LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் அடிக்கல் நாட்டுவார்: அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்!

மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார்என அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.

திருச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறியதாவது: 

திருச்சி அரசு மருத்துவமனையில் நவீன ஸ்கேன் மையம் திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் இன்னும் 18 அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு வருகிறது.   சிடி ஸ்கேன் மையம் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.  
திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள  தாய் எனப்படும் விபத்து மற்றும் அவசர சிறப்பு சிகிச்சை வார்டில் 11 படுக்கைகள் வெண்டிலேட்டர் வசதியுடன் உள்ளன. ஆஸ்திரேலியா  நாட்டின் மருத்துவமனைகளில் இருப்பது போல் இந்த பிரிவு செயல்படும். 

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில்  இன்னும் ஓரிரு மாதங்களில் ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோபிளாஸ்டிக் போன்ற இதய சிகிச்சைக்கான  கேத்லேப் பிரிவு தொடங்கப்படும்.

இதேபோல் 12 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையால் விபத்து இறப்பு கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் குறைந்துள்ளது. ஆந்திராவில் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. நோய் தொற்று தமிழகத்தில் பரவாமல் இருக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒசட்டாமின் மாத்திரை 12 லட்சம் அளவில் தமிழக சுகாதாரத்துறையில் இருப்பு உள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த வித தாமதமும் இன்றி அனைத்து பணிகளும் முறையாக நடந்து வருகின்றன. இதற்காக ரூ.1264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். எனவே விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார்.

தமிழகத்தில் விபத்து நடந்தால், அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் செல்லும் நேரம் 11 நிமிடங்களாக உள்ளது. இந்த நேரத்தை குறைக்கவும், ஆம்புலன்ஸ் திட்டத்தை மேம்படுத்தவும் ரூ.1264 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசவத்தில் பெண்கள் இறப்பு 64 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக குறைந்துள்ளது. 21,000 டாக்டர், செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இன்னும் டாக்டர், செவிலியர் 1,800 பேர் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல் 772 லேப் டெக்னீஷியன்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். 

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

by Mani Bharathi   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.