அம்மனின் 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. ஆதிசங்கரர் இத்தலத்திற்கு விஜயம் செய்து அம்பாள் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்திருப்பது சிறப்பு. இங்குள்ள இறைவனின் பெயர் மல்லேஸ்வரர்.விஜயவாடாவில் உள்ள இந்திரகில பர்வதத்தில் அருள்பாலிக்கும் இந்த அன்னையின் பெயர் கனக துர்க்கேஸ்வரி. இறைவன் மல்லேஸ்வரர். இது ஒரு சக்தி பீடமாகும்.
நிசும்பன், சரபாசுரன், மகிஷாசுரன் மற்றும் துர்க்காசுரனை துர்க்கை, உக்கிரசண்டி மற்றும் பத்திரகாளி ஆகிய அவதாரங்கள் எடுத்து அழித்த ஜெகன்மாதாவின் இருப்பிடமே இந்த தலமாகும்.விஜயவாடாவுக்கு விஜயபுரி என்ற பெயர்தான் இருந்தது. பல வெற்றிவீரர்கள் வாழ்ந்த பூமி என்பதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டது.கந்தபுராணத்தில், இந்திரகில முனிவர் பார்வதியே தனக்கு மகளாகப்பிறக்க வேண்டும் என தவமிருந்தார்.
பார்வதியும் அவர் முன்பு தோன்றி இந்திரகிலரை ஒரு குன்றாக மாறினால்தான் மகளாகப் பிறப்பேன் என நிபந்தனை விதித்தாள். முனிவரும் குன்றாக மாறி நின்றார். ஆதிபராசக்தி அந்த குன்றில் வந்து கொலுவிருந்தாள், என கூறப்பட்டுள்ளது. |