பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு நேற்று மிக எளிமையாக துவங்கப்பட்டது.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் ஸ்டார் அக்ஷய் குமார் நடிக்க இருப்பதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரின் கதாபாத்திரம் ஒரு வேளை வில்லனாக கூட இருக்கலாம்.
அக்ஷய் கேரக்டரில் நடிக்க இருந்த அர்னால்டு போட்ட நிபந்தனைகளை ஷங்கர் ஏற்றுக்கொள்ளாததால் தான் தற்போது அர்னால்டு போய் அக்ஷய் வந்துவிட்டார் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்றால் படத்தின் பெயருடன் 2 என்ற எண்ணை மட்டும் சேர்த்து குறிப்பிடுவார்கள். எந்திரன் படம் ரோபோ பற்றியது என்பதால், கணினி தொழில்நுட்பத்துடன் சம்பந்தப்பட்ட கதை என்பதாலும் ஷங்கர் 2 என்பதை கணினி தொழில்நுட்பப் பாணியில் 2.0 என்றே குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை படத்திற்கு பெயர் வைத்திருப்பதைக் கூட எந்திரன் 2.0 என்றே குறிப்பிடவும் வாய்ப்புள்ளது.
3டியில் உருவாக்கப்படும் எந்திரன் 2.0 படத்தில் ஐயன் மேன், அவென்ஜர்ஸ் போன்ற படங்களில் வேலை பார்த்த லிகசி எஃபெக்ட்ஸ் நிறுவனம் அனிமட்ரானிக்ஸை கவனித்துக்கொள்ள, ட்ரான் படத்துக்கு காஸ்ட்யூம்ஸ் தயார் செய்த மேரி.இ.வோட் 2.0-ல் இணைகிறார். டிரான்ஸ்ஃபார்மர்ஸ் ஆக்ஷன் இயக்குனர் கென்னி பேட்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸுக்கு லைஃப் ஆஃப் பை புகழ் ஜான் ஹியூஸ் போன்றவர்கள் பட்டையைக் கிளப்ப உள்ளார்கள்.
இசைக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். வசனத்துக்கு ஜெயமோகன் என படம் முழுவதும் அமர்களமாக இருக்கப்போகிறதாம்.
|