அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது, ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி வருத்துவதாகும் |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
(பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும். ('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம். |
மணக்குடவர் உரை: |
தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவிநீக்கிக் கலவாது ஆடவர் சேறல், பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும். |
தேவநேயப் பாவாணர் உரை: |
(பரத்தையரிடமிருந்து நின்றும் வந்ததாகக் கருதப்பட்ட தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.)
தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக் கலவாது ஆடவர் விட்டுவிடுதல்; அலந்தாரை அல்லல் நோய் செய்த அற்று- முன்னமே துன்பமுற் றழிந்தாரை அதன் மேலுந் துன்புறுத்தினாற் போலும்.
நீர் பிறர்பாற் செல்லுதலின் நும்மைப் பெறாது புலந்திருக்கின்ற பரத்தையரிடஞ் சென்று , அவர் புலவி நீக்கித் தழுவீராயின் அவர் ஆற்றார் என்பதாம் . 'ஆல்' அசைநிலை. |
கலைஞர் உரை: |
ஊடல் கொண்டவரின் ஊடல் நீக்கித் தழுவாமல் விடுதல் என்பது,
ஏற்கனவே துன்பத்தால் வருந்துவோரை மேலும் துன்பநோய்க்கு ஆளாக்கி
வருத்துவதாகும். |
சாலமன் பாப்பையா உரை: |
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம். |
Translation |
'Tis heaping griefs on those whose hearts are grieved;
To leave the grieving one without a fond embrace |
Explanation |
For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony |
Transliteration |
Alandhaarai Allalnoi Seydhatraal Thammaip
Pulandhaaraip Pullaa Vital |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|