கடந்த 1992-ம் ஆண்டு ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன படம் அமரன். இந்த படத்தில் கார்த்திக் தாதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'அமரன்' படத்தின் மூலமாக கார்த்திக் மற்றும் ஸ்ரீவித்யா இருவரும் திரைப் பாடகர்களாகவும் அறிமுகமானார்கள். குறிப்பாக கார்த்திக் பாடிய வெத்தல போட்ட சோக்குல பாடல் பட்டிதொட்டி எல்லாம் எதிரொலித்தது.
சமீபத்தில் கே.வி ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் கார்த்திக் வில்லனாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என முடிவு செய்திருக்கிறாராம். அதன் படி ஏற்கனவே நடித்து வெற்றி பெற்ற அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். கே. ராஜேஸ்வர் இரண்டாம் பாகத்தையும் இயக்க, மே அல்லது ஜுன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் கார்த்திக் உடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
|