பாசடைக் கருங்கழி படர்மணல் உலகமும் எழுமலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி வரைஉலகு அனைத்தும் வருவது போல திரைநிரை திரைத்துக் கரைகரைக் கொல்லும் வையைநீர் விழவு புகுந்தனம் எனஒரு (5)
பொய்யினள் அன்றி மெய்யினை நீயும் பொலம்பூண் பெயர்ந்துறை பூணை அருள்தரும் மலர்ச்சி நீங்கிக் கொடுங்கோல் வேந்தெனச் சேக்கோள் கண்ணை செம்மொழிப் பெயர்தந்து ஒன்றுடன் நில்லா மொழியை மதுத்த (10)
முதிரா நாள்செய் முண்டகம் மலர்ந்து கவிழ்ந்த முகத்தைஎம் கண்மனம் தோன்ற அரும்பிய நகையை அன்றே நின்கெழு என்கண் கண்ட இவ்இடை என்னுளம் மன்னிநின் றடங்காக் குடுமிஅம் பெருந்தழல் (15)
பசுங்கடல் வளைந்து பருகக் கொதித்த தோற்றமும் கடந்தது என்றால் ஆற்றல்செய் விண்ணகம் புடைத்து நெடுவரை கரக்கும் கொடுஞ்சூர்க் கொன்ற கூரிலை நெடுவேல் குன்றக் குறவர் கொம்பினுக்கு இனியோன் (20)
குருகொலி ஓவாப் பனிமலர் வாவி வயிறு வாய்த்த குழலியம் கிழவோன் வாழ்பரங் குன்றெனும் மணிஅணி பூண்ட நான்மறை புகழும் கூடல் எம்பெருமான் வான்முதல் ஈன்ற மலைமகள் தன்னொடும் (25)
முழுதுணர் ஞானம் எல்லாம் உடைமை முழுதனுக் கிரகம் கெழுபரம் அநாதி பாசம் இலாமை மாசறு நிட்களம் அவிகா ரக்குறி ஆகிய தன்குணம் எட்டும் தரித்து விட்டறு குற்றமும் (30)
அருச்சனை வணக்கம் பரஉயிர்க்கு அன்பகம் பேரருள் திருநூல் பெருந்துறவு எங்கும் நிறைபொருள் அழுந்தல் அருளினர்க் கூட்டம் இருள்பவம் நடுங்கல் எனும்குணம் எட்டும் தமக்கும் படைத்த விதிப்பேற் றடியவர் (35)
நிலையருள் கற்பென நெடுங்கற்பு உடையோள் முன்னுறின் அவள் மனம் அங்கே நன்னரில் கொண்டு குளிரும் பெறுமே? (38)
|