புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்து அமெரிக்காவின், "வாஷிங்டன் போஸ்ட்" என்ற பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் உலகின் துயரமான மனிதராக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மாறி விட்டார் என அந்த பத்திரிகை விமர்சித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும், "டைம்" பத்திரிகை, சமீபத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்து, கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில், "இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், செயல்படாத பிரதமராக இருக்கிறார்" என குறிப்பிட்டிருந்தது. நீண்ட நாளுக்கு பின், சமீபத்தில் அவர், நிலக்கரி விவகாரம் தொடர்பாக வாய் திறந்தார். அப்போது கூட 1,000 பதில்களை விட, என்னுடைய மவுனம் உயர்வானது என்று கூறி சமாளித்து விட்டார்.
|