ஈரோடு மாவட்டம் கணக்கன்பாளையத்தில் அருள்பாலிக்கும் மலையாள பகவதி அம்மன், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக இருந்து, தீராத துன்பங்களை தீர்த்து வைக்கிறாள். பக்தர்களுக்கு வேண்டிய வரம் எல்லாம் கொடுத்து வருகிறாள் பகவதித்தாய். பக்தி பரவசத்தோடும், பயபக்தியோடும் கும்பிடுவோருக்கு பாசத்தோடு அருள்புரிந்து வருகிறாள்.
காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி என தினமும் மூன்று முறை பூஜைகள் செய்யப்படுகின்றன. மாதம்தோறும் அமாவாசை அன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆடி வெள்ளிகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அலங்காரம், அபிஷேக, ஆராதனைகளும், இரவில் கோயிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. பெண்கள் 108 திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு பூஜித்து வருகின்றனர் |