்லி இருந்தாஹ."

 

"இம்புட்டுத்தானே! சதி, சதி. பேச்செ விட்டுத் தள்ளு. நம்ம பேட்டைப்பிள்ளை ஐயாயிரம் நகை மருக, கலியாணச் செலவு ஒரு ரெண்டாயிரம் யென்று சொன்னாரே!"

 

"ஆமா, பொண்ணு கறுப்பில்லியா? எதுக்கும் கேட்டுப் பாருங்களேன்."

 

"சதி, நீ என்ன சொல்லுதே?"

 

"பாத்தா என்ன? நானும் அக்காளும் போயிட்டுத்தான் வாரமே!" என்றாள்.

 

"சதி, நாளைக்கு மேக்கெ சூலம். நாளைக் கழிச்சி உதயத்திலெ வண்டியப் போட்டுகிட்டுப் போய் பாத்துட்டு வாருங்க. பொறவு நாவன்னாவை விட்டு நான் விசாரிக்கேன்."

 

"அய்யா, தபால்!" என்று தபால்காரன் உள்ளே நுழைந்து கவர்மென்டு முத்திரையிட்ட நீண்ட 'ஸ்கோடா'வைக் கொடுத்தான்.

 

"நம்ம குட்டிக்குப் போல இருக்கு. ஏலே அய்யா!" என்று கூப்பிட்டார்.

 

"என்னப்பா?" என்று கீழே வந்தான் பார்வதிநாதன்.

 

கடிதத்தைப் பிரித்துப் பார்க்க, சென்னையில் குமாஸ்தா வேலையாகியிருப்பதாகவும், 25-ந் தேதி வந்து வேலை ஒப்புக்கொள்ளும்படியும் எழுதியிருந்தது.

 

வீட்டில் ஒரே குதூஹலம். தபால்காரன் 'பக்ஷிஸ்' தட்டாமல் போகவில்லை.

 

"ஏலே அய்யா! உனக்கு ஒங்கம்மை சிங்கிகொளத்துப் பொண்ணைப் பார்த்திருக்கிறா, அப்பா. ஒனக்குப் புடிக்குமா?" என்று கேட்டார்.

 

பார்வதிநாதனுக்கு இந்த விஷயம் திடுக்கிடச் செய்தது. இந்த மாதிரி தகப்பனார் பேசியது இதுதான் முதல் தரம். முகம் வெட்கத்தால் சிவந்தது. ஒன்றும் பேசாமல் மெத்தைக்கு ஏறினவன். "நாளைக்குப் புறப்பட வேண்டும்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

 

பெண்ணை எல்லாம் போய்ப் பார்த்துவிட்டு வந்தாகிவிட்டது. சங்கரலிங்கம் பிள்ளையின் மனைவிக்கு சிங்கிகுளத்துப் பெண் பேரில் நோக்கம்.

 

சங்கரலிங்கம் பிள்ளைக்கு இப்பொழுது மகனுக்கு வேலையாகி விட்டதால் ரேட்டை உயர்த்த வேண்டும் என்ற நோக்கம். நகை வழியாகக் குறைந்தது மூவாயிரமாவது கறந்துவிடவேண்டும் என்ற தீர்மானம்.

 

நாவன்னா - நாராயண பிள்ளை அவர் பெயர் - அவரை விட்டுப் பெண் வீட்டுக்காரரைத் தூண்டிவிடும்படி ஏற்பாடு செய்தார்.

 

நாராயண பிள்ளை ஒரு தடவை சிங்கிகுளத்துப் பக்கம் சென்றார். "நம்ம பையன் ஒருவன் இருக்கிறான். கொடுக்கலாம். நல்ல இடம்!" என்றார். விஸ்தரிப்பானேன்? பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளை வீட்டாரைக் கண்டு பேசப் புறப்பட்டார். நண்பர் நாவன்னா வீட்டில் ஜாகை.

 

மறுநாள்.

 

இருவரும் சங்கரலிங்கம் பிள்ளை வீட்டிற்கு வருகிறார்கள்.

 

"அண்ணாச்சி, இவுஹதான் நம்ம சிங்கிகுளத்துப் பிள்ளையவாள். இந்தப் பக்கத்திலே வந்திருந்தாஹ பாத்துக்கிட்டுப் போகட்டுமே என்று கூட்டி வந்தேன்" என்றார் நாவன்னா.

 

"அப்பிடியா! வாருங்க! வாருங்க! ஏளா! வெத்திலை செல்லத்தை எடு. அங்கே தூத்துட்டு சமுக்காளத்தை விரி! காப்பி சாப்பிடுங்களேன். அம்மாளு ரெண்டு எலையைப் போடு!" என்று துரிதப்படுத்தினார்.

