இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காளியம்மனும் இருக்கின்றனர். தாரமங்கலத்தை சுற்றியிருக்கும் 18 பட்டிக்கும் இந்த அம்பாள் குலதெய்வமாக இருக்கிறாள். ஒரே பீடத்தில் வலது புறத்தில் மாரியம்மனும், இடது புறத்தில் காளியம்மனும் இருக்கின்றனர்.
ஒருசமயம் மாரியம்மனை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், கோயிலிலேயே கண்ணயர்ந்தார்.அப்போது, காளியம்மன் அவரது கனவில் தோன்றி, தன்னை மாரியம்மனுக்கு அருகில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றாள். அதன்படி, காளியம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ளாள். இவர்களை அக்கா, தங்கை என இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். |