இங்குள்ள அம்மன் சுயம்புவாகத் தோன்றியிருப்பது இத்தலத்தின் தனிசிறப்பு. இவளை தாய் மூகாம்பிகையின் அம்சமாக கருதுகின்றனர். இது அம்மன் கோயிலாக இருந்தாலும், அம்மன் சன்னதிக்கு வடக்கு பக்கம் சிவனும், விஷ்ணுவும் தனித்தனி கோயில்களில் அருள்பாலிப்பது சிறப்பு.கோயிலின் இடப்புறத்தில் கரனவர் எனப்படும் நகரிகர் தலைவர்களின் பீடம் அமைந்துள்ளது.
இவர்களிடம் உத்தரவு பெற்ற பின்பே, பக்தர்கள் வழிபாட்டிற்குச் செல்லவேண்டும் என்ற விதி இங்கு உள்ளது. வடக்கு வாசலில் கூரையற்ற சந்நிதியில் பூதத்தேவர் கோயில் கொண்டிருக்கிறார். இவர் கோயிலின் பாதுகாவலராகத் திகழ்கிறார். ஞாபகசக்தியை அதிகரிப்பதற்கும், தொலைந்த பொருட்களை மீட்டுக் கொடுக்கும்படியும் இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர். இரண்டு தெப்பக்குளங்கள் இங்கு உள்ளன.
பூரத்திருவிழாவின் போது ஆறாட்டு நடைபெறும் குளம் பெரியகுளம். கோயிலின் மேற்கே அமைந்துள்ள இக்குளத்தை, நகரிகர் குடும்பத்தைச் சேர்ந்த கோட்டூரம்மா உருவாக்கினார். மற்றொரு சிறியகுளம் விஷ்ணு கோயில் அருகில் உள்ளது. |