சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள், எங்கள் தலை தான் மாஸ், எங்கள் தளபதி தான் மாஸ் என கருத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், தல, தளபதி நட்பு என்றுமே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் நடந்த சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம். இந்த சம்பவம் இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வாரம் வெளியான கத்தி பட பாடல்களில் விஜய் பாடிய செல்பி புள்ள பாடலை கேட்டு அஜித், முருகதாஸிடம் பாடல் நன்றாக உள்ளது, அதிலும் விஜய்யின் குரல் பாடலை வேறு தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது. அனிருத் நன்றாக இசையமைத்துள்ளார் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளாராம்.
இதற்கு முன்பு ஒருமுறை தலைவா படத்தில் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ பாடலை முதல் முதலாக அஜித் தான் கேட்டு, விஜய் நன்றாக பாடியுள்ளார் என்று ஏ.எல்.விஜய்யிடம் கூறினார் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
|