LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை பாடல்கள்

அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே -வள்ளலார் -திருவருட்பா

திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திரு அருட்பா

இரண்டாம் திருமுறை / Second Thirumurai 

103. பாங்கியர்க் கறிவுறுத்தல் 

 

சிந்து
திருச்சிற்றம்பலம்

1. அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே - அவர் 
ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமா ரே. 

2. ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமா ரே - மிக 
ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமா ரே. 

3. இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமா ரே - நட 
மிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமா ரே. 

4. ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமா ரே - நட 
னேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமா ரே. 

5. உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமா ரே - இன்ப 
உருவாகி ஓங்குகின்றார் பாங்கிமா ரே. 

6. ஊனவுல கைக்கருதேன் பாங்கிமா ரே - மன்றில் 
உத்தமருக் குறவாவேன் பாங்கிமா ரே. 

7. கற்பனையெல் லாங்கடந்தார் பாங்கிமா ரே - என்றன் 
கற்பனைக்குட் படுவாரோ பாங்கிமா ரே. 

8. கண்டிலர்நான் படும்பாடு பாங்கிமா ரே - மூன்று 
கண்ணுடையா ரென்பாரையோ பாங்கிமா ரே. 

9. கன்மனமெல் லாங்கரைப்பார் பாங்கிமா ரே - மனங் 
கரையாரென் னளவிலே பாங்கிமா ரே. 

10. கள்ளமொன்று மறியேனான் பாங்கிமா ரே - என்னைக் 
கைவிடவுந் துணிவாரோ பாங்கிமா ரே. 

11. கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமா ரே - இன்று 
கைநழுவ விடுவாரோ பாங்கிமா ரே. 

12. கண்டவரெல் லாம்பழிக்கப் பாங்கிமா ரே - என்றன் 
கன்னியழித் தேயொளித்தார் பாங்கிமா ரே. 

13. காமனைக்கண் ணாலெரித்தார் பாங்கிமா ரே - என்றன் 
காதலைக்கண் டறிவாரோ பாங்கிமா ரே. 

14. காவலையெல் லாங்கடந்து பாங்கிமா ரே - என்னைக் 
கைகலந்த கள்ளரவர் பாங்கிமா ரே. 

15. காணவிழைந் தேனவரைப் பாங்கிமா ரே - கொண்டு 
காட்டுவாரை யறிந்திலேன் பாங்கிமா ரே. 

16. கிட்டவர வேண்டுமென்றார் பாங்கிமா ரே - நான் 
கிட்டுமுன்னே யெட்டநின்றார் பாங்கிமா ரே. 

17. கின்னரங்கே ளென்றிசைத்தார் பாங்கிமா ரே - நான் 
கேட்பதன்முன் சேட்படுத்தார் பாங்கிமா ரே. 

18. கிள்ளையைத்தூ தாவிடுத்தேன் பாங்கிமா ரே - அது 
கேட்டுவரக் காணேனையோ பாங்கிமா ரே. 

19. கீதவகை பாடிநின்றார் பாங்கிமா ரே - அது 
கேட்டுமதி மயங்கினேன் பாங்கிமா ரே. 

20. கீழ்மைகுறி யாமலென்னைப் பாங்கிமா ரே - மனக் 
கேண்மைகுறித் தாரேயன்று பாங்கிமா ரே. 

21. கீடமனை யேனெனையும் பாங்கிமா ரே - அடிக் 
கேயடிமை கொண்டாரன்று பாங்கிமா ரே. 

22. குற்றமெல்லாங் குணமாகப் பாங்கிமா ரே - கொள்ளுங் 
கொற்றவரென் கொழுநர்காண் பாங்கிமா ரே. 

23. குற்றமொன்றுஞ் செய்தறியேன் பாங்கிமா ரே - என்னைக் 
கொண்டுகுலம் பேசுவாரோ பாங்கிமா ரே. 

24. குஞ்சிதப்பொற் பாதங்கண்டாற் பாங்கிமா ரே - உள்ள 
குறையெல்லாந் தீருங்கண்டீர் பாங்கிமா ரே. 

25. கூற்றுதைத்த பாதங்கண்டீர் பாங்கிமா ரே - நங்கள் 
குடிக்கெல்லாங் குலதெய்வம் பாங்கிமா ரே. 

26. கூறரிய பதங்கண்டு பாங்கிமா ரே - களி 
கொண்டுநிற்க விழைந்தேனான் பாங்கிமா ரே. 

27. கூடல்விழைந் தேனவரைப் பாங்கிமா ரே - அது 
கூடும்வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமா ரே. 

 

by Swathi   on 22 Jul 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்
பண்ணிசை விழா  -தொடக்க நிகழ்வை வட  அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு  பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.