LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

ஐங்குறுநூறு-1

 

ஐந்து திணைகளையும் பற்றித் திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது இந் நூல். இந் நூலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் 3 அடிக்கு மேல் 6 அடிக்கு உட்பட்டன. இவ்வாறு குறைந்த அடிகளையுடைய பாக்களால் இயன்றமையால் இந் நூல் ஐங்குறு நூறு என்னும் பெயர் பெற்றது. தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர வேந்தன். 
நூல்
1. வேட்கைப் பத்து
வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க எனவேட் டேமே. 
1
வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
எனவேட் டோளே யாயே யாமே
பல்லிதல் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை யூரன் கேண்மை
வழிவ்ழிச் சிறக்க எனவேட் டேமே. 
2
வாழி ஆதன் வாழி அவினி
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூக்கஞு லூரன் தன்மனை
வாழ்க்கை பொலிக என்வேட் டேமே. 
3
வாழி ஆதன் வாழி அவினி
பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த கரும்பிற்காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு
பழன் மாகற்க எனவேட் டேமே. 
4
வாழி ஆதன் வாழி அவினி
பசியில் ஆகுக பிணீகேன் நீங்குக
எனவேட் டோளே யாயே யாமே
முதலை போத்து முழுமீன் ஆரும்
தண்துறை யூரன் தேரேம்
முன்கடை நிற்க எனவேட் டேமே. 
5
வாழி ஆதன் வாழி அவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
எனவேட் டோளே யாயே யாமே
மல்ர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்துறை யூரண் வரைக
எந்தையும் கொடுக்க எனவேட் டேமே. 
6
வாழி ஆதன் வாழி அவினி
அறநனி சிறக்க அல்லது கெடுக
என வேட்டோளே யாயே யாமே
உளை மருதத்துக்கி கிளைக்குரு
தண்துறை யூரன் தன்னூர்க்
கொண்டனன் செல்க எனவேட் டேமே. 
7
வாழி ஆதன் வாழி அவினி
அரசுமுறை செய்க களவில் லாகுக
எனவேட் டோளே யாயே யாமே
அலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும்
புக்கஞல் ஊரன் சுளீவண்
வாய்ப்ப தாக எனவேட்டோமே. 
8
வாழி ஆதன்வாழி அவினி
நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
என வேட் டோளே யாயே யாமே
கயலார் நாரை போர்வின் சேக்கும்
தண்துறை யூரன் கேண்மை
அம்பல் ஆகற்க எனவேட் டேமே.
 9
வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வளநனி சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
தண்துறை யூரன் தன்னோடு
கொண்டனன் செல்க எனவேட் டேமே. 
10
2. வேழப்பத்து
மனைநடு வயலை வேழஞ் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னுமென் தடமென் தோளே. 
11
கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்கதில்லஎன் தடமென் தோளே. 
12
பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
வடகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை யூரண் பெண்டிர்
துஞ்சூர் யாமத்துந் துயலறி யலரே 
13
கொடிப்பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும்
மணித்துறை வீரன் மார்பே
பனித்துயில் செய்யும் இன்சா யற்றே. 
14
மண்லாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்
புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரனல் லன்னே. 
15
ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்
பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே. 
16
புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு குருகின் தன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்
வறிதா கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே. 
17
இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலம்ரும் கழனி ஊரன்
பொருந்து மல ரன்னஎன் கண்ணழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே. 
18
எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்
வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண்பனி யுகுமே. 
19
அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத்
துறைநணி யூரனை உள்ளியென்
இறையேர் எல்வளை நெகிழ்புஓ டும்மே. 
20
3. கள்வன் பத்து
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்டுறை ய்ய்ரன் தளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய் 
21
அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்
முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்
நல்லசொல்லி மணந்துஇனி
நீயேன் என்றது எவன்கொல் அன்னாய் 
22
முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டிப்
பூக்குற்று எய்திய புனல் அணி யூரன்
தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித்
தாக்கணங்கு ஆவ தெவன்கொல் அன்னாய். 
23
தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
பிள்லை தன்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் அகின்று கொல்லோ மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய். 
