இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.அன்னை பார்வதி வைகை வனத்தில் தவம் செய்த அதே காலத்தில், மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னனுக்கு ஊழ்வினையால் பார்வை பறி போனது. மன்னனும் இறைவனை மனமுருகி வேண்டினான். அவனது கனவில் தோன்றிய இறைவன்,"வைகைக்கரை ஓரத்தில் அன்னை பார்வதி கவுமாரி' என்ற திருநாமத்துடன் தவம் இருக்கிறாள்.
அவளை வழிபட்டால், உனது விழிக்கு ஒளி கிடைக்கும்" என்று கூறி மறைந்தார்.இறைவனின் உத்தரவுப்படி வீரபாண்டியன் கவுமாரி அம்மனை உருகி வேண்டி ஒரு கண்ணின் ஒளியைப் பெற்றான். அதே போல் கவுமாரி அம்மன் வணங்கிய கண்ணீசுவரரை வணங்கி மறுகண்ணின் ஒளியையும் பெற்றான்.கவுமாரியம்மன் கோயிலில் உள்ள கிணற்று நீரே அம்மனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நீரைத்தான் மக்கள் தீர்த்தமாக எடுத்துசெல்கிறார்கள் |