உலகையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. நேற்றிரவு பிரசாரம் முடிந்தது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த தேர்தலில் ஒபாமா மீண்டும் அதிபராவாரா என உலக மக்களால் எதிர்பார்க்கபடுகிறது அல்லது அவரை எதிர்த்து போட்டியிடும் முன்னால் அதிபர் மிட் ரோம்னிக்கு வெற்றி கிடைக்குமா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரியில் ஒபமாவின் பதவிக்காலம் முடிகிறது.அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல் நடைபெறும்.
அமெரிக்க அரசியல் சட்டப்படி பிரதிநிதிகள் சபைக்கு 435 பேரும், செனட் சபைக்கு 100 பேரும், வாஷிங்டன் பிரதிநிதிகள் 3 பேருமாக 538 பிரதிநிதிகள் இந்த தேர்தலில் தேர்வு செய்யப்படுவார்கள். அதை அடுத்து அவர்கள் அனைவரும் வாக்களித்து, அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்வு செய்வார்கள். இந்த தேர்தல் வரும் டிசம்பர் 17ம் தேதி நடைபெறும் .
அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல் மறைமுக தேர்தல் என்றாலும், நமது மக்களவையை போலவே பெரும்பான்மை பிரதிநிதிகள் எந்த கட்சிக்கு கிடைத்துள்ளதோ, அந்த கட்சி வேட்பாளர்களே அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்வு செய்வார்கள். எனவே, இன்று நடைபெறும் தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கு அதிக பிரதிநிதிகள் கிடைக்கிறார்கள் என்பதை வைத்து அதிபர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம். 538 பிரதிநிதியில் 270 பிரதிநிதிகளை பெறும் கட்சி வேட்பாளரே அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒபாமாவுக்கும், குடியரசு கட்சியின் வேட்பாளருமான மிட்ரோம்னிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. கடைசியாக வந்த கருத்து கணிப்புகளில் இருவருக்குமே சமபலம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. ‘சிஎன்என் போல்‘ நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு 48 சதவீதமும் மிட்ரோம்னிக்கு 47 சதவீதமும் தரப்பட்டுள்ளது,கணிப்புகளில் ஒபாமாவுக்கு ஆதரவு ௦.1 சதவீதம் அதிகமாக உள்ளதால் அவரே மீண்டும் அதிபராவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முடிவுகள் தெரிந்து விடும். இந்திய நேரப்படி நாளை நள்ளிரவில் முடிவு தெரியும்.
|