LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- மற்றவை

அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.

மிகக்குறைந்த கட்டணத்தில் இங்கே தங்கிக் கொள்ளலாம் மூன்று வேளையும் தமிழ்நாட்டு உணவு சாப்பிடலாம்

இதற்கு ஒரே ஒரு தகுதிதான் இருக்கவேண்டும் அந்தத் தகுதி தமிழர்களாக இருக்கவேண்டும் என்பதுதான்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் அல்லது நாட்டுக் கோட்டை செட்டியார் என்றழைக்கப்படும் வணிக சமூகத்தினர் ஆன்மீகத்திற்கு செய்துவரும் பணி மகத்தானதாகும்.

அப்படிப்பட்ட பணிகளில் ஒன்றாக வட மாநிலங்களுக்கு யாத்திரை செல்லும் தமிழர்கள் மொழி தெரியாத தேசத்தில் உணவிற்கும் தங்குவதற்கும் சிரமப்படக்கூடாது என்பதற்காக பல சத்திரங்களை கட்டிவைத்துள்ளனர்.

காசி,அலகபாத்,அயோத்தி,கயா ஆகிய இடங்களில் கட்டி வைத்துள்ள சத்திரங்கள் அதில் முக்கியமானவை.காசியி்ல் உள்ள சத்திரத்தில் இடம் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் இருந்து பெரும்பாலோர் அங்கு செல்கின்றனர் காரணம் அந்த அளவிற்கு அங்கு சேவை வழங்கப்படுகிறது.

அலகபாத் சத்திரத்திலும் அப்படியே அங்கு கும்பமேளா நடந்த சமயத்தில் தமிழர்கள் பலர் சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் சிரமமில்லாமல் இருந்தனர் என்றால் அதற்கு இந்த சத்திரம்தான் காரணம்.

தலைமைச் சங்கத்தில் இருந்து நியமிக்கப்பட்ட நாகப்பன்-சாரதா ஆகிய வயதான தம்பதியினர்தான் இந்த சத்திரத்தின் பொறுப்பாளர்களாக இருக்கின்றனர்.

எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் இவர்கள் இங்கு வந்து பல வருடங்களாகிவிட்டபடியால் இந்தியும் நன்கு பேசுகின்றனர்.இதன் காரணமாக உள்ளூர் மக்களையும் வாகன ஒட்டிகளையும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இது இங்கு செல்லக்கூடிய தமிழர்கள் திரிவேணி சங்கமத்தில் குளிக்க, பூஜை செய்ய, உள்ளுரை சுற்றிப்பார்க்க சரியாக ஆட்களை கொடுத்து வழிகாட்டுகின்றனர்.

இரண்டு நாட்கள் ரயிலில் பயணம் செய்து சப்பாத்தி சாப்பிட்டு நொந்து வந்தவர்கள் இ்ங்கு சுடச்சுட சாதம் சாம்பார் ரசம் காய்கறி இட்லி வடை கிடைத்ததும் ஒரு கட்டு கட்டுகிறார்கள்,தங்கியிருக்கும் நாட்களில் சாப்பாடு போடுவது மட்டுமின்றி ஊர் திரும்பும் போது ரயில் பயணத்தில் தேவைப்படக்கூடிய சாப்பாட்டையும் பார்சலாக கொடுக்கின்றனர்.

அலகபாத் ரயில் நிலையத்தில் இறங்கி ‛நாட்கோட் சத்தர்' என்றால் போதும் ஆட்டோக்காரர்கள் கொண்டுபோய் இறக்கிவிடுவர் அவ்வளவுதுாரத்திற்கு சத்திரம் பிரபலம்.

இந்த விடுமுறைக்கு அலகபாத் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த சத்திரத்தி்ல் தங்கி செல்வது உங்கள் பர்ஸ்க்கும் உடம்புக்கு நல்லது.அலகபாத் நாட்டுக்கோட்டை நகர சத்திரத்திற்கான போன் எண்:0532-2501275.வயதானவர் என்பதால் மெதுவாகத்தான் பேசுவார், போனை எடுக்காவிட்டால் வந்தவர்களுக்கு உதவ வெளியில் போயிருக்கிறார் என்று பொருள்.

 

-முகநூல் பதிவிலிருந்து (உறுதி செய்யப்படாதது). தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் வாசகர்களுக்கு தெரிவிக்கலாம். 

by Swathi   on 21 Mar 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.