24
அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்
வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும்
கழனி யூரன் மார்புபலர்க்கு
இழைநெகிழ் செல்லல் ஆகும் அன்னாய். 
25
கரந்தைஅம் செறுவில் துணைதுறந்து கள்வன்
வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்
எம்மும் பிறரும் அறியான்
இன்னன் ஆவது எவன்கொல் அன்னாய். 
26
செந்நெலம் செறுவில் கதிகொண்டு கள்வன்
தண்அக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எவ்வளை நெகிழ சாஅய்
அல்லல் உழப்பது எவன்கொல் அன்னாய். 
27
உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்
தண்சேறு கள்வன் வரிக்கும் ஊரற்கு
ஒண்டொடி நெகிழச் சாஅய்
மெந்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய். 
28
மாரி கடிகொளக் காவலர் கடுக
வித்திய வென்முளை கள்வன் அறுக்கும்
கழனி ஊரன் மார்புற மரீஇத்
திதலை அல்குல் நின்மகள்
பசலை கொள்வது எவன்கொல் அன்னாய். 
29
வேப்புநனை யன்ன நெடுங்கள் கள்வன்
தண்அக மண்அளை நிறைய நெல்லின்
இரும்பூ உறைக்கும் ஊரற்குஇவள்
பெருங்கவின் இழப்பது எவன்கொல் அன்னாய். 
30
4. தோழிக்கு உரைத்த பத்து
அம்ம வாழி தோழி மகிழ்நன்
கடனன்று என்னும் கொல்லோ
நம்மூர் முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
உடனாடு ஆயமோடு உற்ற சூளே. 
31
அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள்
அழுப என்பஅவன் பெண்டிர்
தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே. 
32
அம்ம வாழி தோழி மகிழ்நன்
மருதுயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரோடு ஆடும் என்பதன்
தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே. 
33
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கைப் பூத்த புழற்கால் ஆம்பல்
தாதுஏர் வண்ணம் கொண்டன
ஏதி லாளற்குப் பசந்தஎன் கண்ணே. 
34
அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே
இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே. 
35
அம்ம வாழி தோழி யூரன்
நம்மறந்து அமைகுவன் ஆயின் நாம்மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே
கயலெனக் கருதிய் உண்கண்
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே. 
36
அம்ம வாழி தோழி மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்துபனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்
தேற்றான் உற்ற சூள்வாய்த் தல்லெ 
37
அம்ம வாழி தோழி மகிநன்
தன்சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்
தந்தளிர் வெளவும் மேனி
ஒள்தோடி முன்கை யாம்அழப் பிரிந்தே. 
38
அம்ம வாழி தோழி யூரன்
வெம்முலை யடைய முயங்கி நம்வயின்
திருந்திழைப் பணைத்தோள் ஞெகிழப்
பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன்னே. 
39
அம்ம வாழி தோழி மகிநன்
ஒள்தொடி முன்கை யாம் அழப் பிரிந்துதன்
பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப
கெண்டை பாய்தர அவிழ்ந்த
வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே. 
40
5. புலவிப் பத்து
தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலையொடு
வெண்பூம் பொய்கைத்து அவனூர்என்ப அதனால்
தன்சொல் உணர்ந்தோர் மேனி
பொன்போல் செய்யும் ஊர்கிழ வோனே. 
41
மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொலோ
யாணர் ஊரநின் மானிழை யரிவை
காவிரி மலிர்நிறை யன்னநின்
மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே. 
42
அம்பணத் தன்ன யாமை யேறிச்
செம்பின் அன்ன பார்ப்புப் பலதுஞ்சும்
யாணர் ஊர நின்னினும்
பாணன் பொய்யன் பல்சூ ளினனே. 
43
தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்கு
அதுவே ஐயநின் மார்பே
அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே. 
44
கூதிர் ஆயின் தன்கலிழ் தந்து
வேனில் ஆயின் மணிநிறங் கொள்ளும்
யாறுஅணிந் தன்றுநின் ஊரே
பச்ப்பணிந் தனவால் மகிழ்நஎன் கண்ணே. 
45
நினக்கே அன்றுஅது எமக்குமார் இனிதே
நின்மார்பு நய்ந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை யாகி
ஈண்டுநீ அருளாது ஆண்டுறை தல்லே. 
46
முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன்பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகால் பெரும்பயறு நிறைக்கும் ஊர
மாணிமழை ஆயம் அறியும்நின்
பாணன் போலப் பலபொய்த் தல்லே. 
47
வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல் அஒரிந்த வட்டியுள் மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர
வேண்டேம் பெருமநின் பரத்தை
யாண்டுச் செய்குறியோடு ஈண்டுநீ வரவே. 
48
அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சில்மீன் சொரிந்து பல்நெல் பெறூஉம்
யாணர் ஊரநின் பாண்மகன்
யார்நலம் சிதயப் பொய்க்குமோ இனியே. 
49
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர
தஞ்சம் அருளாய் நீயேநின்
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே. 50

