சயனநிலையில் பெரியநாயகி என்ற பெயரில் அம்பிகை எட்டே முக்கால் அடியில் அருள்பாலிக்கிறாள். புல்லாங்குழலுடன் கூடிய கருப்பசாமி அருள்பாலிப்பதும் சிறப்பு.இங்கு, சயனநிலையில் பெரியநாயகி என்ற பெயரிலும் அம்பிகை அருள்பாலிக்கிறாள். உயரம் எட்டே முக்கால் அடி. இச்சன்னதியின் வாசலில் சாந்த நிலையில் மடியில் குழந்தையை வைத்த பேச்சி இருக்கிறாள்.
முத்துகருப்பண்ண சுவாமி வேங்கை மரத்திலும், மாசிப்பெரியண்ணசாமி சந்தனமரக் கட்டையிலும், பூதேவி, ஸ்ரீதேவி சமேத தேங்கு பெருமாள் விக்ரகங்கள் மரத்தாலும் செய்யப்பட்டதால் அபிஷேகம் செய்வதில்லை. மாசி பெரியண்ணசாமிக்கு பச்சைபருப்பு, பச்சை மாவு, பானகம் போன்றவை சமைக்காமலேயே நைவேத்தியம் செய்யப்படுகிறது. பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைப்பதில்லை.
கண்ணன் தான் புல்லாங்குழல் வைத்திருப்பான். ஆனால், புல்லாங்குழலுடன் கூடிய கருப்பசாமியை தரிசிக்கலாம். திங்கள், வெள்ளியில் மட்டும் ஒருமணி நேரம் மட்டுமே திறக்கும் அதிசய தலம். |