இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களைக் கண்டித்து அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை ஆணையத்தில், தீர்மானம் கொண்டு வரவிருக்கிறது. ஆயினு, ஐ.நா. மனித உரிமை ஆணையமே இந்த இலங்கையின் போர்க் குற்றங்களைக் கண்டித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. 38 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த அறிக்கையில் போர் முடிவுற்ற பின்னரும்கூட, கடத்தலால் காணாமல் போகின்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருவது; தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் எல்லோரும் பாலியல் வல்லுறவிற்கு ஆளாவோம் எனும் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பது; மேலும் இப்போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்; இப்படியான தீர்மானங்களில் சிலவற்றை அமெரிக்காவும் தனது தீர்மானத்தில் இணைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
|