ஐந்து திணைகளையும் பற்றித் திணை ஒன்றுக்கு 100 பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது இந் நூல். இந் நூலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் 3 அடிக்கு மேல் 6 அடிக்கு உட்பட்டன. இவ்வாறு குறைந்த அடிகளையுடைய பாக்களால் இயன்றமையால் இந் நூல் ஐங்குறு நூறு என்னும் பெயர் பெற்றது. தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேர வேந்தன். 

நூல்

1. வேட்கைப் பத்து
வாழி ஆதன் வாழி அவினிநெற்பல பொலிக பொன்பெரிது சிறக்கஎனவேட் டோளே யாயே யாமேநனைய காஞ்சிச் சினைய சிறுமீன்யாணர் ஊரன் வாழ்கபாணனும் வாழ்க எனவேட் டேமே. 1
வாழி ஆதன் வாழி அவினிவிளைக வயலே வருக இரவலர்எனவேட் டோளே யாயே யாமேபல்லிதல் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்தண்துறை யூரன் கேண்மைவழிவ்ழிச் சிறக்க எனவேட் டேமே. 2
வாழி ஆதன் வாழி அவினிபால்பல ஊறுக பகடுபல சிறக்கஎனவேட் டோளே யாயே யாமேவித்திய உழவர் நெல்லோடு பெயரும்பூக்கஞு லூரன் தன்மனைவாழ்க்கை பொலிக என்வேட் டேமே. 3
வாழி ஆதன் வாழி அவினிபகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுகஎனவேட் டோளே யாயே யாமேபூத்த கரும்பிற்காய்த்த நெல்லிற்கழனி யூரன் மார்புபழன் மாகற்க எனவேட் டேமே. 4
வாழி ஆதன் வாழி அவினிபசியில் ஆகுக பிணீகேன் நீங்குகஎனவேட் டோளே யாயே யாமேமுதலை போத்து முழுமீன் ஆரும்தண்துறை யூரன் தேரேம்முன்கடை நிற்க எனவேட் டேமே. 5
வாழி ஆதன் வாழி அவினிவேந்துபகை தணிக யாண்டுபல நந்துகஎனவேட் டோளே யாயே யாமேமல்ர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்தண்துறை யூரண் வரைகஎந்தையும் கொடுக்க எனவேட் டேமே. 6
வாழி ஆதன் வாழி அவினிஅறநனி சிறக்க அல்லது கெடுகஎன வேட்டோளே யாயே யாமேஉளை மருதத்துக்கி கிளைக்குருதண்துறை யூரன் தன்னூர்க்கொண்டனன் செல்க எனவேட் டேமே. 7
வாழி ஆதன் வாழி அவினிஅரசுமுறை செய்க களவில் லாகுகஎனவேட் டோளே யாயே யாமேஅலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும்புக்கஞல் ஊரன் சுளீவண்வாய்ப்ப தாக எனவேட்டோமே. 8
வாழி ஆதன்வாழி அவினிநன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுகஎன வேட் டோளே யாயே யாமேகயலார் நாரை போர்வின் சேக்கும்தண்துறை யூரன் கேண்மைஅம்பல் ஆகற்க எனவேட் டேமே. 9
வாழி ஆதன் வாழி அவினிமாரி வாய்க்க வளநனி சிறக்கஎனவேட் டோளே யாயே யாமேபூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்தண்துறை யூரன் தன்னோடுகொண்டனன் செல்க எனவேட் டேமே. 10

