குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள நெல்லிமரத்தில் தொட்டில் கட்டி வழிபடுவது சிறப்பு.இங்கு பங்குனி மாதத்தில் நடைபெறும் 15நாள் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இந்த திருவிழாவிற்கு சுற்றியுள்ள பல ஊர்களிலிருந்தும் வரும் பக்தர்கள் அம்மனை வணங்கி தங்களது வேண்டுதல்களையும், நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர்.
ஆரம்பத்தில், ஊரில் இருந்து காட்டுக்கு நடந்து வந்து, அம்மனை வணங்கியவர்கள், பிறகு, காட்டையே ஊராக்கிக் குடிபுகுந்தனர். கொன்றை மரங்கள் அடர்ந்த வனம், கொன்றையூர் என்றானது; பின்னாளில் அது, கொன்னையூர் என மருவியது |