LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

உறுதியானது அமரன் - 2

கடந்த 1992-ம் ஆண்டு ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன படம் அமரன். இந்த படத்தில் கார்த்திக் தாதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'அமரன்' படத்தின் மூலமாக கார்த்திக் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் திரைப் பாடகர்களாகவும் அறிமுகமானார்கள். குறிப்பாக கார்த்திக் பாடிய வெத்தல போட்ட சோக்குல பாடல் பட்டிதொட்டி எல்லாம் எதிரொலித்தது.

சமீபத்தில் கே.வி ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் கார்த்திக் வில்லனாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என முடிவு செய்திருக்கிறாராம். அதன் படி ஏற்கனவே நடித்து வெற்றி பெற்ற அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். கே. ராஜேஸ்வர் இரண்டாம் பாகத்தையும் இயக்க, மே அல்லது ஜுன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் கார்த்திக் உடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

by Swathi   on 05 Mar 2015  0 Comments
Tags: Amaran   Amaran Movie   Amaran Part 2   Amaran 2   Karthik Amaran 2   கார்த்திக்   அமரன் 2  
 தொடர்புடையவை-Related Articles
ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி? ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?
உறுதியானது அமரன் - 2 உறுதியானது அமரன் - 2
தனுஷை தொடர்ந்து அஜீத்துக்கும் வில்லனான நவரச நாயகன் கார்த்திக் !! தனுஷை தொடர்ந்து அஜீத்துக்கும் வில்லனான நவரச நாயகன் கார்த்திக் !!
தனுஷுக்கு வில்லனாக கார்த்திக் !! தனுஷுக்கு வில்லனாக கார்த்திக் !!
கேவி ஆனந்த் இயக்கத்தில், தனுஷுடன் கை கோர்க்கும் நவரச நாயகன் கார்த்திக் !! கேவி ஆனந்த் இயக்கத்தில், தனுஷுடன் கை கோர்க்கும் நவரச நாயகன் கார்த்திக் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.