இத்தல அம்பிகை சுயம்பு லிங்க வடிவில் அருள்பாலிக்கிறாள்.மாரியம்மன் கைகளில் உடுக்கை, கத்தி, கட்கம், கபாலத்துடன் காட்சி தருகிறாள். இவளுக்கு முன்புறம் சுயம்பு அம்பிகை லிங்க வடிவில் காட்சி தருகிறாள். சுயம்புவிற்கு அம்பாளின் முகத்தைப் போல அலங்காரம் செய்கிறார்கள். இவளை பூஜித்த பின்பே, சிலை வடிவிலுள்ள அம்பிகைக்கு பூஜை செய்கின்றனர்.அபிஷேகம் செய்யும்போது மட்டுமே, சுயம்பு அம்பிகையை தரிசிக்க முடியும்.
பக்தர்களின் நோய் தீர்த்து அருளியவள் என்பதால் இவளை, "மருத்துவச்சி' என்றே அழைக்கிறார்கள். தீராத நோய் ஏற்பட்டவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் நிவர்த்தியாகும் என்கிறார்கள்.மாரியம்மன், பராசக்தியின் ஒரு அம்சம் என்பர். இதனால் இவள் சக்தி ஆகிறாள். சிவமும், சக்தி ஒன்று என்பதன் அடிப்படையில், சிவராத்திரியன்று இரவில் இங்கு மாரியம்மனுக்கு, சிவனைப்போலவே அலங்காரம் செய்து, பூஜிக்கின்றனர்.
அப்போது அம்பிகைக்கு நெற்றிக்கண் சூடி, தலையில் பிறைச்சந்திரன், கங்காதேவி, கையில் உடுக்கை, சூலம் ஆகியவற்றுடன், சிவனுக்குரிய புலித்தோல் நிறத்தாலான ஆடை அணிவித்து அலங்கரிப்பர். |