சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக பாவிக்கப்படும் மணப்பாறை மாரியம்மன் காவிரியின் தெற்கு கரையிலும், சமயபுரம் வடகரையிலும் அமைந்திருப்பது சிறப்பு.திருமணத்தடை உள்ளவர்கள் வேப்பிலை மாரியம்மனுக்கு மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சந்நிதியின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் கட்டுகின்றனர். இதன் மூலம் திருமணத்தடை விலகுவதாக நம்பிக்கை. குழந்தைபேறுக்காக வளையல் மற்றும் வேலை வேப்பமரத்தில் கட்டுகின்றனர்.
சித்திரை திருவிழாவில் 15ம் நாள் பால்குட பவனி நடக்கிறது. பிறவிப் பெருந்துன்பம் நீங்குதல், நோயிலிருந்து விடுதலை, திருமணத் தடை விலகுதல், குழந்தை பேறு கிடைத்தல், ஏழைகளின் வாழ்க்கையை காத்தல், வணிகர்கள், விவசாயிகள் வாழ்க்கையில் கருணை காட்டுதல், கல்வியும், நீண்ட ஆயுளும், அன்பு மறவாத மனைவியும் கிடைக்க வேண்டி பால் குடம் எடுக்கப்படுகிறது. |