2. வேழப்பத்து
மனைநடு வயலை வேழஞ் சுற்றும்துறைகேழ் ஊரன் கொடுமை நாணிநல்லன் என்றும் யாமேஅல்லன் என்னுமென் தடமென் தோளே. 11
கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்ஆற்றுக தில்ல யாமேதோற்கதில்லஎன் தடமென் தோளே. 12
பரியுடை நன்மான் பொங்குளை யன்னவடகரை வேழம் வெண்பூப் பகரும்தண்துறை யூரண் பெண்டிர்துஞ்சூர் யாமத்துந் துயலறி யலரே 13
கொடிப்பூ வேழம் தீண்டி அயலவடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும்மணித்துறை வீரன் மார்பேபனித்துயில் செய்யும் இன்சா யற்றே. 14
மண்லாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்வேழ மூதூர் ஊரன்ஊரன் ஆயினும் ஊரனல் லன்னே. 15
ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்பூக்கஞல் ஊரனை யுள்ளிப்பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே. 16
புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூவிசும்பாடு குருகின் தன்றும் ஊரன்புதுவோர் மேவலன் ஆகலின்வறிதா கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே. 17
இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்கரும்பின் அலம்ரும் கழனி ஊரன்பொருந்து மல ரன்னஎன் கண்ணழப்பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே. 18
எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினைபுணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்ஊரன் ஆகலின் கலங்கிமாரி மலரின் கண்பனி யுகுமே. 19
அறுசில் கால அஞ்சிறைத் தும்பிநூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத்துறைநணி யூரனை உள்ளியென்இறையேர் எல்வளை நெகிழ்புஓ டும்மே. 20

3. கள்வன் பத்து
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்தண்டுறை ய்ய்ரன் தளிப்பவும்உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய் 21
அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்நல்லசொல்லி மணந்துஇனிநீயேன் என்றது எவன்கொல் அன்னாய் 22
முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டிப்பூக்குற்று எய்திய புனல் அணி யூரன்தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித்தாக்கணங்கு ஆவ தெவன்கொல் அன்னாய். 23
தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடுபிள்லை தன்னும் முதலைத்து அவனூர்எய்தினன் அகின்று கொல்லோ மகிழ்நன்பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய். 24
அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும்கழனி யூரன் மார்புபலர்க்குஇழைநெகிழ் செல்லல் ஆகும் அன்னாய். 25
கரந்தைஅம் செறுவில் துணைதுறந்து கள்வன்வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்எம்மும் பிறரும் அறியான்இன்னன் ஆவது எவன்கொல் அன்னாய். 26
செந்நெலம் செறுவில் கதிகொண்டு கள்வன்தண்அக மண் அளைச் செல்லும் ஊரற்குஎவ்வளை நெகிழ சாஅய்அல்லல் உழப்பது எவன்கொல் அன்னாய். 27
உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்தண்சேறு கள்வன் வரிக்கும் ஊரற்குஒண்டொடி நெகிழச் சாஅய்மெந்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய். 28
மாரி கடிகொளக் காவலர் கடுகவித்திய வென்முளை கள்வன் அறுக்கும்கழனி ஊரன் மார்புற மரீஇத்திதலை அல்குல் நின்மகள்பசலை கொள்வது எவன்கொல் அன்னாய். 29
வேப்புநனை யன்ன நெடுங்கள் கள்வன்தண்அக மண்அளை நிறைய நெல்லின்இரும்பூ உறைக்கும் ஊரற்குஇவள்பெருங்கவின் இழப்பது எவன்கொல் அன்னாய். 30

