இந்த காளி கிராமத்தில் ஏழு அம்மன்கள் ஒரே ஊரில் அமர்ந்து அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு. இங்குள்ள துர்கா தேவி திருமேனி மூக்கின் நுனியில் மூக்குத்தி போடுவது போன்ற துளையுடன் இருப்பது தனி சிறப்பு.ஒரு காலத்தில் ஸ்ரீநிவாசபுரம் என அழைக்கப்பட்டது இந்த ஊர். திடீரென ஒரு நாள் ஊர்மக்கள் பலரும் விஷக்காய்ச்சலாலும், வாந்தி-பேதியாலும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வெள்ளம் வந்து வயல்களுக்குள் பாய்ந்து பயிர்களையெல்லாம் அழித்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் ஊர் எல்லையில் தஞ்சம் அடைந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் துயர்களைப் போக்க இங்கு காளி எழுந்தருளினாள். மகிஷாசுரனை வதம் செய்த தேவி எருமையென வந்த அசுரனின் தலை பூமியில் விழக்கூடாது, விழுந்தால் பூமிக்கு ஆபத்து என்று அசுரனின் தலையைக் கொய்ததுடன், பூமியில் விழாமல் கரங்களில் ஏந்தி நின்றாளாம்.
அப்படி அவன் நின்ற இடம் தான் கிடாத்தலைமேடு என்று திகழ்கிறது. இங்கே காளிதேவி, துர்கையாக எழுந்தருள்கிறாள். மிகுந்த உக்கிரமும், அளவற்ற கருணையும் கொண்ட துர்க்கையாக அனைவரையும் காக்கிறாள். ஊரின் நுழைவுவாயிலில் மந்தகரை காளியம்மனும், இன்னொரு எல்லையில் நத்தம் மாரியம்மனும், வடக்கு எல்லையில் வடகாளியம்மனும் வீற்றிருக்கின்றனர். |