 

அவருடைய தர்மபத்தினியும், "வாருங்க! சேவிக்கேன்!" என்று வரவேற்றுவிட்டு, அவசர அவசரமாகப் பெருக்கிவிட்டு, ஜமுக்காளத்தை எடுத்து விரித்து, வெற்றிலைச் செல்லத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

 

"நாங்கள் எல்லாம் காப்பி ஆச்சு. நீங்கள் ஆச்சா? இல்லவிட்டா முடிச்சுக்கொண்டு வந்துவிடுங்கள்" என்றார் நாராயண பிள்ளை.

 

"நான் எல்லாம் ஆச்சு! வெத்திலைப் போடுங்க" என்றார் சங்கரலிங்கம் பிள்ளை.

 

பேச்சு மெதுவாகப் பெண் விஷயத்தில் வந்து விழுந்தது.

 

"ஆமாம்! பையனுக்கு வேலையும் ஆச்சே, முடிச்சுவிடலாம் என்று எண்ணுகிறேன்" என்றார்.

 

"ஆமாம் அது செய்ய வேண்டியதுதான்" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.

 

"உங்களுக்குத் தெரியாததா? நகை ஒரு ரெண்டாயிரம், மத்தச் செலவு ஒரு ஆயிரம்!" என்றார்.

 

"என்ன, நம்ம பேட்டையப்பிள்ளை சொன்னதைக் கேட்டியள்ள?" என்றார் சங்கரலிங்கம் பிள்ளை.

 

"ஆமா, ஆமா. அதிருக்கட்டும். இந்தக் காலத்திலே ஆயிரத்தைச் சொன்னாப் போதுமா? சொன்னதைச் சொன்னபடி செய்யணும். அது நம்ம பிள்ளையவாள்தான். நான் ஒன்று பொதுவாகச் சொல்லுகிறேன். நகை மூவாயிரம், மத்தது ரெண்டாயிரம்!" என்றார்.

 

எல்லாரும் சற்று மௌனம்.

 

"அண்ணாச்சி! நீங்க ஒரேடியா மொதொண்டாதிக. பிள்ளைவாள்! நீங்க காலைத் தேச்சா பிரயோசனமில்லை. நல்ல இடம். பையனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கவர்மெண்டு வேலை. இனிசூபெக்டரு, தாசில்தாரா வரலாம் உங்க பெண்ணுக்கு ராஜயோகம்!" என்று மத்தியஸ்தம் பேசினார் நாவன்னா.

 

"சதி! பொறவு நீங்க சொல்லுறப்பா என்னா?" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.

 

"வேறெ என்ன அய்யா? இப்பவே வெத்தலை பாக்கு கைமாறிடுத்து. வர வியாழக்கிழமை நல்ல தினம். அன்னைக்கி திருமங்கிலியத்திற்குப் பொன்னுருக்கி விடுகிறது. சரிதானே பிள்ளைவாள்?" என்று ஒரு வெள்ளித் தாம்பாளத்தைச் சங்கரலிங்கம் பிள்ளையின் தர்மபத்தினியிடம் வாங்கி அந்தச் சிறு சடங்கை நடித்து முடித்தார்கள்.

 

சென்னையில் அன்று சாயங்காலம்.

 

பார்வதிநாதன் வேலை ஒப்புக்கொண்டாகிவிட்டது. தகப்பனார் கொடுத்த பணம் கொஞ்சம் கையில் ஓட்டம். சினிமாவிற்குச் சென்றான்.

 

இவனுக்குப் பக்கத்தில் ஒரு ஆங்கிலோ இந்திய மாது - இளநங்கை - உட்கார்ந்திருந்தாள்.

 

தகப்பனார் அன்று பெண் விஷயத்தைக் கேட்டதிலிருந்து அவனுக்கு ஒரு புதிய உணர்ச்சி, இயற்கையின் தேவை, அடிக்கடி மனத்தில் சுற்றிக்கொண்டே இருந்தது. பார்வதிநாதன் நல்ல பையன் தான். இதுவரை அந்த நினைப்பிற்கு அவகாசமில்லை.

 

ஆனால் அந்தத் தினத்திலிருந்து அவனது உடல் கட்டுக்கடங்கவில்லை.

 

அன்று இருவர் சினிமா பார்க்கவில்லை.

 

அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச் சம்மதித்தாள்.

 

இருவரும் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள்.

 

அந்தச் சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் சரிதானே?

 

by Swathi   on 30 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.