பரசுராமரின் அன்னை ரேணுகாதேவியின் கோயில்களில் இதுவும் ஒன்று.உலகம் தோன்றிய காலத்திலிருந்து சக்தி வழிபாடு இருந்துவருகிறது. ஆரம்பகாலத்தில் மனிதன் இலைகளால் ஆன உடையையே உடுத்தினான். அந்த பழக்கத்தின் அடிப்படையில்தானோ என்னவோ இப்போதும் கூடசக்தியின் அம்சமாக கருதப்படும் மாரியம்மன் கோயிலில் வேப்பிலை ஆடை உடுத்தி நேர்த்திக்கடன் செய்யும் வழக்கம் இருக்கிறது.
தாங்கள் வேண்டிய கோரிக்கை நிறைவேறியவுடன் இப்படி நேர்த்திக்கடன் செய்யும் பழக்கம் உள்ள திருத்தலத்தில் ஒன்று தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்கொடுங்கலூர் முத்துமாரியம்மன் கோயில். இதற்கு புராணக் கதை ஒன்று உள்ளது. |