LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

அமைச்சர் வீட்டின் வேலையாளா? அரசு ஊழியரா?

ஏதோ ஒரு நிகழ்ச்சிக்குச் சென்று கக்கன் வீடு திரும்புகிறார் . மகிழுந்து அவர்தம் வீட்டின் மதில் சுவர் கதவுகளைத் தாண்டும் போது தம் பணியாளர் ஒருவர் மண்ணெண்ணெய் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருவதைப் பார்த்து விட்டு , ஓட்டுநரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னார் . மண்ணெண்ணெய் எடுத்துச் , செல்லும் அந்தப் பணியாளரை அழைத்து ‘இது யாருக்கு ?’ என்று கேட்டார் . ‘ நம்ம வீட்டிற்குத்தான்’ என்றவுடன் ‘யார் வாங்கி வரச் சொன்னது ?’ என்றார் கக்கன் . ‘ அம்மாதான் வாங்கி வரச் சொன்னார்கள்’ என்று அந்தப் பணியாளர் சொன்னதும் கக்கன் முகம் கோபத்தால் வெளிர்ந்தது . உடனே ஓட்டுநரை விட்டு தம் மனைவியை அழைத்து வரச் சொன்னார் . இதற்கிடையில் இந்த மண்ணெண்ணெய்ப் பாத்திரத்தை மதிற்சுவருக்கு வெளியே வைக்க சொன்னார் . தயங்கிய பணியாளருக்கு நல்ல திட்டு கிடைத்தது . வேறு வழியின்றி அப்பணியாளரும் அந்த மண்ணெண்ணெய்ப் பாத்திரத்தை மதிலுக்கு வெளியே சாலையில் வைத்தார் . இவரைப் பார்க்க வீட்டிற்கு வந்த பார்வையாளர்கள் , காவலர்கள் அனைவரும் இதைப் பார்த்துக் கொண்டு இருந்தனர் .

தமது மனைவி வந்ததும் அந்தப் பணியாளரைக் காட்டி ‘இவர் யார் தெரியுமா ? அரசு ஊழியர் , உனக்கு ஊழியம் செய்பவர் அல்ல’ என்று தொடங்கித் திட்ட வேண்டியதெல்லாம் திட்டி முடித்தார் . பலர் முன்னிலையில் இவ்வாறு நடந்து கொண்டதால் கக்கனின் மனைவி கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார் . ‘ அதோ ரோட்டில் உனது மண்ணெண்ணெய் இருக்கிறது , எடுத்துக் கொண்டு போ , இனி அரசுப் பணியாளர்களை உனது சொந்த வேலைக்குப் பயன்படுத்தாதே’ என்று ஆணையிட்டார் . அந்த அம்மையாரும் அதனை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார் . அதுவரை , அங்கேயே நின்றுவிட்டுப் பிறகுதான் வீட்டிற்குள் வந்தார் கக்கன் . இதைக் கண்ணுற்ற பணியாளர்கள் முதல் பார்வையாளர்கள் வரை மௌனமாக அழாமல் அழுதனர் . இதனைக் கண்ணுற்ற கக்கனின் தம்பி விஸ்வநாதகக்கனும் அன்று நடந்ததை இன்றும் நினைவு கூர்கிறார் . அரசுப் பணியாளர்கள் அரசுப்பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்றிருந்தால் இந்த நாடு எவ்வளவோ வளர்ந்திருக்கும் என்று எண்ணும் உள்ளம் மக்களிடையே வளர்ந்திருந்தாலும் உண்மையாக

நடக்கும் அத்திப்பூக்களில் கக்கனும் ஒருவர் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.