4. தோழிக்கு உரைத்த பத்து
அம்ம வாழி தோழி மகிழ்நன்கடனன்று என்னும் கொல்லோநம்மூர் முடமுதிர் மருதத்துப் பெருந்துறைஉடனாடு ஆயமோடு உற்ற சூளே. 31
அம்ம வாழி தோழி மகிழ்நன்ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள்அழுப என்பஅவன் பெண்டிர்தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே. 32
அம்ம வாழி தோழி மகிழ்நன்மருதுயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்பெண்டிரோடு ஆடும் என்பதன்தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே. 33
அம்ம வாழி தோழி நம்மூர்ப்பொய்கைப் பூத்த புழற்கால் ஆம்பல்தாதுஏர் வண்ணம் கொண்டனஏதி லாளற்குப் பசந்தஎன் கண்ணே. 34
அம்ம வாழி தோழி நம்மூர்ப்பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்நிறத்தினும் நிழற்றுதல் மன்னேஇனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே. 35
அம்ம வாழி தோழி யூரன்நம்மறந்து அமைகுவன் ஆயின் நாம்மறந்துஉள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னேகயலெனக் கருதிய் உண்கண்பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே. 36
அம்ம வாழி தோழி மகிழ்நன்நயந்தோர் உண்கண் பசந்துபனி மல்கவல்லன் வல்லன் பொய்த்தல்தேற்றான் உற்ற சூள்வாய்த் தல்லெ 37
அம்ம வாழி தோழி மகிநன்தன்சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்தந்தளிர் வெளவும் மேனிஒள்தோடி முன்கை யாம்அழப் பிரிந்தே. 38
அம்ம வாழி தோழி யூரன்வெம்முலை யடைய முயங்கி நம்வயின்திருந்திழைப் பணைத்தோள் ஞெகிழப்பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன்னே. 39
அம்ம வாழி தோழி மகிநன்ஒள்தொடி முன்கை யாம் அழப் பிரிந்துதன்பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்பகெண்டை பாய்தர அவிழ்ந்தவண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே. 40

5. புலவிப் பத்து
தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலையொடுவெண்பூம் பொய்கைத்து அவனூர்என்ப அதனால்தன்சொல் உணர்ந்தோர் மேனிபொன்போல் செய்யும் ஊர்கிழ வோனே. 41
மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொலோயாணர் ஊரநின் மானிழை யரிவைகாவிரி மலிர்நிறை யன்னநின்மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே. 42
அம்பணத் தன்ன யாமை யேறிச்செம்பின் அன்ன பார்ப்புப் பலதுஞ்சும்யாணர் ஊர நின்னினும்பாணன் பொய்யன் பல்சூ ளினனே. 43
தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்தாய்முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்குஅதுவே ஐயநின் மார்பேஅறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே. 44
கூதிர் ஆயின் தன்கலிழ் தந்துவேனில் ஆயின் மணிநிறங் கொள்ளும்யாறுஅணிந் தன்றுநின் ஊரேபச்ப்பணிந் தனவால் மகிழ்நஎன் கண்ணே. 45
நினக்கே அன்றுஅது எமக்குமார் இனிதேநின்மார்பு நய்ந்த நன்னுதல் அரிவைவேண்டிய குறிப்பினை யாகிஈண்டுநீ அருளாது ஆண்டுறை தல்லே. 46
முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்தஅகன்பெரு வட்டி நிறைய மனையோள்அரிகால் பெரும்பயறு நிறைக்கும் ஊரமாணிமழை ஆயம் அறியும்நின்பாணன் போலப் பலபொய்த் தல்லே. 47
வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்வராஅல் அஒரிந்த வட்டியுள் மனையோள்யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊரவேண்டேம் பெருமநின் பரத்தையாண்டுச் செய்குறியோடு ஈண்டுநீ வரவே. 48
அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்சில்மீன் சொரிந்து பல்நெல் பெறூஉம்யாணர் ஊரநின் பாண்மகன்யார்நலம் சிதயப் பொய்க்குமோ இனியே. 49
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்வஞ்சி ஓங்கிய யாணர் ஊரதஞ்சம் அருளாய் நீயேநின்நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே. 50

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.