குருவாயூரில் சந்தன அபிஷேகம், சபரிமலையில் நெய் அபிஷேகம் போன்று பாலக்காடு மணப்புள்ளி பகவதிக்கு கருப்பு நிற சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இவளுக்கு மூன்று கண், நான்கு கோரைப்பற்கள் இருப்பது விசேஷம்.பகவதி அம்மன் அரக்கர்களை வீழ்த்த பயன் படுத்திய வீரவாள், கோயில் பின்புறமுள்ள தெப்பக்குளத்தில் இருப்பதாக நம்பிக்கையுள்ளது.
வேலை திருவிழாவின் போது, குளத்தில் பகவதி அம்மன் வாள் எடுக்கும் வெளிச்சப்பாடு திருவிழா நடக்கிறது. அருள் வந்த ஒருவர், குளத்தில் இறங்கி வாளை எடுத்து வந்து பகவதி சந்நிதானத்தில் வைத்து பூஜிக்கிறார். வேலை திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதே வேல ஊட்டு ஆகும்.
இந்த திருவிழாவின் போது 15 யானைகள் அணிவகுத்து நிற்கும். பஞ்சவாத்தியம், பாண்டி, பஞ்சாரி மேளம் வாசிக்கப்படும். மணப்புள்ளி பகவதி வடக்கு முகமாக கருப்பு நிறத்தோற்றத்துடன் அருள்பாலிக்கிறாள். |