இங்குபகவதி காலை வெண்ணிற ஆடையில் சரஸ்வதி, உச்சிவேளையில் சிவப்புஆடையில் லட்சுமி, மாலையில் நீலநிற ஆடையில் துர்கையாக அருள்பாலிப்பது சிறப்பு. பொதுவாக தெய்வங்கள் அனைத்தும் இடது கையை பாதத்தில் காட்டி வலது கையில் அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள பகவதி எல்லாவித பாவத்திலிருந்தும் காப்பவள் என்பதால் வலதுகையை பாதத்தில் காட்டி, இடது கையில் அருள்பாலிப்பது சிறப்பு.கோயில் தெற்குப்பிரகாரத்தின் இடது பக்கம் கோயிலின் தோட்டம் உள்ளது. வலது பக்கம் மகா மண்டபம் உள்ளது.
இந்த மண்டத்தில் உள்ள கொடிமரம் அருகில் நின்று பார்த்தாலே மூலஸ்தானத்தில் உள்ள தேவி பகவதியை தரிசிக்கலாம்.குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பவர்கள், பிரகாரத்தின் வடக்கு பக்கம் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் பூஜைசெய்கிறார்கள். பிரகாரத்தின் நடுவில் யக்ஷி, ஜேஷ்டா பகவதி, நாகர் சன்னதிகளும் தல விருட்சமும் உள்ளது. இதனை அடுத்துள்ள சன்னதியில் சிவன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். |