ஆவணி வளர்பிறை முதல் வெள்ளியில் காப்பு கட்டி அடுத்த வெள்ளியில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் அபிஷேக ஆராதனை, சமபந்தி போஜனம், சக்தி கிரகம் எடுத்தல் போன்றவைகள் நடைபெறும். மறுநாள் சனிக்கிழமை பொது மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். அன்று இரவு அப்பகுதி முழுவதும் சாமி சுற்றி வரும். அப்போது ஒவ்வொரு வீடுமே மண்டகப்படி தான்.
அனைத்து மதத்தினரும் வந்து வழிபாடு செய்வதும் தனி சிறப்பு தான். இத்தலத்தில் சங்கடகர சதுர்த்தியில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு, வெள்ளி தோறும் நடத்தப்படும் ராகு கால பூஜை, மாத கடைசி வெள்ளி சிறப்பு அர்ச்சனை, செவ்வாய் தோறும் முருகனுக்கு சிறப்பு அலங்காரம், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனை ஆகியவையும் ஆவணித்திருவிழாவும் உபயதாரர்களால் சிறப்பாக நடத்தப்படுகிறது. |