LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

ஐங்குறுநூறு-6

 

26. குன்றக் குறவன் பத்து.
குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி
நுன்பல் அழிதுளி பொழியும் நாட
நெடுவரைப் படப்பை நும்மூர்க்
கடுவரல் அருவி காணினும் அழுமே. 251
குன்றக் குறவன் புல்வேய்க் குரம்பை
மன்றாடு இளமழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி தோழி விரைபெயல்
அரும்பனி அளைஇய கூதிர்ப்
பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே. 252
குன்றக் குறவன் சார்ந்த நறும்புகை
தேஙகமழ் சிலம்பின் வரையகம் கமழும்
கானக நாடன் வரையின்
மன்றலும் உடையள்கொல் தோழி யாயே. 253
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென
நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும்
வண்ட்மிர் சுடர்நுதல் குறுமகள்
கொண்டனர் செல்வர்தம் குன்றுகெழு நாட்டே. 254
குன்றக் குறவன் காதல் மடமகள்
வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே. 255
குன்றக் குறவன் காதல் மடமகள்
வண்படு கூந்தல் தந்தழைக் கொடிச்சி
வளையள் முளைவாள் எயிற்றள்
இளையள் ஆயினும் ஆரணங் கினனே. 256
குன்றக் குறவன் கடவுட் பேணி
இரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள்
ஆயரி நெடுங்கள் கலிழச்
சேயதால் தெய்யநீ பிரியும் நாடே. 257
குன்றக் குறுவன் காதல் மடமகள்
அணிமயில் அன்ன அசைநடைக் கொடிச்சியைப்
பெருவரை நாடன் வரையும் ஆயின்
கொடுத்தனெம் ஆயினோம் நன்றே
இன்னும் ஆனாது நன்னுதல் துயிரே. 258
குன்றக் குறவன் காதல் மடமகள்
மன்ற வேங்கை மலர்சில கொண்டு
மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித்
தேம்பலிச் செய்த ஈர்நறுங் கையள்
மலர்ந்த காந்தள் நாறிக்
கவிழ்ந்த கண்ணள்எம் அணங்கி யோளே. 259
குன்றக் குறவன் காதல் மடமகள்
மெந்தோள் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல
பைம்புறப் பைங்கிளி ஒப்பலர்
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே. 260
27. கேழற் பத்து
மெந்தினை மேய்ந்த தறுகண் பன்றி
வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்
எந்தை அறிதல் அஞ்சிக் கொல்
அதுவே மன்ற வாரா மையே. 261
சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றி
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்
இலங்குமலை நாடன் வரூஉம்
மருந்தும் அறியும்கொல் தோழிஅவன் விருப்பே 262
நன்பொன் அன்ன புனிறுதீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும்
குன்றுகெழு நாடன் தானும்
வந்தனன் வந்தன்று தோழிஎன் நலனே. 263
இளம்பிறை யன்ன கோட்ட கேழல்
களங்கனி யன்ன பெண்பாற் புணரும்
அயந்திகழ் சில்மப கண்டிரும்
பயந்தன மாதோநீ நய்ந்தோள் கண்ணே. 264
புலிகொல் பெண்பால் புவரிக் குருளை
வளைவெண் மருப்பின் கேழல் புரக்கும்
குன்றுகெழு நாடன் மறந்தனன்
பொன்போல் புதல்வனோடு என்நீத் தோனே 265
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு
குறுங்கை இரும்புலி பொரூஉம் நாடன்
நனிநாண் உடைமையம் மன்ற
பனிப்பயந் தனநீ நய்ந்தோள் கண்ணே. 266
சிறுகண் பறிப் பெருஞ்சின ஒருத்தல்
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி
ஐவனம் கவரும் குன்ற நாடன்
வண்டுபடு கூந்தலைப் பேணிப்
பண்பில சொல்லும் தேறுதல் செத்தே. 267
தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடு
வளமலைச் சிறுதினை ய்ணீஇய கானவர்
