ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும். |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
அகத்தது ஐயப்படாது உணர்வானை - ஒருவன் மனத்தின்கண் நிகழ்வதனை ஐயப்படாது ஒருதலையாக உணர வல்லானை; தெய்வத்தொடு ஒப்பக்கொளல் - மகனேயாயினும், தெய்வத்தோடு ஒப்ப நன்கு மதிக்க. (உடம்பு முதலியவற்றான் ஒவ்வானாயினும், பிறர்நினைத்தது உணரும் தெய்வத் தன்மையுடைமையின், 'தெய்வத்தொடுஒப்ப' என்றார்.) |
மணக்குடவர் உரை: |
பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரைத் தேவரோடு ஒப்பக் கொள்க. |
தேவநேயப் பாவாணர் உரை: |
அகத்தது ஐயப்படாது உணர்வானை-ஒருவனது மனத்தின்கண் உள்ளதனை ஒருதலையாக உணரவல்லவனை; தெய்வத்தோடு ஒப்பக் கொளல்- வடிவால் மாந்தனாயினும் மதிநுட்பத்தால் தெய்வம்போன்றவனென்று கருதி,அதற்கேற்ப மதித்துப் போற்றுக. உணர்தல் உள்ளத்தால் நுணுகியறிதல். மாந்தன் மாந்தனே யாதலின் 'தெய்வமாக' என்னாது 'தெய்வத்தோ டொப்ப' என்றார். 'படாஅ' இசைநிறை யளபெடை. |
கலைஞர் உரை: |
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும். |
சாலமன் பாப்பையா உரை: |
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும். |
Translation |
Undoubting, who the minds of men can scan,
As deity regard that gifted man. |
Explanation |
He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind). |
Transliteration |
Aiyap Pataaadhu Akaththadhu Unarvaanaith
Theyvaththo Toppak Kolal |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|