வரையோங்கு உயர்சிமைக் கேழல் உறங்கும்
நன்மலை நாடன் பிரிதல்
என்பயக்கும் மோநம் விட்டுத் துறந்தே. 268
கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை
விஅளைந்த செறுவில் தோன்றும் நாடன்
வாராது அவண்உறை நீடின் நேர்வளை
இணை ஈர் ஓதி நீயழத்
துணைநனி இழக்குவென் மடமை யானே. 269
கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பில்
தலைவிளை கானவர் கொய்தனர் பொய்ரும்
புல்லென் குன்றத்துப் புலம்புகொள் நெடுவரை
காணினும் கலிழுநோய் செத்துத்
தாம்வந் தனர்நம் காத லோரே. 270
28. குரக்குப் பத்து
அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்
பல்பசுப் பெண்டிரும் பெறுகுவன்
தொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே. 271
கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்
அருவரைத் தீந்தேன் எடுப்பை அயலது
உருகெழு நெடுஞ்சினைப் பாயும் நாடன்
இரவின் வருதல் அறியான்
வரும் வரும் என்பள் தோழியாயே. 272
அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர்
புந்தலை மந்தி வன்பறழ் ஆரும்
நன்மலை நாட நீசெலின்
நின்நயத்து உறைவி என்னினும் கழில்மே. 273
மந்திக் கணவன் கல்லாக் கொடுவன்
ஒன்கேழ் வயப்புலி குழுமலின் வைரைந்துடன்
குன்றுயர் அடுக்கம் கொள்ளும் நாடன்
சென்றனன் வாழி தோழியென்
மெல்தோள் கவினும் பாயலும் கொண்டே. 274
குரங்கின் தலிஅவன் குருமயிர்க் கடுவன்
சூரலஞ்ச் சிறுகோல் கொண்டு வியலறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட
யாம்நின் நயத்தனம் எனினும்எம்
ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே. 275
மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்
பொங்கல் இளமழை புடைக்கும் நாட
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ
கன்முகை வேங்கை மலரும்
நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே. 276
குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாடநின் மொழிவல் என்றும்
பயப்ப நீத்தல் என்இவள்
கயத்துவளர் குவளையின் அமர்த்த கண்ணே. 277
சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன்பரழ் பாய்ந்தன இலஞ்சி
மீனெறி தூண்டிலின் நிவக்கும் நாடன்
உற்றோர் மறவா நோய்தந்து
கண்டோர் தண்டா நலங்கொண் டனனே. 278
கல் இவர் இற்றி புல்லுவன எறிக்
குளவி மேய்ந்த மந்தி துணையோடு
வரைமிசை உகளும் நாட நீவரின்
கல்லகத் ததுஎம் ஊரே
அம்பல் சேரி அலராம் கட்டே. 279
கருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்பு
இருவெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறுகோல்
மதிபுடைப் பதுபோல தோன்றும் நாட
வரைந்தனை நீஎனக் கேட்டுயான்
உரைத்தனென் அல்லனோ அதென் யாய்க்கே. 280
29. கிள்ளைப் பத்து
வெள்ள வரம்பின் ஊழி போகியும்
கிள்ளை வாழிய பலவே ஒள்ளிழை
இரும்பல் கூந்தல் கொடிச்சி
பெருந்தோள் காவல் காட்டி யவ்வே. 281
சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப்
பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்
சோலைச் சிறுகிளி உன்னு நாட
அரிருள் பெருகின வாரல்
கோட்டுமா வாழங்கும் காட்டக நெறியே. 282
வன்கண் கானவன் மென்சொல் மடமகள்
புன்புல மயக்கத்து உழுத ஏஅனல்
பைம்புறச் சிறுகிளி கடியும் நாட
பெரிய கூறி நீப்பினும்
பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே. 283
அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி
குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்
இருவை நீள்புனங் கண்டும்
பிரிதல் தேற்றாப் பேரன் பினவே. 284
பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள்
மெல்தினை நுவனை யுண்டு தட்டையின்
ஐவனச் சிறுகிளி கடியும் நாட
வீங்குவளை நெகிழப் பிரிதல்
யாங்குவல் லுநையோ ஈங்கிவள் துறந்தே. 285
சிறுதினை கொய்த இருவை வெண்கால்
காய்த்த அவரைப் படுகிளி கடியும்
யாண ராகிய நன்மலை நாடன்
புகரின்று நயந்தனன் போலும்
கவரும் தோழிஎன் மாமைக் கவினே. 286
நெடுவரை மிசையது குறுங்கால் வருடை
தினைபாய் கிள்ளை வெரூஉம் நாட
வல்லை மன்ற பொய்த்தல்
வல்லாய் மன்றநீ அல்லது செயலே. 287
நன்றே செய்த உதவி நன்றுதெரிந்து
யாம் எவன் செய்குவம் நெஞ்சே
மெல்லியல் கொடிச்சி காப்பப்
பல்குரல் ஏனல் பாத்தரும் கிளியே. 288
கொடிச்சி இன்குரல் கிளிசெத் தடுக்கத்துப்
பைங்குரல் ஏனல் படர்தரும் கிளியெனக்
காவலும் கடியுநர் போல்வர்
மால்வரை நாட வரைந்தனை கொண்மோ. 289
அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூக்கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும்அவள் ஒப்பவும் படுமே. 290
30. மஞ்ஞைப் பத்து.
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்
துறுகல் அடுக்கத்து அதுவே பணைத்தோள்
ஆய்தழை நுடங்கும் அல்குல்
காதலி உறையும் நனிநல் லூரே. 291
மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத்
தண்மழை தழீஇய மாமலை நாட
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீநயந்து
நன்மனை அருங்கடி அயர
எம்நலம் சிறப்பயாம் இனிப்பெற் றோளே. 292
சிலம்புகமழ் காந்தன் நறுங்குலை யன்ன
நலம்பெறு கையின்என் கண்புதைத் தோயே
பாயல் இந்துணை யாகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை
நீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே. 293
எரிமருள் வேங்கை இருந்த தோகை
இழையணி மடந்தையின் தோன்றும் நாட
இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்
நன்மனை வதுவை அயர இவள்
பின்னருங் கூந்தல் மலர் அணிந் தோரே. 294
வருவது கொல்லோ தனே வாராது
அவணுறை மேவலின் அமைவது கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞை
இருவி யிருந்த குருவி வருந்துறப்
பந்தாடு மகளிரின் படர்தரும்
குன்றுகெழு நாடனொடு சென்றஎன் நெஞ்சே. 295
கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்
அடுக்கல் மஞ்ஞை கவரு நாட
நடுநாள் கங்குலும் வருதி
கடுமா தாக்கின் அறியேன் யானே. 296
விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை
பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட
பிரியினும் பிரிவ தன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே. 297
மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும்
அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி
தான்எம் அருளாள் ஆயினும்
யாம்தன் உள்ளுபு மற்ந்தறி யேமே. 298
குனற நாடன் குன்றத்துக் கவாஅன்
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அம்சில் ஓதி அசைநடைக் கொடிச்சி
கண்போல் மலர்தலும் அரிதுஇவள்
தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே. 299
கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம்சிறை விவரிக்கும் பெருங்கல் வெற்பன்
வந்தனன் எதிர்ந்தனர் கொடையே
அம்தீம் கிளவி பொலிகநின் சிறப்பே. 300

26. குன்றக் குறவன் பத்து.
குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலிநுன்பல் அழிதுளி பொழியும் நாடநெடுவரைப் படப்பை நும்மூர்க்கடுவரல் அருவி காணினும் அழுமே. 251
குன்றக் குறவன் புல்வேய்க் குரம்பைமன்றாடு இளமழை மறைக்கும் நாடன்புரையோன் வாழி தோழி விரைபெயல்அரும்பனி அளைஇய கூதிர்ப்பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே. 252
குன்றக் குறவன் சார்ந்த நறும்புகைதேஙகமழ் சிலம்பின் வரையகம் கமழும்கானக நாடன் வரையின்மன்றலும் உடையள்கொல் தோழி யாயே. 253
குன்றக் குறவன் ஆரம் அறுத்தெனநறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும்வண்ட்மிர் சுடர்நுதல் குறுமகள்கொண்டனர் செல்வர்தம் குன்றுகெழு நாட்டே. 254
குன்றக் குறவன் காதல் மடமகள்வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள்ஐயள் அரும்பிய முலையள்செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே. 255
குன்றக் குறவன் காதல் மடமகள்வண்படு கூந்தல் தந்தழைக் கொடிச்சிவளையள் முளைவாள் எயிற்றள்இளையள் ஆயினும் ஆரணங் கினனே. 256
குன்றக் குறவன் கடவுட் பேணிஇரந்தனன் பெற்ற வெள்வளைக் குறுமகள்ஆயரி நெடுங்கள் கலிழச்சேயதால் தெய்யநீ பிரியும் நாடே. 257
குன்றக் குறுவன் காதல் மடமகள்அணிமயில் அன்ன அசைநடைக் கொடிச்சியைப்பெருவரை நாடன் வரையும் ஆயின்கொடுத்தனெம் ஆயினோம் நன்றேஇன்னும் ஆனாது நன்னுதல் துயிரே. 258
குன்றக் குறவன் காதல் மடமகள்மன்ற வேங்கை மலர்சில கொண்டுமலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித்தேம்பலிச் செய்த ஈர்நறுங் கையள்மலர்ந்த காந்தள் நாறிக்கவிழ்ந்த கண்ணள்எம் அணங்கி யோளே. 259
குன்றக் குறவன் காதல் மடமகள்மெந்தோள் கொடிச்சியைப் பெறற்கரிது தில்லபைம்புறப் பைங்கிளி ஒப்பலர்புன்புல மயக்கத்து விளைந்தன தினையே. 260

27. கேழற் பத்து
மெந்தினை மேய்ந்த தறுகண் பன்றிவன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்எந்தை அறிதல் அஞ்சிக் கொல்அதுவே மன்ற வாரா மையே. 261
சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றிதுறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்இலங்குமலை நாடன் வரூஉம்மருந்தும் அறியும்கொல் தோழிஅவன் விருப்பே 262
நன்பொன் அன்ன புனிறுதீர் ஏனல்கட்டளை அன்ன கேழல் மாந்தும்குன்றுகெழு நாடன் தானும்வந்தனன் வந்தன்று தோழிஎன் நலனே. 263
இளம்பிறை யன்ன கோட்ட கேழல்களங்கனி யன்ன பெண்பாற் புணரும்அயந்திகழ் சில்மப கண்டிரும்பயந்தன மாதோநீ நய்ந்தோள் கண்ணே. 264
புலிகொல் பெண்பால் புவரிக் குருளைவளைவெண் மருப்பின் கேழல் புரக்கும்குன்றுகெழு நாடன் மறந்தனன்பொன்போல் புதல்வனோடு என்நீத் தோனே 265
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடுகுறுங்கை இரும்புலி பொரூஉம் நாடன்நனிநாண் உடைமையம் மன்றபனிப்பயந் தனநீ நய்ந்தோள் கண்ணே. 266
சிறுகண் பறிப் பெருஞ்சின ஒருத்தல்துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றிஐவனம் கவரும் குன்ற நாடன்வண்டுபடு கூந்தலைப் பேணிப்பண்பில சொல்லும் தேறுதல் செத்தே. 267
தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடுவளமலைச் சிறுதினை ய்ணீஇய கானவர்வரையோங்கு உயர்சிமைக் கேழல் உறங்கும்நன்மலை நாடன் பிரிதல்என்பயக்கும் மோநம் விட்டுத் துறந்தே. 268
கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவைவிஅளைந்த செறுவில் தோன்றும் நாடன்வாராது அவண்உறை நீடின் நேர்வளைஇணை ஈர் ஓதி நீயழத்துணைநனி இழக்குவென் மடமை யானே. 269
கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பில்தலைவிளை கானவர் கொய்தனர் பொய்ரும்புல்லென் குன்றத்துப் புலம்புகொள் நெடுவரைகாணினும் கலிழுநோய் செத்துத்தாம்வந் தனர்நம் காத லோரே. 270

28. குரக்குப் பத்து
அவரை அருந்த மந்தி பகர்வர்பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்பல்பசுப் பெண்டிரும் பெறுகுவன்தொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே. 271
கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்அருவரைத் தீந்தேன் எடுப்பை அயலதுஉருகெழு நெடுஞ்சினைப் பாயும் நாடன்இரவின் வருதல் அறியான்வரும் வரும் என்பள் தோழியாயே. 272
அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர்புந்தலை மந்தி வன்பறழ் ஆரும்நன்மலை நாட நீசெலின்நின்நயத்து உறைவி என்னினும் கழில்மே. 273
மந்திக் கணவன் கல்லாக் கொடுவன்ஒன்கேழ் வயப்புலி குழுமலின் வைரைந்துடன்குன்றுயர் அடுக்கம் கொள்ளும் நாடன்சென்றனன் வாழி தோழியென்மெல்தோள் கவினும் பாயலும் கொண்டே. 274
குரங்கின் தலிஅவன் குருமயிர்க் கடுவன்சூரலஞ்ச் சிறுகோல் கொண்டு வியலறைமாரி மொக்குள் புடைக்கும் நாடயாம்நின் நயத்தனம் எனினும்எம்ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே. 275
மந்திக் காதலன் முறிமேய் கடுவன்தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்பொங்கல் இளமழை புடைக்கும் நாடநயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோகன்முகை வேங்கை மலரும்நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே. 276
குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்கல்லா மந்தி கடுவனோடு உகளும்குன்ற நாடநின் மொழிவல் என்றும்பயப்ப நீத்தல் என்இவள்கயத்துவளர் குவளையின் அமர்த்த கண்ணே. 277
சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்குரங்கின் வன்பரழ் பாய்ந்தன இலஞ்சிமீனெறி தூண்டிலின் நிவக்கும் நாடன்உற்றோர் மறவா நோய்தந்துகண்டோர் தண்டா நலங்கொண் டனனே. 278
கல் இவர் இற்றி புல்லுவன எறிக்குளவி மேய்ந்த மந்தி துணையோடுவரைமிசை உகளும் நாட நீவரின்கல்லகத் ததுஎம் ஊரேஅம்பல் சேரி அலராம் கட்டே. 279
கருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்புஇருவெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறுகோல்மதிபுடைப் பதுபோல தோன்றும் நாடவரைந்தனை நீஎனக் கேட்டுயான்உரைத்தனென் அல்லனோ அதென் யாய்க்கே. 280

29. கிள்ளைப் பத்து
வெள்ள வரம்பின் ஊழி போகியும்கிள்ளை வாழிய பலவே ஒள்ளிழைஇரும்பல் கூந்தல் கொடிச்சிபெருந்தோள் காவல் காட்டி யவ்வே. 281
சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப்பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்சோலைச் சிறுகிளி உன்னு நாடஅரிருள் பெருகின வாரல்கோட்டுமா வாழங்கும் காட்டக நெறியே. 282
வன்கண் கானவன் மென்சொல் மடமகள்புன்புல மயக்கத்து உழுத ஏஅனல்பைம்புறச் சிறுகிளி கடியும் நாடபெரிய கூறி நீப்பினும்பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே. 283
அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளிகுன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால்இருவை நீள்புனங் கண்டும்பிரிதல் தேற்றாப் பேரன் பினவே. 284
பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள்மெல்தினை நுவனை யுண்டு தட்டையின்ஐவனச் சிறுகிளி கடியும் நாடவீங்குவளை நெகிழப் பிரிதல்யாங்குவல் லுநையோ ஈங்கிவள் துறந்தே. 285
சிறுதினை கொய்த இருவை வெண்கால்காய்த்த அவரைப் படுகிளி கடியும்யாண ராகிய நன்மலை நாடன்புகரின்று நயந்தனன் போலும்கவரும் தோழிஎன் மாமைக் கவினே. 286
நெடுவரை மிசையது குறுங்கால் வருடைதினைபாய் கிள்ளை வெரூஉம் நாடவல்லை மன்ற பொய்த்தல்வல்லாய் மன்றநீ அல்லது செயலே. 287
நன்றே செய்த உதவி நன்றுதெரிந்துயாம் எவன் செய்குவம் நெஞ்சேமெல்லியல் கொடிச்சி காப்பப்பல்குரல் ஏனல் பாத்தரும் கிளியே. 288
கொடிச்சி இன்குரல் கிளிசெத் தடுக்கத்துப்பைங்குரல் ஏனல் படர்தரும் கிளியெனக்காவலும் கடியுநர் போல்வர்மால்வரை நாட வரைந்தனை கொண்மோ. 289
அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனிசிறந்தன போலும் கிள்ளை பிறங்கியபூக்கமழ் கூந்தல் கொடிச்சிநோக்கவும் படும்அவள் ஒப்பவும் படுமே. 290

30. மஞ்ஞைப் பத்து.
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்துறுகல் அடுக்கத்து அதுவே பணைத்தோள்ஆய்தழை நுடங்கும் அல்குல்காதலி உறையும் நனிநல் லூரே. 291
மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத்தண்மழை தழீஇய மாமலை நாடநின்னினும் சிறந்தனள் எமக்கே நீநயந்துநன்மனை அருங்கடி அயரஎம்நலம் சிறப்பயாம் இனிப்பெற் றோளே. 292
சிலம்புகமழ் காந்தன் நறுங்குலை யன்னநலம்பெறு கையின்என் கண்புதைத் தோயேபாயல் இந்துணை யாகிய பணைத்தோள்தோகை மாட்சிய மடந்தைநீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே. 293
எரிமருள் வேங்கை இருந்த தோகைஇழையணி மடந்தையின் தோன்றும் நாடஇனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்நன்மனை வதுவை அயர இவள்பின்னருங் கூந்தல் மலர் அணிந் தோரே. 294
வருவது கொல்லோ தனே வாராதுஅவணுறை மேவலின் அமைவது கொல்லோபுனவர் கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞைஇருவி யிருந்த குருவி வருந்துறப்பந்தாடு மகளிரின் படர்தரும்குன்றுகெழு நாடனொடு சென்றஎன் நெஞ்சே. 295
கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்அடுக்கல் மஞ்ஞை கவரு நாடநடுநாள் கங்குலும் வருதிகடுமா தாக்கின் அறியேன் யானே. 296
விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகைபூக்கொய் மகளிரின் தோன்றும் நாடபிரியினும் பிரிவ தன்றேநின்னொடு மேய மடந்தை நட்பே. 297
மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும்அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சிதான்எம் அருளாள் ஆயினும்யாம்தன் உள்ளுபு மற்ந்தறி யேமே. 298
குனற நாடன் குன்றத்துக் கவாஅன்பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்அம்சில் ஓதி அசைநடைக் கொடிச்சிகண்போல் மலர்தலும் அரிதுஇவள்தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே. 299
கொடிச்சி கூந்தல் போலத் தோகைஅம்சிறை விவரிக்கும் பெருங்கல் வெற்பன்வந்தனன் எதிர்ந்தனர் கொடையேஅம்தீம் கிளவி பொலிகநின் சிறப்பே. 300

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.